Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை – பேராயர் மல்கம் ரஞ்சித்

அரசியல் செல்வாக்கு இல்லாமல் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் போதும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் பேராயர் மல்கம்  ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அம்பிலிப்பிட்டி புனித மிக்கேல் தேவாலயத்தில் பொன்விழா கொண்டாட்டம் அருட்தந்தை தலைமையில் இடம்பெற்றது.

அங்கு பேசிய பேராயர் ;-
“தலைவர்கள் விசாரணைக்கு தலைமை தாங்கினால், அவர்கள் நேர்மையாக செயல்பட்டால், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எவரையும் பாதுகாக்காமல், உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டால், எங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை. இதையெல்லாம் வெளிப்படையான முறைகள் மூலம் செய்யுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

https://thinakkural.lk/article/274369

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பராபரப்புக்காக, தான் இதில் சம்பந்தப்படவில்லை என நிறுவுவதற்காக, தன்னை ஓரு  நீதிமானாக நிலைநிறுத்தி பிரபல்யம் அடைவதற்காக, சர்வதேச விசாரணையை கோரிய கர்தினால்,வழமை போலவே அந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று நினைத்தே வைத்திருப்பார். ஆனால் அது உள் நாட்டிலும் சர்வதேசத்திலும் வலுப்பெற்று நடவடிக்கையில் வருமென நினைத்திருக்கவில்லை. இப்போ சிங்களம் மாட்டிவிடும் அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைப்பதை அவர் விரும்பவில்லை. கோரிக்கை வைத்தவரே அது வேண்டாம் என அறிக்கை விடுவார். நாமல், கோத்தா கூட அந்த கனவிலேயே விசாரணைக்கு தயார் என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இதுதான் சிங்களம்! அக்கினி சொன்னமாதிரி, "இப்படிக்க என்றால் அப்படிக்க என்பார்கள் ............... என்பார்கள்."

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை - எஸ்.பி. திஸாநாயக்க

26 SEP, 2023 | 07:50 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சனல்4 அலைவரிசை எந்த விசாரணையும் இல்லாமலே இந்த தாக்குதல் சம்பவத்தை கோத்தாபய ராஜபக்ஷ மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சனல்4 செய்திச்சேவை  வெளியிட்ட ஆவணப்பட தொகுப்பில் எந்த விசாரணையும் இல்லாமல் ,ஆராய்ந்து பார்க்காமல் ஈஸ்டர் தாக்குதல் தொடரபான குற்றச்சாட்டை கோத்தாபய ராஜபக்ஷ் மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக பல விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச விசாரணைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன் பிரகாரம் இந்த தாக்குதல் தொடர்பில் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.

அத்துடன் ஈஸ்டர தாக்குதல் இஸ்லாமிய ராஜ்ஜியம் அமைக்கும் சிந்தனைகொண்ட குழுவினாலே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. 

இதில் சஹ்ரான் ஹசீமின் தேசிய தெளஹீத் ஜமாத் இணைந்துகொண்டிருந்தது. சஹ்ரானுக்கு வழிகாட்டியது தற்போது சிறையில் இருக்கும் நவ்பர் மெளலவி என்ற நபராகும். இந்நிலையிலேயே 2014இல் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் உலக முஸ்லிம் ராஜ்ஜியம் என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.

எமது நாட்டில் இந்த தாக்குதல் 2019இல் இடம்பெறுவதற்கு முன்னர் 11 சம்பவங்கள் இடம்பெற்றன. நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சம்பவங்கள் இடமப்பெற்றுக்கொண்டிருக்கையில் இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் தொடர்புகொண்டு ஐ.எஸ். தொடர்பாக பல தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

இந்த தகவல்கள் மூலமே தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்தியா எமது பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கி இருந்தது. 

ஆனால் எமது பாதுகாப்பு சபையில் இருந்த குழப்ப நிலை காரணமாக இந்த இரகசிய தகவலை சரியான முறையில் ஆராயாமல் இருந்ததன் பலனாகவே இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போயிருக்கிறது.

அதனால் ஈஸ்டர் தாக்குதலுக்கும் கோத்தாய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வழக்கியும் எமக்கு அதனை தடுக்க முடியாமல் போயிருக்கிறது.

அத்துடன் அபூஹிந் என்பது இந்திய புலனாய்வு பிரிவு சஹ்ரான் மற்றும் சிலருடன் கலந்துரையாட பயன்படுத்திய சொல். அதேபோன்றே சொனிக் சொனிக் வார்தையும். 

