Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை பாவிக்க போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் தடை  விதித்துள்ளார்.

கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் தொலைபேசியை பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும், குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட்  கையடக்க தொலைபேசிகளை பாவிக்க தடை விதித்துள்ளார்.  

யாழ்.போதனாவில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணி நேரத்தில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிகள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களும் தமது பணி நேரத்தில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த சிறுமி அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள தாதியின் கவனக்குறைவு காரணமாக சிறுமியின் கையை துண்டிக்க நேரிட்டதாகவும் தகவல் வெளியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தாதிக்கு எதிராக சாட்சியமளித்த பல நோயாளிகள், தாதி தனது கையடக்கத் தொலைபேசியைக் கையாள்வதற்கே நாளின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வதாகவும் நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு, முதற்கட்டமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/273057

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சுகாதார உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்!

%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.jpg

கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதை மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளரால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரத்தில் அநாவசியமாக கையடக்கத்தொலைபேசி பாவனையில் ஈடுபடுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத்தொலைபேசி பாவனை கடமைசார்ந்த செயற்பாடுகளின் சிலவற்றுக்கு அத்தியாவசியமாக காணப்பட்டாலும், உண்மையில் அவை கடமைக்கு இடையூறாக அமைவதாகவும், நோயாளர்களின் தனிப்பட்ட விடயங்களை பேணுவதனை சிக்கலாக்குவதாகவும், கவனச்சிதறல்கள் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசி பாவனை காரணமாக நோயாளர்களுக்கு வழங்கும் சேவையில் பாதிப்பு ஏற்படுவதால் நோயாளர்களுக்கும் தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கடமை நேரத்தில் சாதாரண தொடர்பாடல் தவிர ஏனைய விடயங்களுக்காக சமூக வலைத்தளங்களை பார்வையிடல், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் போன்றவற்றுக்கு கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பதனை தவிர்க்குமாறு வட மாகாண சுகாதார பணிப்பாளர், வட மாகாணத்தின் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார துறைசார் உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/273435

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.