Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்ஷர்கள் மக்களாணையை வென்று விட்டார்கள் : தேர்தல் வெற்றிக்காக குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள அவசியமில்லை - மஹிந்தானந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

05 SEP, 2023 | 06:23 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அன்ஷிப் அசாத் மௌலானா 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6000 ரூபா மாத சம்பளம் பெற்றவர். ஆனால் தற்போது அவர் பல மில்லியனுக்கு சொந்தகாரராக உள்ளார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷர்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் -04  ஊடகம் 15 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பின்னணியில் தான் சனல் -04 இவ்வாறான காணொளிகளை வெளியிடுகிறது.

வெள்ளைக் கொடி ஏந்தி வந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குறிப்பிட்ட செனல் -04 தான் தற்போது ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து  செய்திகளை வெளியிட்டுள்ளது.

சனல் -04 விற்கு முறைப்பாடு அல்லது தகவல்களை வழங்கியுள்ள அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர்  பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடாக  ஊடக செயலாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நபர் சுவிஸ்லாந்து நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளார்.

அன்ஷிப் அசாத் மௌலானா என்ற இந்த நபரின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 700 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் தெஹிவளையில் உள்ள வீட்டை 500 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார். இந்தளவு செல்வந்தரான இந்த நபர் 2017 ஆம் ஆண்டு  முதலாவதாக   பணியில் இருந்த போது 6000 ரூபா மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மாதம் 6000 ரூபா சம்பளம் பெற்ற நபரின் வங்கி வைப்பில் 700 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. மறுபுறம் 500 மில்லியன் ரூபாவுக்கு வீட்டை விற்றுள்ளார்.

இவர் தான் தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்க ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக  குறிப்பிடுகிறார். இவருக்கு எதிராக பொலிஸில் நிதி மோசடி உள்ளிட்ட பல முறைப்பாடுகள் உள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் முறையற்றது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மக்களாணையை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், புலனாய்வு பிரிவினர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. மக்களாணையை வெல்ல குண்டுத்தாக்குதலை நடத்த வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை.

செனல்- 4 குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை தோற்றுவிக்க 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுத்தாரிகளாக மாறுவார்களா?

கோட்டபய ராஜபக்ஷ  இரண்டு வருடகாலம் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பல்வேறு காரணிகளால் அவர் பதவி விலகினார். கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலக்க செயற்பட்டவர்கள் தாம் இறக்கும் தருணத்தில் அதற்காக வேதனையடைவார்கள். நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களில் ஊழலற்ற அரச தலைவராகவே  கோட்டபாய ராஜபக்ஷ செயற்பட்டார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அடிப்படைவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவரை பதவி விலக்கினார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/163891

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அத்துடன் அவர் தெஹிவளையில் உள்ள வீட்டை 500 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார். இந்தளவு செல்வந்தரான இந்த நபர் 2017 ஆம் ஆண்டு  முதலாவதாக   பணியில் இருந்த போது 6000 ரூபா மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அசாத் மௌலானா மேல் இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் இருந்தும், அவர்  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி வாக்குமூலம் அளிக்கும்வரை,  எதிராக குற்றச்சாட்டுக்களை வைக்கும்வரை ஏன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை   எடுக்கவில்லை? அவருக்கு அந்தப்பணம் எங்கிருந்து வந்தது என்று ஆராயவேண்டியது வெளிப்படுத்தவேண்டியது யாரின் கடமை? இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, சர்வதேசப் பொலிஸாரின் உதவியுடன் அவரை விசாரித்து எத்தனை தமிழரை கைது செய்து பணயமாக பெற்ற பணம் அது என்கிற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் அறிய ஆவலாயுள்ளோம். அவ ர் செய்த பணி என்ன என்பதையும் வெளிப்படுத்துங்கள்.  அதுமட்டுமல்ல, கோத்தபாயவின் படுக்கையறையில் இவ்வளவு பணம் எங்கிருந்து, ஏன் வந்தது என்பதையும் வெளிப்படுத்தவேண்டும். வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தின் விபரங்களு ம் வெளிப்படுத்த வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இவ்வளவு தொகை ஏன் அசாத் மௌலானாக்கு வைப்பிலிட வேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? உங்கள் தவறுகளை மற்றவர் மேல் சுமத்தி தப்பும் தந்திரத்தை கைவிடுங்கள். உலகம் உங்களை பார்த்து நகையாடுகிறது.

8 hours ago, ஏராளன் said:

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷர்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள்.

அப்போ... தேர்தலை நடத்தி ஏன் நாட்டுப்பணத்தை, நேரத்தை வீணடித்தீர்கள்? அது ஏன் இந்தக்குடும்பம் பதவியை இழந்தபின், தேர்தல் காலங்களில் வன்முறைகள் இன மத முரண்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன?

8 hours ago, ஏராளன் said:

கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலக்க செயற்பட்டவர்கள் தாம் இறக்கும் தருணத்தில் அதற்காக வேதனையடைவார்கள்.

கோத்தபாய தான் பதவியேற, அப்பாவிகளின் உயிரை பறித்தாரே, அவர் இறக்கும் தருணத்தில் என்ன நன்மையடைவார் என்பதையும், இனக்கலவரங்களை நடத்தி அநிஞாயப் போரிலே மக்களை கொன்றவர்கள் இறக்கும் தருவாயில் என்ன அடைவார்கள் என்பதையும் அறியதந்தால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? அப்ப ஏன் அந்த மக்களே விரட்டியடித்தார்கள். நீங்களும் அவர்களது அழுக்கு துணியை கழுவினவர்களதானே. எனவே அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது. நல்லாத்தான் வக்காலத்து வாங்குகிறீர்கள். உங்களுக்கு உண்மை தெரியாவிடடாலும், இல்லை தெரியாதது போல நடித்தாலும் உண்மையாய் மறைக்க முடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.