Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மண் தந்த கலாசார அதிர்வுகள்

Featured Replies

ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால் வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார நம்பிக்கை இருந்தும், galley', 'form wise', 'slug', 'caption', 'format' என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள் தடுமாறினேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப் படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும்.

வீட்டிற்காக, சென்னை முழுவதும் அலைந்து, பெசன்ட் நகரில், அமைதியான கலா«க்ஷத்ரா காலனியில், ஏகாந்தமாக இருந்த ஒரு இரண்டாவது மாடி வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். என் ஒண்டி ஆளுக்கு, எதற்கு அத்தனை பெரிய வீடு என்று வீட்டைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். வீட்டையட்டி முகப்பில், வீட்டை விடப் பெரிய டெரெஸ் இருந்தது. பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்து, யார் வேண்டுமானாலும் குதித்து வரலாம் என்று, எனது அலுவலக நண்பர் எச்சரித்தார். ‘‘இந்த வீட்டில் தனியாக இருக்க பயமாக இல்லையா’’ என்று நிறைய பேர் கேட்டார்கள். நிச்சயமாக இருக்கவில்லை. உண்மையில் அத்தனை ஆண்டுகள், கணவன், குழந்தைகள் என்று மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, அவர்களது தேவை பற்றின சிந்தனைகளின் ஆக்கிரமிப்பிலேயே வாழ்ந்தவளுக்குத் தனியாக வாழ்வது, மிக உற்சாகமாக இருந்தது. திடீரென்று தளைகள் விடுபட்டு, அகண்ட பிரபஞ்சத்தை எனதாக்கிக் கொண்டது போல மனசு விரிந்தது; கணவரின் யோசனை இல்லாமல், பிள்ளைகளின் கவலையில்லாமல், எத்தகைய சுதந்திரம் அது! என் இஷ்டம்போல் வீட்டை வைத்துக்கொள்ள முடிந்தது; அத்தனை வேலைக்கு நடுவிலும் மொட்டை மாடியில் பிரமாண்ட தோட்டம் போட முடிந்தது; புத்தகம் படிக்க முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. மூன்று படுக்கை அறைகள் கொண்ட, நல்ல வெளிச்சமுள்ள விசாலமான வீடு. நடுநிசியில் வீடு திரும்பும் போது, அது எனக்குத் தனிமை உணர்வைத் தரவில்லை. மனதளவில் எனக்குத் தேவைப்பட்ட வெளியின் அடையாளமாக, அதன் விசாலம் என்னைக் கவர்ந்தது.

ஆனால் எனக்குத் தனிமை உணர்வை ஏற்படுத்திய விஷயங்கள் வேறு. விரைவிலேயே, சென்னைவாசிகள், அத்தனை சுலபமாக புதிதாக வருபவரிடம் சிநேகிதம் காட்டமாட்டார்கள் என்று எனக்குப் பட்டது. சென்னைக்கு வந்ததும், ஒரு மாருதி 800 வாங்கி நானே ஓட்டிக்கொண்டிருந்தேன். தனியாக வசிக்கும், நட்ட நடுநிசியில் காரை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் ஒரு பெண்மணியை, எங்கள் கட்டடத்தில் இருந்த குடித்தனக்காரர்கள் அதுவரை கண்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். என்னைப்பற்றின, என்ன கற்பனைகள் அவர்களுக்கு இருந்தன என்று, எனக்குத் தெரியாது. எட்டரை மணி அளவில், இரவு வீடு திரும்பும் நாட்களில், அவர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்துப், பிறகு தங்களை மறைத்துக் கொள்வார்கள். நான் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டும், யாருமே, ‘‘தனியாக இருக்கிறீர்களே, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா’’ என்று கேட்கவில்லை. மாறாக என்னை சந்தேகக் கண்ணுடனேயே பார்த்ததாகத் தோன்றிற்று. ‘‘எலக்ட்ரிஷன் யாரையாவது தெரியுமா’’ என்று கேட்டால்கூட, 15 வருஷங்களாக அங்கிருந்தவர்கள், ‘‘தெரியாது’’ என்பார்கள்.

இது தில்லி அனுபவத்துக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அதிர்ச்சி அளித்தது. நான், என் கணவருடன் இருந்திருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். தனியாக ஒரு பெண் வாழ்வது, அவர்களால் ஜீரணிக்கமுடியாத ஒன்று என்று எனக்குப் புரிந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து, என்னுடைய தாய் என்னுடன் வசிக்க வந்த பிறகுதான், ஒரு சராசரி பெண்ணாக என்னை அவர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.

* * *

தொழில்ரீதியில் நேரிடையான தாக்குதல்கள், வேலையில் சேர்ந்த உடனேயே ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில், ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு, அதிகபட்சம் ஆங்கில இதழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டகட்டுரைக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.