Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மின்வெட்டு தவிர்க்க முடியாது - மின்சார சபை எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விடுத்தால் தென் மாகாணத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மின் உற்பத்தி நிலையங்கள்

இலங்கையில் மின்வெட்டு தவிர்க்க முடியாது - மின்சார சபை எச்சரிக்கை | Sri Lanka Power Cut Again

தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.

எரிபொருளின் மூலம் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதால், இந்த ஆண்டு இலங்கை மின்சார சபைக்கு இழப்பு 500 கோடி ரூபாயை தாண்டும் என்றும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக தற்போது நிலவும் வறட்சி காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

https://tamilwin.com/article/sri-lanka-power-cut-again-1690938998

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/267140

  • கருத்துக்கள உறவுகள்

நீர்க்கட்டணம் ,  மின் கட்டணம் , அடுத்தது  Gas சிலிண்டர் பெற்றோல் இப்படி மீண்டும் வரிசையில் நிற்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்மாகாணத்தில் 3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் - மின்சாரத்துறை அமைச்சர்

08 AUG, 2023 | 10:00 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சமனல அணையில் இருந்து  விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி சமனல அணையின் நீர்மின்னுற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். 

விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதற்கும், தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் அச்சமில்லாமல் தீர்மானம் எடுப்போம். மாற்றுத்திட்டமாக மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் தென்மாகாணத்தில்  3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது எதிரணியின் சுயாதீன உறுப்பினர் வாசுதேவ முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சமனல அணையில் இருந்து வளவ தொகுதிக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீர்மின்னுற்பத்திக்காக மாத்திரமே சமனல அணையில் நீர் சேமிக்கப்படுகிறது. உடவளவ விவசாய நடவடிக்கைகளுக்கும், நீர்பாசன தேவைகளுக்கும் நீரை விடுவிக்குமாறு எந்த ஒப்பந்தமும், இணக்கப்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு நீர்பாசன திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கோரிக்கை முன்வைத்தது. இதற்கமைய நீர் முகாமைத்துவ திணைக்களத்துடன் கலந்துரையாடி சமனல அணையில் இருந்து 0.5 என்ற கொள்ளளவுக்கு அமைய நீர் விடுவிக்கப்பட்டது . 

நீர் விடுவிப்பு கொள்ளளவை அதிகரிக்குமாறு நீர்பாசனத்துறை திணைக்களம் கடந்த ஜூலை மாதம் மின்சார சபையின் பொதுமுகாமையாளரிடம் வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய கடந்த மாதம் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் எம்.சி.2 கொள்ளளவுக்கு அமைய நீர் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீர் விடுவிப்பு விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீர்பாசனத்துறை திணைக்களம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நீர் விடுவிக்கப்பட்டது. வறட்சியான காலநிலை, நீர் மின்னுற்பத்தி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் நீர் விடுவிக்கப்படவில்லை.

நீர் விடுவிப்பு முடக்கப்பட்டமை தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சின் மீது ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நீர் முகாமைத்துவ திணைக்களம், ஏனைய நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட்டது. நீர்பாசனத்துறை திணைக்களம் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கோரிக்கை முன்வைத்திருந்தால் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றிருக்காது.

இந்த ஆண்டு 5000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்காத காரணத்தால் 3750 மெகாவாட் மின்சாரத்தை கூட உற்பத்தி செய்வது நிச்சயமற்றதாக உள்ளது. உடவளவ விவசாய பகுதிகளுக்கு தேவையான நீரை விடுவிக்க வேண்டுமாயின் மாற்று வழிமுறைக்கு செல்ல வேண்டும் என அமைச்சரவையில் குறிப்பிடப்பட்டது.

சமனல அணையில் இருந்து உடவளவ விவசாய பகுதிகளுக்கு நீரை தடையின்றி விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் சமனல அணையின் ஊடான நீர்மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். இவ்வாறான நிலையில் அவசர நிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும். தற்போது மின்சாரத்தை துண்டிப்பது சாத்தியமற்றது.

மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அச்சமடைய போவதில்லை. தடையின்றி வகையில் மின்சாரத்தை விநியோகிப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை பாதுகாப்போம். விவசாயத்துக்கு தேவையான நீரை விநியோகிப்பதற்கும், மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் தேவையான தீர்மானங்களை அச்சமில்லாமல் எடுப்போம். கொள்கை ரீதியில் தீர்மானம் எடுப்பதற்கு அச்சமடைய போவதில்லை. தேர்தலை இலக்காக கொண்டு நாங்கள் செயற்படவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/161889

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்வெட்டை அமுல்படுத்தும் செய்தி குறித்து மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Published By: VISHNU

