Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம்: குற்றச்சாட்டை நிரூபியுங்கள் - பந்துல குணவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

14 SEP, 2023 | 09:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர்  என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு. இவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். குற்றச்சாட்டை நிரூபித்தால் முழு அரசியலிலும் இருந்து விலகுவேன் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில்  வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தில் ஒரு தரப்பினரை தூண்டி விட்டு அவர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வைத்த இந்திக தொடங்கொட புகையிரத சேவை சங்கத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை. புகையிரத சாரதிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் இந்திக தொடங்கொட என்னை கடுமையாக சாடியுள்ளார்.

இலங்கை அரசியலில் என்னை போல் (பந்துல குணவர்தன) மிக மோசமான போக்குவரத்து அமைச்சர் எவரும் இல்லை என்றும், நானும் எனது மனைவியும் தம்பதிவ யாத்திரை செல்ல வெளிநாட்டு தரப்பினர் நிதியுதவி வழங்கியதாகவும் புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனது வீட்டுக்கு வந்து 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்களின் திணிப்பு என்பதுடன் வன்மையாக இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் தான் இவர் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். புகையிரத சாரதிகள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சு மற்றும் புகையிரத திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புகையிரத சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் மாத்திரம் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தான் முரண்பட்ட வகையில் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தேன். இவ்வாறான நிலையில் தான் புகையிரத சாரதிகள் சங்கத்தினர் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் 84 பேரின் பணிப்புறக்கணிப்பினால் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையவில்லை. பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னின்று செயற்படுத்திய இந்திக தொடங்கொட எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புகையிரத சேவையில் உள்ள இந்திக தொடங்கொடவுக்கு எதிராக மேலதிக கொடுப்பனவில் மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்திலும், மிலேனியம் புகையிரத செயற்திட்ட மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் தான் இவர் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக நான் பதவியேற்றதன் பின்னர் இந்திய நிறுவனத்துடன் எந்த அபிவிருத்தி திட்ட ஒப்பந்தங்களையும் முன்னெடுக்கவில்லை. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படுகிறது. அத்துடன் நிதி விவகாரங்கள் இந்திய நிதியமைச்சுக்கும், இலங்கையின் நிதியமைச்சுக்கும் இடையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.

5 கோடி ரூபா நட்டஈடு பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக குற்றப்புலனாய்வு, பிரிவிலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிப்பேன். அதே போல் இலங்கையில் புகையிரத பாதை புனரமைப்பு செயற்திட்டத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்க வேண்டும். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதுடன், முழு அரசியல் செயற்பாடுகளிலும் இருந்து விலகுவேன் என்றார்.

https://www.virakesari.lk/article/164589

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பந்துல இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றமை உண்மையென்கிறார் இந்திக தொடங்கொட

16 SEP, 2023 | 08:55 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றார் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இவரை போக்குவரத்து அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என புகையிரத சேவையை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (16)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகத்துறை அமைச்சு உள்ள காரணத்தால் அவர் தனக்கு ஏற்றாட் போல் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.அவருக்கு எதிராக நான் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஊடகங்கள் கவனம் செலுத்த கூடாது என அவர் ஊடகங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

புகையிரத பாதை அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இந்திய நிறுவனம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நான் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து கலக்கமடைந்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன எப்படிப்பட்டவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை.சாட்சியங்களுடன் தான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தேன்.எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பேன்.

தனது அரசியல் அந்தஸ்த்தை பயன்படுத்தி தனது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுவது அடிப்படையற்றது.இவரது மூத்த மகன் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,ஊடகத்துறை அமைச்சின் தனிப்பட்ட செயலாளராக பதவி வகிக்கிறார்.மகள் அமெரிக்காவில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாக உள்ளார்.இவ்வாறு மருமகன்,மைத்துனன் என அனைவருக்கும் அரசாங்கத்தில் உயர்மட்ட பதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை பதவி நீக்கி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த இவர் அதிக அக்கறை கொண்டுள்ளார்.மறுசிரமைப்பு திட்டங்கள் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடவில்லை.புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்னெடுக்கும் முறையற்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/164722

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல், மோசடி, இலஞ்சம் இல்லாத அமைச்சர்கள் யாரும் இலங்கையில் உள்ளனரா? எப்படி ஒருவரை ஊழல் அற்றவர் என நிரூபிக்க யாரால் முடியும்? இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.