Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

றோவின் கண்களில் மணல் தூவி 64 பக்க அறிக்கையுடன் ஐ.நாவில் சரணடைந்த அசாத் மௌலானா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி எனவும், 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ. நாவிடம் அவர் வழங்கியுள்ளார் எனவும் புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்கள் குறித்து லங்காசிறியின் uudaruppu நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

''அசாத் மௌலானா இலங்கையில் இருந்து தப்பி செல்லுகையில் இந்தியாவினூடாகவே சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவிலும் அவரை கொலை செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் அவரது இருப்பிடம் சரியாக தெரியவராததன் காரணத்தினால் மௌலானாவை கொலை செய்வதற்கான திட்டமிடல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

குறிப்பாக அவர் இலங்கையில் இருந்திருந்தால் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு.'' என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அசாத் மௌலானாவின் தொடர்புகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவுகளும் இலங்கை அரசியலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...

https://tamilwin.com/article/easter-blast-indian-raw-probe-mowlana-1694254162?itm_source=parsely-detail

 

  • கருத்துக்கள உறவுகள்

 அசாத் மௌலானா பாதுகாப்பான இடத்தில இருந்து வாக்குமூலம் அளிக்கிறார், இருந்தாலும் அவரது பேச்சில் ஏன் இந்தளவு பதட்டம், அவசரம்? அவரது உடல்மொழி அவர் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே. சந்தரகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் ஆன இவர் தனது காரியங்களை நிறைவேற்ற சந்திரகாந்தனையும் இவரை சந்திரகாந்தனும் இவர்களை சிங்களமும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ. எஸ்.அமைப்பை இந்தமௌலானாவே சந்திரகாந்தனோடு சேர்ந்து கையாண்டிருக்கலாம். சந்திரகாந்தன் மூளையாகவும் மௌலானா செயற்பாட்டாளராகவும் இந்த குண்டுத்தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் அரசியலில் முறையற்ற வகையில் பணம் சேகரிப்போர் பாதுகாப்பிற்காக தமது தூரத்து உறவுகள், நண்பர்கள், உத்தியோக உதவியாளர்கள், கார்சாரதிகள் போன்றோரின் வங்கி வைப்புகளில் வைப்பதுண்டு. இவ்வாறு வைப்பிலிட்டவர்கள் அகால மரணமெய்தினால், சம்பந்தப்பட்டவரின் உறவுகள் அந்த  பணத்தை மீளப்பெற கேட்கும்போது, சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது பணத்தை பெற்றுவிட்டார் என்று கூறி வைப்புச்செய்த பணத்தை தாம்  சுருட்டுவதும். இல்லை, சம்பந்தப்பட்டவரே கேட்கும்போது அப்படி ஏதும் பணம் அவர் பெறவில்லை என கையை விரிப்பதும், அதற்கு எதிராக முறைப்பாடு செய்யவோ சட்ட நடவடிக்கையோ எடுக்க முடியாதாகையால் தனது அரசியல் செல்வாக்கைபயன்படுத்தி பழிவாங்குவதும் அல்லது இவர் அவரை மாட்டி விடுவதுமுண்டு. அந்த கோணத்தில் தான் செய்த தவறுகளையும் சந்திரகாந்தன்மேல் போட்டு தான் தப்பும் செயலாகவும் இருக்கலாம். ஆனால் இந்த மௌலானா, சுரேஷ் அலி போன்றோர் தமது இனத்தை, மதத்தை சேர்ந்தவர்களை பலிகொடுத்து, அப்பாவிகளை பலி எடுத்தது தமது தமது பதவிகளை தக்க வைப்பதற்காக, மனித குலத்துக்கே எதிரானது. அதுமட்டுமல்ல அந்த இனத்தின் பொருளாதாரம் நொறுக்கப்பட்டது, குண்டுதாரிகளின் மனைவிமார் குழந்தைகளும் பலி எடுக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் மதத்தையோ இனத்தையோ மதிக்கவுமில்லை பாதுக்காகவுமில்லை அவர்களைப்பற்றி சிந்திக்கவுமில்லை. இனம் இனத்தோடு சேரும் என்பது இவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு, அப்பாவிகளை கொன்று சுகம் அனுபவித்து, அதை சாட்சியாக உபயோகித்து தஞ்சம் பெற்று சுகமாக வாழ்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பெயரில் இருக்கும் பணத்தை தடுப்பு செய்து (முடக்கி) ஏழைமக்களுக்கு, குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.