Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசி ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

24 JUL, 2023 | 08:49 PM
image
 

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்.

புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசி தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார்.

கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின்  தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார்.

ஜோர்ஜ் அழகையா ஈராக், ருவண்டா உட்பட பல நாடுகளில் பணியாற்றியிருந்தார்.

1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக விருதுகளை பெற்ற ஜோர்ஜ் அழகையா வடக்கு ஈராக்கில் குர்திஸ் மக்களிற்கு எதிரான சதாம்ஹுசைனின் இனப்படுகொலை குறித்த செய்திகளிற்காக பவ்வா விருதுகளிற்காக நியமிக்கப்பட்டார்.

https://www.virakesari.lk/article/160835

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

ஜோர்ஜ் அழகையா ஈராக், ருவண்டா உட்பட பல நாடுகளில் பணியாற்றியிருந்தார்.

இவர் ஏன் இலங்கையில் பணியாற்றவில்லை?

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் ஏன் இலங்கையில் பணியாற்றவில்லை?

அவர் ஆறு வயதிலேயே கானாவுக்குப் போய்விட்டார்.

சுனாமியின்போது தனது ஊராகிய காரைதீவு (கிழக்கு மாகாணம்) போயிருந்தார்.

 

கம்பீரமான ஊடகர். ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

அவர் ஆறு வயதிலேயே கானாவுக்குப் போய்விட்டார்.

சுனாமியின்போது தனது ஊராகிய காரைதீவு (கிழக்கு மாகாணம்) போயிருந்தார்.

 

கம்பீரமான ஊடகர். ஆழ்ந்த இரங்கல்கள்.

தகவலுக்கு நன்றி கிருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் பூர்வீக, பிரபல பிபிசி ஊடகர் ஜோர்ஜ் அழகையா மரணம்

பிரித்தானியாவின் பிபிசி ஆங்கில தொலைக்காட்சியில் மிக நீண்ட காலமாக பணியாற்றிய ஈழத்தமிழ் பூர்வீகத்தைக்(மட்டக்களப்பு) கொண்ட ஊடகரான ஜோர்ஜ் அழகையா இன்று தனது 67 வயதில் காலமாகியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளான குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று அமைதியான முறையில் மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

துணிகரமான ஊடகர்

ஈழத்தமிழ் பூர்வீக, பிரபல பிபிசி ஊடகர் ஜோர்ஜ் அழகையா மரணம் | George Alagiah Bbc News Presenter Passed Away

 

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் இலங்கையை விட்டு தனது பெற்றோருடன் வெளியேறிய தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் அழகையா கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பிரித்தானிய தொலைக்காட்சி செய்திகளில் ஒரு அங்கமாக இருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக அவர் பிபிசி செய்திகளை வழங்கிவந்த இவர் ருவாண்டா முதல் ஈராக் வரையிலான நாடுகளில் வன்முறைகள் கோலோச்சிய காலத்தில் அந்தந்த நாடுகளில் இருந்து துணிகரமான ஊடக பணியயை செய்திருந்தார். இதற்காக அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டிருந்தது.

1994 இல் ஈராக்கின் குர்துகளுக்கு எதிரான சதாம் குசைனின் இனப்படுகொலையை வெளிப்படுத்தியதில் இவரது ஊடகப்பணி முக்கியானது. 

புருண்டியில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அறிக்கை செய்ததற்காக 1994 ஆம் ஆண்டில் மன்னிப்புச் சபையால் ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் அவர் பெயரிடப்பட்டார்.

மேலும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து அறிக்கை செய்த முதலாவது பிபிசி ஊடகரும் இவர் தான். 

தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட பிரமுகர்களையும் இவர் செவ்வி கண்டிருந்தார்.

காவுகொண்ட குடல் புற்றுநோய்

ஈழத்தமிழ் பூர்வீக, பிரபல பிபிசி ஊடகர் ஜோர்ஜ் அழகையா மரணம் | George Alagiah Bbc News Presenter Passed Away

 

கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இந்த நோயுடன் போராடி இன்று அமைதியான மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

ஜோர்ஜ் அழகையாவின் மரண செய்தியைக் கேட்டு அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு வருத்தமாக உள்ளதாக பிபிசி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ் அழகையா ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை விட, அவரது இரக்கம், பச்சாதாபம் மற்றும் அற்புதமான மனிதாபிமானத்தால் அனைவராலும் நேசிக்கப்பட்டதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.

https://ibctamil.com/article/george-alagiah-bbc-news-presenter-passed-away-1690206045

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசி ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்

Published By: RAJEEBAN

24 JUL, 2023 | 09:15 PM
image
 

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்.

புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசியின் தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார்.

கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின்  தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார்.

ஜோர்ஜ் அழகையா ஈராக் ருவண்டா உட்பட பல நாடுகளில் பணியாற்றியிருந்தார்.

1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக விருதுகளை பெற்ற ஜோர்ஜ் அழகையா வடக்கு ஈராக்கில் குர்திஸ் மக்களிற்கு எதிரான சதாம் ஹுசைனின் இனப்படுகொலை குறித்த செய்திகளிற்காக பவ்வா விருதுகளிற்காக நியமிக்கப்பட்டார்.

புருண்டியின் உள்நாட்டு  யுத்தம் குறித்த செய்திகளிற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் விருதுகளை பெற்ற இவர் ருவன்டா இனப்படுகொலை குறித்து முதன்முதலில் செய்தி வெளியிட்ட பிபிசி செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜ் மக்ஸ்வெல் அழகையா கொழும்பில் பிறந்தார், அதன் பின்னர் கானாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் பிரிட்டனில் குடியேறினார்.

இலங்கையிலிருந்து வெளியேறியது மாத்திரமே இலங்கை குறித்த அவரது ஒரே சிறுவயது நினைவாக காணப்பட்டது. அவரது பெற்றோர்கள் கிறிஸ்தவ தமிழர்கள்.

அவரது தந்தை டொனால்ட் நீர் சுத்திரிகரிப்பு பொறியியலாளர் – தனது சொந்தநாட்டில் பாதுகாப்பற்று உணர்ந்ததால் உரிய கௌரவம் கிடைக்காததால் அவர் தனது குடும்பத்தை ஆபிரிக்காவிற்கு கொண்டுசெல்வதற்கு தீர்மானித்தார்.

image-364.png

கானாவில் வாழ்க்கை சிறப்பானதாக காணப்பட்டது எனினும் திடீர் சதிப்புரட்சியை தொடர்ந்து நிலைமை மாற்றமடைந்தது அதனை தொடர்ந்து டொனால்ட் தனது குடும்பத்தை பிரிட்டனிற்கு அழைத்து செல்ல தீர்மானித்தார்.

ஜோர்ஜ் குறித்த செய்தியை அறிந்து பிபிசி முழுவதிலும் உள்ள அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு துயரத்தில் சிக்குண்டுள்ளோம் என பிபிசியின் இயக்குநர் ஜெனெரல் டிம் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நாங்கள் அவரது குடும்பம் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஜோர்ஜ் எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த துணிச்சலான பத்திரிகையாளராக காணப்பட்டார். அவர் உலகம் முழுவதிலும் இருந்து அச்சமின்றி செய்திகளை வெளியிட்டார், அதேபோல பிழைகள் இன்றி செய்திகளை வழங்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160835

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.