எனவே இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த அனைவரும் பொறுப்பு கூறவேண்டும். நானும் அந்த அரசாங்கத்தில் இருந்தவன். என்றாலும் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/165513

  • கருத்துக்கள உறவுகள்

உங்ககளுடன் இருந்த ஒருவரே தகவல் வழங்கியுள்ளார். உங்கள் மேல் தவறில்லையென்றால்; ஏன் விசாரணை அறிக்கையை இதுவரை மறைத்தீர்கள்? சர்வதேச விசாரணையை மறுக்கிறீர்கள்? "முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழைய பயமாம்."

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை - ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார

Published By: DIGITAL DESK 3

26 SEP, 2023 | 07:44 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணையை மேற்கொள்ள உள்நாட்டில் சிறந்த விசாரணை அதிகாரிகள் இருக்கும்போது அதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல தேவையில்லை. 

குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சர்வதேசத்துக்கு வழங்கவேணடும் என எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். 

குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது எமது அரசாங்கத்திலாகும். அதனால் இந்த தாக்குதல் தொடர்பான பின்னணியை அறிந்துகொள்ளும் தேவை எமக்கு இருக்கிறது. 

என்றாலும் இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு விசாரணைகள் இடம்பெற்றிக்கின்றன.  ஹுதலாகம் குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குவின் விசாரணை அறிக்கை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் எமது நாட்டில் திறமையான விசாரணையாளர்கள் இருக்கும்போது நாங்கள் ஏன் இதனை சர்வதேச விசாரணைக்கு வழங்க வேண்டும். 

எமது நாட்டில் முறையாக விசாரணை இடம்பெறவில்லை என்றால், எமது நாட்டு விசாரணை அறிக்கையை சர்வதேசம் மறுத்திருந்தால்  அப்போது எங்களுக்கு இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு செல்வது குறித்து ஆராயலாம்.

அத்துடன், பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் நம்பத்தகுந்த உள்நாட்டு விசாரணை இடம்பெறுமாக இருந்தால் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியப்படாது என தெரிவித்திருக்கிறார். 

அதனால் ஏற்கனவே இரண்டு விசாரணைகள் இடம்பெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3 பேர் கொண்டு விசாரணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறார். அதேபோன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருக்கிறார். 

எனவே, இந்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் இருக்கும் தாமதமே உள்நாட்டு விசாரணையின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் எழுவதற்கு காரணமாகும். அதனால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொண்டு சூத்திரதாரிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/165502

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணையை மேற்கொள்ள உள்நாட்டில் சிறந்த விசாரணை அதிகாரிகள் இருக்கும்போது அதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல தேவையில்லை. 

சிறந்த விசாரணை அதிகாரிகள் இருந்திருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பேயில்லை, இத்தனை ஆண்டுகள் கர்தினால் விசாரணை அறிக்கையை கேட்டு மல்லுக்கட்டி சர்வதேச விசாரணைக்கு சென்றிருக்க வேண்டியிருந்திருக்காது, சணல் நான்கு வெளியிடும்வரை உங்கள் பதிலும் வந்திருக்காது. நடந்து முடிந்தவை உங்களது விசாரணைக்கு நல்ல சான்றுகள். உங்கள் விசாரணை நம்பகத்தன்மை வாய்ந்ததென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும்? உண்மையைத்தானே அவர்களும் வெளிக்கொண்டு வருவார்கள். குற்றவாளிகளை தண்டிக்க நீங்கள் ஏன் பதறவேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: ஸ்கொட்லாந்து யார்ட் உதவி இன்னும் கோரப்படவில்லையா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் கூறியிருந்த நிலையில், பிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் தாம் அறிந்த வரையில் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளன.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இவ்வாறான தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்யவும், குண்டுவெடிப்புகளில் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியவும் ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் பல சக்திகள் இருப்பதாக கூறப்படும் அறிக்கைகளை மீளாய்வு செய்து இறுதி முடிவுக்கு வருமாறு ஸ்கொட்லாந்து யார்டிடம் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் கொழும்பிற்கு விஜயம் செய்த USAID நிர்வாகி சமந்தா பவரை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மூன்று ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்களை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. 267 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 பேர் காயமடைந்தனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட 8 தற்கொலைப் படை தீவிரவாதிகளும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். சந்தேகநபர்களுக்கு எதிராக 23,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, மேலும் 1,215 சாட்சிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர்.

டெய்லி மிரர்

https://thinakkural.lk/article/275149

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.