Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்

Published By: VISHNU

31 JUL, 2023 | 01:23 PM
image
 

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்  ஏற்பாட்டில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

IMG20230731103114.jpg

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்  பெற முடியாத அதிகாரப்பகிர்வை உறுதி செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டத்தின் ஓராண்டை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (31) வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.

IMG20230731103111.jpg

கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த போராட்டமானது பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (31) கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றுள்ளது இதில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG20230731102246.jpg

IMG20230731102325.jpg

https://www.virakesari.lk/article/161324

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: VISHNU

31 JUL, 2023 | 02:23 PM
image
 

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான, மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வான சமஷ்டியை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

01__6_.jpg

தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

01__7_.jpg

யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக திங்கட்கிழமை (31) காலை கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

01__4_.jpg

இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.

01__5_.jpg

01__2_.jpg

01__3_.jpg

https://www.virakesari.lk/article/161333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: VISHNU

31 JUL, 2023 | 04:06 PM
image
 

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை நினைவு கூரும் வகையில் திங்கட்கிழமை (31) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 

WhatsApp_Image_2023-07-31_at_12.27.55_PM

WhatsApp_Image_2023-07-31_at_12.13.40_PM

மக்களின் குரலாக தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி வடகிழக்கு மக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டு இருப்போம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

WhatsApp_Image_2023-07-31_at_12.27.56_PM

 

இதன்போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

 

WhatsApp_Image_2023-07-31_at_12.27.56_PM

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கடந்த ஒரு வருட நிறைவை நினைவு கூருகின்றோம்.

 

WhatsApp_Image_2023-07-31_at_12.27.55_PM

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் நாளை 1 ஆம் திகதியுடன் (1-08-2023) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

WhatsApp_Image_2023-07-31_at_12.13.40_PM

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி 100 நாள் செயலமர்வை நடத்தி இருந்தோம்.

WhatsApp_Image_2023-07-31_at_12.27.50_PM

அதன் விளைவாக மக்கள்,பல்வேறு குழுக்கள்,சிவில் சமூகம் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடி நாங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றோம், பல்வேறு நாடுகளுக்கும் அறிக்கையை சமர்பிக்கின்றோம்.

DSC_1117.JPG

மக்களுடைய தேவை பாட்டிற்குள் இந்த நாட்டில் சமஸ்டி முறையிலான மீள பெற முடியாத ஒரு தீர்வை அதுவும் சர்வதேச நாடுகள், அமெரிக்கா, கனடா,அவுஸ்திரேலியா,இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய விடையங்களை கலந்து ஆலோசித்து அதற்குள் உகந்ததை இலங்கைக்குள் இங்கு வாழ்கின்ற தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையாக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வட கிழக்கில் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தி அதிகார பகிர்வுக்கான மக்கள் குரல் செயலமர்வின் ஒரு வருட நிறைவை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.

மக்களின் குரலாக தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி வடகிழக்கு மக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டு இருப்போம்.

இவ்விடயத்தில் அரசும் சர்வதேசமும் தொடர்ந்து கண்ணோக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

https://www.virakesari.lk/article/161340

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.