Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அங்கொட வைத்தியசாலையில் நோயாளி மர்மமரணம் - நிர்வாகம் கடும் மௌனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 JUL, 2023 | 11:17 AM
image
 

நோயாளியொருவரின் மரணம் தொடர்பில் அங்கொட மனநோய் வைத்தியசாலை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அங்கொட மனநோய் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் இது குறித்து மௌனம் காப்பதாகவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது.

மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயது நபர் ஒருவர் ஜூலை20 ம்திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் இந்த வாரம் வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட  அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது.

நோயாளியை கட்டுப்படுத்த முயன்றவேளை அவரை தாக்கியுள்ளனர்.

பிரேதப்பரிசோதனையின் தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு பலகாயங்கள் ஏற்பட்டுள்ளமையும் அதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளமையும்  தெரியவந்துள்ளது என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியவேளை சுகாதார அமைச்சு கருத்து கூறுவதற்கு தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டி வைத்தியசாலை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என தெரிவித்துள்ள சிலோன்டுடே  உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் -உண்மையை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/161104

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கொடை மனநல வைத்தியசாலையில் நோயாளி மரணம் : வைத்தியசாலை உதவியாளர்கள் மூவர் கைது

Published By: DIGITAL DESK 3

29 JUL, 2023 | 02:39 PM
image
 

முல்லேரியா, அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை உதவியாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை வேளையில் வைத்தியசாலை உதவியாளர்கள் இருவரும், இரவு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டரெக்கப் பகுதியைச் சேரந்த 48 வயதுடைய உயிரிழந்த நோயாளி  20 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளியை கட்டுப்படுத்த முற்பட்ட போது வைத்தியசாலை உதவியாளர்களினால் நோயாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று வைத்தியசாலை உதவியாளர்கள் இன்று சனிக்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்று வைத்தியசாலை உதவியாளர்களையும் சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவசர விசாரணை நடத்தப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161199

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.