Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர்

Published By: VISHNU

28 AUG, 2023 | 07:42 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பு நாடாகிய இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ள நாடு என்றவகையில் இலங்கை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்வதென்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாக ராஜபக்ஷ் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக  இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள வழிமுறைகள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவருதல், ஊழல் எதிர்ப்பு சட்டம். மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்டு செல்லும் நல்லிணக்க செயல்முறை தொடர்பாக ,இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி, கொவிட்19 தொற்று மற்றும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ்  ஒரு வருட காலத்துக்குள் இயல்பு நிலைக்கு  வருவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தி இருந்தார்.

பயங்கரவார தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவர இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கலந்துரையாடியதுடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்துகொண்டு தயாரிக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமைச்சரவை அனுமதித்துள்ளதுடன் அதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடையாக  இருந்து வரும் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காக ஊழல் எதிர்ப்பு சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை பெற்றுக்கொண்டதாகவும அமைச்சர் தெரிவித்திருந்தார்.

சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களுக்குள் 30க்கும் மேற்பட்ட புதிய சட்ட மறுசீரமைப்புகளை அனுமதித்துக்கொண்டதாகவும் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட சட்டம் அதில் முக்கியமானதாகும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளை மதிப்பதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

யுத்தத்துக்கு பின்னர் இனங்களுக்கிடையில் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை முறைகள் தொடர்பாக வதிவிட ஒருங்கிணைப்பாளர், தன்போது கேட்டறிந்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அமைக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தேசிய ஐக்கியம் மற்றும்  நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான காரியாலய நடவடிக்கையை பலப்படுத்துவதற்காக புதிய சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் தேசிய ஐக்கியம்  மத நல்லிணகத்தை மேம்படுத்த முடியுமாகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.