09 AUG, 2023 | 12:01 PM
image
 

நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களால் நீர் மின் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளைக் கருத்திற்கொண்டு அடுத்த இரண்டு வருடங்களில், நாடு பூராகவும் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குத் தேவையான மின் உற்பத்திக்கான மாற்று வழிமுறைகளைக் கையாள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

நீர்ப்பாசன திணைக்களத்துடன் கலந்துரையாடி நாம் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதன்படி, நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதுடன், வழங்க இயலுமான கொள்ளளவு நீரை,  சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து விநியோகிக்கவும், அவ்வாறு விநயோகிக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தியை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்த வகையில், இன்று காலை முதல் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதுடன் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் உயர் கொள்ளளவுக்கு ஏற்ப, தொடர்ந்து வரும் நாட்களில் நீர் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மேலதிக நீரை விநியோகிப்பதன் மூலம் மின் உற்பத்தி பாதிக்கப்படுமாயின், தென் மாகாணத்தில் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், காலி மாவட்டத்தில் பகுதியளவிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் தேவையான மின்சாரத்தை கொள்வனவு செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஏற்கனவே முறையாக நீர் விநியோகத்தை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்படாது என்று அரசாங்கம் தொடர்பில் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்ப ஒரு சிலர் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மின்சக்தி, வலுசக்தி அமைச்சு என்ற வகையில் மின் உற்பத்திக்காக சமனலவெவ நீர்த்தேக்கம் மாத்திரே நேரடியாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாகவும், ஏனைய அனைத்து நீர்த்தேக்கங்களும் நீர்ப்பாசன அமைச்சின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுக்கு ஏற்ப நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நீர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரையின் படி, மின் உற்பத்திக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுமாயின், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் கைத்தொழில்கள் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதுடன், குறிப்பாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுவது மாத்திரமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் மின்சாரத்திற்குப் பதிலாக மாற்று வழிமுறையாக, எரிபொருள்களில் இயங்கும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த ஆரம்பிப்பார்களாயின், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதுடன், மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அச்சம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, ஒரு நெருக்கடியில் இருந்து இன்னும் பல நெருக்கடிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முதல் நெருக்கடிக்குத் தீர்வாக இயலுமான கொள்ளளவு நீரைவிடுவிக்கவும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நெருக்கடிகள் ஏற்படாது, தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த அவசியமான மாற்று வழிகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், எமது நாட்டில் மின் உற்பத்திக்கு மாற்று வழிமுறையாக காற்று விசை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது அவற்றுக்கு பாரிய எதிர்ப்புகள் எழுவதாகவும், குறிப்பாக அண்மையில் மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிட்ட காற்றாலை நிர்மாணப்பணிகளுக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஒரு சில குழுக்களே தமது அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறு மக்களைத் தூண்டிவிடுவதாகவும் இத்திட்டங்கள் குறித்து மக்கள் முழுமையான தெளிவு இல்லாமலே இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு ஆளாவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, இருக்கும் நீர் கொள்ளளவைக் கருத்தில் கொண்டு நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளத் தேவையான பணிகளை அரசாங்கம்  முன்னெடுத்துள்ளதோடு, மின் வெட்டு தொடர்பில்  அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும்  எடுக்கவில்லை என்றும்,  இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/161944

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர் மின் உற்பத்தி 15% ஆக குறைந்தது -மின்சார சபை

Maskeliya-Canyon-Hydro-Power-Plant-750x375-1.jpg

தற்போது 15 வீதமான மின்சாரத் தேவை நீர் மின் நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் சராசரி நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவில் 23 சதவீதமாக உள்ளது என சபை குறிப்பிட்டுள்ளது.

ரன்தெனிகல அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவில் 8.1 வீதமாக குறைந்துள்ளதுடன் விக்டோரியா அணையின் நீர்மட்டம் 27 வீதமாக உள்ளது.

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவில் 1.9 வீதமாக குறைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதால், தற்போது நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் 80 சதவீத மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இதேவேளை, சில நிபந்தனைகளின் கீழ் குறுகிய கால அடிப்படையில் 100 மெகாவொட் மின்சார உற்பத்தித் திறனை ஆறு மாதங்களுக்கு கொள்வனவு செய்வதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை பெற்றுள்ளது.

https://thinakkural.lk/article/269219

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர் மின் உற்பத்தி 14% ஆக அதிகரிப்பு

நாட்டில் நீர் மின் உற்பத்தி 14% ஆக உயர்ந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்த போதிலும், நீர் மின் நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

வரண்ட காலநிலையால் நீர்மின் உற்பத்தி சமீபத்திய நாட்களில் 11-12% ஆக இருந்தது.

சமனல வெவ நீர்த்தேக்கத்தின் நீர் கசிவை நிவர்த்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பொறியியலாளர்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமனல வெவ நீர்த்தேக்கத்தில் நீர் கசிவு புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/271663

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.