Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் தெரிவுகளில் ஆயுதப் போராட்டமும் ஒன்றா?

பலருக்கு இதுகுறித்த பேச்சுக்களோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுவதோ அபத்தமாக நிச்சயம் தோன்றலாம். இத்தனை அழிவுகளுக்குப்பின்னரும் ஆயுதப் போராட்டம் குறித்து உன்னால் எப்படிச் சிந்திக்க முடிகிறது என்று கேட்கலாம். அப்படிக் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், பலரைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் முற்றான தோல்வியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன் பேரழிவையும் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் மக்களின் மனங்கள் இனிமேல் ஆயுதப் போராட்டம் ஒன்றுகுறித்துச் சிந்திப்பதையே உளவியல் ரீதியாக முறியடித்து, அதனை அவர்களின் மூலமாகவே இயலாத காரியம் என்று நம்பவைப்பதில் சிங்களப் பேரினவாதம் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பினை தொடர்ச்சியாக பேணுவதிலும் அதனை விஸ்த்தரிப்பதிலும் ஈடுபட்டுவரும் பேரினவாதம், தமிழ் மக்களின் மீளெழுச்சியை எப்பாடுபட்டாவது முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும் என்பதில் முழுமுச்சுடன் ஈடுபட்டிருக்கிறது. இராணுவ, பொலீஸ் உளவாளிகளாக எம்மிடையே வலம்வரும் பலர் எந்தவொரு தேசியவாதச் சிந்தனனையினையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றினை வேருடன் பிடுங்கியெறிந்துவிட  நிழலாகத்தொடர்வது  அப்பட்டமாகத் தெரிகிறது. 

இவற்றினைப் பார்க்கும்போது எமக்குள் எழும் வினாக்களில் ஒன்றுதான், தமிழர்கள் மீளெழுச்சி பெற்றுவிடக்கூடாதென்று செயற்படும் பேரினவாதம், உண்மையிலேயே அவ்வாறானதொன்று இடம்பெறப்போகிறதென்பதை எதிர்பார்க்கின்றதா என்பது தான். அதாவது 2009 இற்குப் பின்னரான பேரினவாதத்தின் முடுக்கிவிடப்பட்ட ஆக்கிரமிப்புக்களும், நில அபகரிப்புக்களும், சிங்கள பெளத்த மயமாக்கல்களும் தமிழ்மக்களை இயல்பாகவே வேறு வழியின்றி மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளிவிடத்தான் போகின்றன என்று பேரினவாதம் எதிர்பார்ப்பதாகவே படுகிறது. 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் தவிர்ந்த ஏனைய வழிகளால் இதுவரை தமிழ் மக்கள் அடைந்தவை எவை?

சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தொடர்ச்சியாக பலவேறு தலைவர்கள் துணையுடன் போராடியே வந்திருக்கிறார்கள். செல்வநாயகம் முதல் ஆயுதப் போராட்டம் தலையெடுகக்க ஆரம்பித்த காலம் வரை ஜனநாயக அரசியல் செய்த அமிர்தலிங்கம் வரை தமிழர்களது ஜனநாயகவழிப் போராட்டம் ஈற்றில் ஆயுதப் போராட்டமே சரியானது எனும் வழியில் தமிழ்  மக்களைக் கொண்டுவந்து சேர்த்திருந்தது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்கிற போர்வையில் அழித்து முடிக்க இன்று உதவிய சர்வதேசம் தமிழர்கள் ஜனநாயக ரீதியில் போராடியபோதுகூட தமிழருக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான நீதியை ஒருபோதுமே பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையே அன்று எழுந்திருக்காது. ஜனநாயக ரீதியில் போராடிய தமிழர்கள் மீது வன்முறைகளை இனவாத அரசுகள் ஏவிவிட்ட வேளை சர்வதேசத்தால் கண்டன அறிக்கைகளும், அனுதாபங்களும் மட்டுமே வெளியிடப்பட்டன. அதனைத் தாண்டி பேரினவாதத்திற்கெதிரான செயற்பாடுகளையோ அல்லது தமிழ் மக்களுக்கான நீதியையோ அவர்கள் ஒருபோதுமே முன்னெடுக்க விரும்பியதில்லை. இன்னொருவகையில் சொல்வதானால், அதற்கான தேவை அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. 

