Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் வழக்கு தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை  திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (12)  கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரே தனது சகோதரர்  சகிதம்  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து  பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

அதில்   போலியான ஆவணங்களை சமர்ப்பித்து  முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும், பின்னர்   மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று  பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்தினார் எனவும் பின்னர் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்  சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக  இந்த ஆசாத் மௌலானா தென்பட்டதன் பின்னர்  சில தினங்களுக்கு முன்னர் அம்முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன், 2019.09.29 திகதி அன்று குறித்த திருமணம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் எனும் பகுதியில்  நடைபெற்றுள்ளதுடன், வரவேற்பு உபசாரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

எனினும், தற்போது இறக்காமம் பள்ளிவாசல் குறித்த திருமணம் குறித்து மறுத்துள்ளதுடன், போலியாக தமது பள்ளிவாசல் ஆவணம் தயார் செய்யப்பட்டு இம்மோசடி திருமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்திய கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சனல் 4 ஊடகம்  ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் திகதி வெளியிட்டது.

அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக நீண்ட காலம் செயல்பட்ட ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, சனல் 4 ஆவணப்படத்தில் வெளியிட்ட தகவல்கள், இலங்கை அரசியலிலும் அதற்கு வெளியிலும் கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் வழக்கு தாக்கல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் இந்தப்பெண் அவர் நாட்டில் இருக்கும்போது முறையிடவில்லை? அவருக்கு பயந்து இருந்தாரா அல்லது இந்தப்பெண்ணுக்கு பயந்து அவர் அரசியல் தஞ்சம் கோரினர் என்று நிறுவுவதற்காகவா? ஒரு தவறிலிருந்து தப்ப பல தவறுகளை செய்தாலும் சிக்கல் பெருகுமே ஒழிய விலகாது, இன்னும் இவர்களுக்கு எதிரான சான்று பலமாகும். நாட்டின் நீதி பரிபாலன சபையின் நம்பகத்தன்மைமேல் கேள்விகள் எழும். அசாத் மௌலானா சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.