Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை சிக்குண்டிருப்பது அபிவிருத்தியின்மை பொறியே தவிர கடன்பொறி அல்ல ; கடன் மறுசீரமைப்புக்கு அப்பால் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் - சீனத் தூதுவர் சி சென்ஹொங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

14 SEP, 2023 | 11:08 AM
image
 

(நா.தனுஜா)

இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை என்ற பொறிக்குள்ளேயே அது சிக்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

'அண்மையகால உயர்மட்ட விஜயங்களும், அவர்களின் இந்து சமுத்திரப்பிராந்தியம் சார்ந்த கோணங்களும்' என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி (புநழிழடவைiஉயட ஊயசவழபசயிhநச) என்ற அமைப்பினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போதே சீனத்தூதுவர் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகப்பிரதானி சாகல ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிஸுகோஷி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், 'இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை பொறிக்குள்ளேயே இலங்கை சிக்கியிருக்கின்றது. எனவே இப்போது இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி, எதிர்கால பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 'நாம் மோதலுக்குப் பதிலாக ஒத்துழைப்பைக் கோரவேண்டும். தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மையைக் கோரவேண்டும். நாம் பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தவேண்டும். அதேவேளை ஒருதரப்பினருக்கு மாத்திரம் நன்மையளிப்பதும், மற்றைய தரப்பினருக்குத் தீங்கை ஏற்படுத்துவதுமான விடயங்களைத் தவிர்க்கவேண்டும். நாம் ஏனையோரை சமத்துவமாக நடாத்தவேண்டும். ஏனைய தரப்பினரின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதுடன் வெளியகத்தரப்பினரின் அநாவசிய தலையீடுகளை முழுமையாக எதிர்க்கவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/164536

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி  என்றால் இந்த கடன் பொறி சீனாக்காரர் இதட்கு பதில் கூறினால் நன்றாக இருக்கும். ஒன்றுக்கும் உதவாத , வருமானமே இல்லாத அம்பான்தோட்டை துறைமுகத்துக்கு , மத்தள விமான நிலையத்துக்கும் கடனை கொடுத்து நிர்மாணித்ததின் நோக்கம் என்னவோ? பின்னர் கடனை செலுத்த முடியாமல் தவித்த இலங்கையை ஒரே அடியாக அடித்து எப்படி அந்த துறை முகத்தை 99 வருடத்துக்கு அபகரித்ததை எப்படி சொல்லுவது? இலங்கை அரசியால்வாதிகள் கொள்ளையடித்தது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், நாடு வங்குரோத்துக்கு செல்வதட்கு முக்கிய காரணம் சீனாதான். எனவே இவர் செய்வது ஒன்று சொல்லுவது வேறாகவும்  இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சீன சொல்லுவது சரி.

அம்பாந்தோட்டை யார் சொன்னது உதவாது என்று?

அது மேற்றகின், ஹிந்தியா பிரச்சாரம், அதற்கு வசதியான வர்த்தக . புவிசார் ஒழுங்கை தக்க வைக்க.

ஹிந்தியா, மேற்கு,  தமிழரை அழிக்கும் சிங்களத்துக்கு சிங்களமாக சீன (சீன ஒரு போதும் பாடம் எடுத்து மற்றவருக்கு அரசியல் கடற்பிக்கவில்லை மேற்கத்தி போல )  நின்ற போது, அம்பாந்தோட்டை கட்டுப்படவில்லையா?

 

 

 

 

வரலாற்றை பார்க்கவும், கொழும்பு எப்படி இருந்தது, உள்ளூர் வர்த்தகம் கூட களனி (கல்யாணி) துறையிலேயே நடந்தது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kadancha said:

சீன சொல்லுவது சரி.

அம்பாந்தோட்டை யார் சொன்னது உதவாது என்று?

அது மேற்றகின், ஹிந்தியா பிரச்சாரம், அதற்கு வசதியான வர்த்தக . புவிசார் ஒழுங்கை தக்க வைக்க.

ஹிந்தியா, மேற்கு,  தமிழரை அழிக்கும் சிங்களத்துக்கு சிங்களமாக சீன (சீன ஒரு போதும் பாடம் எடுத்து மற்றவருக்கு அரசியல் கடற்பிக்கவில்லை மேற்கத்தி போல )  நின்ற போது, அம்பாந்தோட்டை கட்டுப்படவில்லையா?

 

 

 

 

வரலாற்றை பார்க்கவும், கொழும்பு எப்படி இருந்தது, உள்ளூர் வர்த்தகம் கூட களனி (கல்யாணி) துறையிலேயே நடந்தது.

 

 

ஹம்பாந்தோட்டை இப்போது சீனாவின் கைகளில். 99 வருடத்துக்கு யாரும் அசைக்க முடியாது. நிச்சயமாக இது சீனாவுக்கு உதவும். சீனாவுக்கு மிகபெரிய பலம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.