சுதந்திரம் அடைந்த காலத்தில் தமிழரை பேரினவாதிகளின் காலடியில் நிரந்தரமாக விட்டுச் சென்ற ஆங்கிலேயர்கள் இன்றுவரை தமது தவறு பற்றி உணர்ந்ததாகவோ அல்லது அதனை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளில் இறங்கியதாகவோ தெரியவில்லை. இனப்பிரச்சினை தொடர்பாக ஆங்கிலேயர் இதுவரையில் செயற்பட்ட விதம் கீனி மீனி முதல், 80 களிலிருந்து இலங்கை ராணுவத்திற்கும் அதிரடிப்படைக்கும் பயிற்சிகளும், கவச வாகனங்களும், இயந்திரத் துப்பாக்கிகளும் வழங்கி  இறுதியில் 2009 இனவழிப்புப் போரில் இலங்கையரசிற்குச் சார்பான நிலைப்பாடினை எடுத்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. 

தமிழ் மக்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தினை ஆரம்பமுதலே இடதுசாரிகளின் சோசலிச‌ப் போராட்டமாகப் பார்த்துவரும் அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் எமது போராட்டம் முற்றாக அழிக்கப்படவும், எமக்கான நீதிதேடல் என்பது தனது நலன்களுக்காக பேரம்பேசும் பொருளாகப் பாவிக்கப்படவும் இன்றுவரையும் முயன்று வருகிறது. 

எமது தந்தையர் நாடு என்று நாம் கூறிக்கொள்ள ஆசைப்படும் இந்தியாவும் தனது நலன்களுக்காகவே தமிழ் மக்களின் அவலங்களைப் பாவித்தது. ஆயுதப் போராட்டம் முற்றான வெற்றியினை அடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இலங்கையரசைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆரம்பத்தில் எம்மைப்பாவித்தே முயன்று வந்தது. ஆனால் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் நலன் சாராத ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுடன் நேரடியான மோதல் போக்கினை ஆரம்பித்த இந்தியா, 2009 இல் தானே முன்னின்று தமிழர்களின் ஒரே கவசமாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து, பேரினவாதத்திடம் நிரந்தர அடிமைகளாக எம்மை கைவிட்டது. 1987 இல் தானே முன்னின்று செய்த ஒப்பந்தத்தினை இன்றுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கையை அழுத்தம் கொடுக்க விரும்பாத இந்தியா, தமிழருக்குக் கிடைக்கக் கூடிய மிக அற்ப சலுகைகளைக்கூட எடுத்துத்தர மறுத்து வருகிறது. 

சர்வதேசத்தில் மீதமாகவிருக்கும் சீன, ரஸ்ஸிய, பாக்கிஸ்த்தானிய அரசுகளின் நிலை பற்றிக் கேட்கத் தேவையில்லை. தமிழ்ப் பயங்கரவாதத்தினை அழிக்க அவை எந்தக் கணத்திலும் பேரினவாதிகளுக்கு உதவுவதற்கு ஆயத்தமாகவே இருக்கின்றன.

இன்று தமிழர் தாயகத்தில் பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதியான நிலக்கொள்ளைகளையும், சிங்கள பெளத்த மயமாக்கலையும் சர்வதேசம் எப்படி பார்க்கின்றது? தமிழர் தாயகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுவரும் இராணுவப் பிரசன்னத்தை, இராணுவமயமாக்கலை அவை எப்படிப் பார்க்கின்றன? அல்லது, இவற்றினை அகற்றி தமிழர்களை சுதந்திரமாக வாழ வைப்பதற்காக எவ்வகையான செயற்பாடுகளில் அவை ஈடுபட்டிருக்கின்றன? அல்லது, அவ்வாறு செய்வதற்கான தேவை அவற்றுக்கு இருக்கின்றனவா? அதனால் அவற்றுக்குக் கிடைக்கவிருக்கும் நண்மைகள் என்ன? 

இவற்றுக்கெல்லாம் இருக்கும் ஒரே பதில் சர்வதேசம் என்பது தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் அவர்களின் அழிப்பிலும், அவர்கள் மீதான ஆக்கிரமிப்பிலும் பேரினவாதிகளுடன் கைகோர்த்து நின்று, ஆக்கிரமிப்பை இனவழிப்பை ஆமோதித்த சக்திகளேயன்றி வேறில்லை. தமிழ்மக்கள் தொடர்ந்தும் சர்வதேசத்திடம் கையேந்துவதும், இரைஞ்சுவதும் அவர்களை இன்னும் இன்னும் பகடைகளாக பாவிக்கப்படவே வழிவகுக்கப்போகிறது. ஆகவே , சர்வதேசம் எமக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்கிற மாயையிலிருந்து நாம் வெளிவர வேண்டும். எமக்கான விடுதலையினை நாமே உருவாக்குவதற்கான பாதையின் முதலாவது தடைக்கல்லே இந்தச் சர்வதேசத்தினை நம்பும் எமது முட்டாள்த்தனம் தான். 

  • ரஞ்சித் changed the title to தமிழர்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.