Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : சர்வதேச விசாரணைகளுக்கு தயார் - பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தினால் அதனையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

52 நாள் அரசியல் நெருக்கடியை நீதிமன்றம் தோற்கடித்ததை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான 'பிளேன் பி'  சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பெரேரா எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டார்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயாராக உள்ளேன். எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள் என்று குறிப்பிடுவீர்கள். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்க்கட்சிகளின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிரோஷன் பெரேரா சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு இந்த குண்டுத்தாக்குல் சிறுப்பிள்ளைத்தனமானதாக இருக்கலாம். ஆனால் உயிரிழந்த,பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இச்சம்பவம் சிறுப்பிள்ளைத்தனமானதல்ல, இவரின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் .பிள்ளையானுக்கு எதிராக வெகுவிரைவில் முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்.

இதன்போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதலை நடத்தியவர், ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்தவர்,திரிபோலி குழுவுக்கு தலைமை தாங்குவர் எமக்கு இடையூறு விளைவிக்கிறார்.இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  பிள்ளையான் சிறையில் இருந்தார். அக்காலப்பகுதியில்  சிறைக்கு சென்ற சஹ்ரான் தரப்பினருக்கும், பிள்ளையானுக்கும் இடையில் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. 52 நாள் அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டவுடன், பிளேன் பி சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என்றார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் :  சர்வதேச விசாரணைகளுக்கு தயார் - பிள்ளையான் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வீர தமிழன் பிள்ளையானை போல இதட்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். எந்த சர்வதேச விசாரணைக்கும் தயங்காத ஒரு போராளி.😜

ஆனாலும், நேற்றைய விவாதத்தில் அடைக்கலம் ஐயா சிங்கள கர்த்திநாளுக்கு வக்காலத்து வாவ்ங்கினதை பார்க்க பாவமாக இருந்தது.

தமிழ் கத்தோலிக்கர்களும், பாதிரிமாரும் கொலை செய்யப்படட போது ஒரு வார்த்தையும் தெரிவிக்காமல் இருந்தவர் இவர். இந்த குண்டு தாக்குதலில் சிங்கள கத்தோலிக்கர்களுக்கு பாதிப்பு ஏட்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக அமைதி காத்திருப்பார்.

இதை எல்லாம் அறிந்திருந்தும் அடிமை அடைக்கலம் அவருக்கு வக்காலத்து வாங்குவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்.

இவரை கூட்ட்டமைப்பைல் இருந்து கழட்டி விட்ட்தால் ஏட்படட ஆதங்கமாக இருக்கலாம். அல்லது அடுத்தமுறை நீர்கொழும்பில் தேர்தலில் நிற்க போகிறாரோ தெரிய வில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

இந்த குண்டு தாக்குதலில் சிங்கள கத்தோலிக்கர்களுக்கு பாதிப்பு ஏட்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக அமைதி காத்திருப்பார்.

எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டவர்கள். முஸ்லிம்கள் சம்பந்தப்படாமல் சிங்களம் நடத்தியிருந்தால் நிட்சயமாக அமைதி காத்திருப்பார், புலிகள் இருந்திருந்தால் அவர்கள் தலையில் கட்டிவிட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள்

IMG-4479.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தெரியும், யாருக்காக இந்த தாக்குதலை நடத்தினாரோ அவர்கள் விசாரணையை தடுப்பார் என. ஆனால் இது உள்நாடு கடந்து வெளிநாட்டுக்காரரை பலியெடுத்ததனால் இவர்கள் கையை மீறிப்போய்விட்டது. திட்டம் தீட்டியவர்கள் புலனாய்வாளர்கள், அவர்களது திட்டம் எதை எதிர்த்தார்களோ, அங்கேயே அவர்களையுமறியாமல் கொண்டுபோய் விட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எங்களிற்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது - பிள்ளையான்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்  முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவும் தமிழ்  மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு உதவினார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும்  நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எங்களிற்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது - பிள்ளையான் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டவர்கள். முஸ்லிம்கள் சம்பந்தப்படாமல் சிங்களம் நடத்தியிருந்தால் நிட்சயமாக அமைதி காத்திருப்பார், புலிகள் இருந்திருந்தால் அவர்கள் தலையில் கட்டிவிட்டு. 

இப்போதும் கூட சிங்களவர்கள்தான் பின்னணி கொண்டவர்கள் என்று விசாரணையில் நிரூபிக்கப்படடால் தனது போராட்டத்திலிருந்து விலகி கொள்ளுவார். கேடடால் யேசுநாதர் சிங்களவர்களை மன்னிக்கும்படியும் நேசிக்கும் படியும் கூறியுள்ளார் என்றும் கூறுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

ராஜபக்ச நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும்  நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரை பலிகொடுக்க சிங்களம் அழகு செய்தது ஆனால் இவரோ அவர்களை சுட்டி தான் தப்பும் திட்டம். முந்துவோர் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். எல்லோருக்கும் முந்தி ஒருவர் தன்னை விடுவிக்க முயற்சித்து காரியத்திலும் இறங்கிவிட்டார். இப்போ.. ஒவ்வொருவரும் தம்மை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இவரை தீர்த்துக்கட்டுவோர் தாமாகவே மாட்டிக்கொள்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2023 at 01:19, பிழம்பு said:

ராஜபக்ச நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும்  நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தான் இராஜாங்க அமைச்சரல்ல, அதன் போர்வையில் சிங்களத்தின் பலிக்கடா என்கிற யதார்த்தத்தை சிவநேசதுரை சந்திரகாந்தன் கொஞ்சம் உணரத்தொடங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. உயிர்த்த ஞாயிறு விசாரணை ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்று மறறொன்றோடு தொடர்புபட்டு எல்லோரும் இழுபடப்போகிறார்கள் என்பது தெரிந்ததனாலேயே, இவர் சம்பந்தப்பட்டவர்களையும் பொறி வைத்துப் (எச்சரிக்கை விட்டு) பேசியிருக்கிறார் என தோன்றுகிறது. நான் உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு தயார்! என்னை நீங்கள் காப்பாற்றாது விட்டால், அடுத்த விசாரணையில் உங்களை நான் மாட்டுவேன் எனும் எச்சரிக்கையாக இருக்கலாம். இப்போ இந்தியா வேடிக்கை மட்டும் பாக்குமா அல்லது தன்னை காப்பாற்ற போராடுமா? நான் சொன்னதுபோல், இந்தியா தன்னை காப்பாற்ற போராடும்போது நமக்கு விடிவு தானாக வரும் வாய்ப்புள்ளது. காலிஸ்தான் தனி நாடு கேட்க்கும், அமைக்கும் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். தமிழரில் இருந்து இந்தியா விலகி இருக்க செய்ய வேண்டும். காலமிது கனிந்து வருவதுபோலவே தெரிகிறது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.