Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை கட்டுமானத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 AUG, 2023 | 04:43 PM
image
 

கிளிநொச்சி - பூநகரி பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் இன்று (03) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மக்கள் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் தொழிற்சாலைக்கான கல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான முதற்கட்ட தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.  

'விவசாய நிலங்களை அழிக்காதே', 'ஏழை மக்களின் வளங்களை சுரண்டி பிழைக்காதே', 'சுன்னக்கல் அகழ்வு வேண்டாம்', 'சீமெந்து கம்பனியே வெளியேறு' போன்ற வாசகங்களை பதாதைகளில் குறிப்பிட்டுள்ள நிலையில், அவற்றை ஏந்தியவாறும் அவ்வாறே கோஷங்களை எழுப்பியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

Screenshot_20230803_121819_WhatsApp__1_.

Screenshot_20230803_121845_WhatsApp.jpg

Screenshot_20230803_122122_WhatsApp.jpg

https://www.virakesari.lk/article/161550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம்

பொன்னாவெளி கிராமத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள்  போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில்  சீமெந்து நிறுவனமொன்று சீமெந்து தொழிற்சாலையொன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக அந்நிறுவனத்தினர் அப்பகுதியில் ஒரு ஏக்கர் காணியை முதல் கட்டமாக பெற்று ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலையால் தமது வளம் சுரண்டப்படுவதாகவும், எதிர்காலத்தில் நிலங்கள் உவராக மாறும் நிலையுள்ளதாகவும், சுவாசம் சார்ந்த பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவித்து கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராமங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் பொன்னாவெளி பொதுநோக்கு மண்டபத்திலிருந்து ஆரம்பித்து குறித்த நிறுவனம் ஆய்வுப்பணியை முன்னெடுத்து வரும் இடம் வரை பேரணியாக சென்றது. ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்படும்  இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம்

IMG-20230803-WA0019-600x337.jpg

https://thinakkural.lk/article/266660

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.