Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தலைமறைவாகவே வாழ்கிறேன் – பிரித்தானிய பெண் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news-06-3.jpg

இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை பகிரத் தொடங்கியதன் பின்னரே, அதிகாரிகள் தமது வீட்டை சோதனையிட்டதாக கெய்லீ ஃப்ரேசர்; தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்துதல் உத்தரவை உறுதி செய்தது. எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃபா (Fifa) பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய் (Wendy Chamberlai) நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர், கெய்லீ ஃப்ரேசர் இலங்கையை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/274993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் - உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

Published By: RAJEEBAN

30 SEP, 2023 | 03:32 PM
image
 

இலங்கையில் அரகலய நாட்களில் ஆர்ப்பாட்டங்களின் வீடியோக்களை வெளியிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் இலங்கையின் ஒடுக்குமுறை அரசாங்கத்திடமிருந்து 13 மாதங்கள் மறைந்திருந்துள்ள நிலையில் தனக்கு நம்பிக்கைகள் குறைவடையத்தொடங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த கெய்லே பிரேசர் என்ற பெண்ணே இதனை தெரிவித்துள்ளார்

kailegh_fraser.jpeg

கடந்த வருடம் இலங்கையில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற குடிவரவுதுறை அதிகாரிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து சென்றனர்.

அந்த பெண் செல்லுபடியற்ற விசாவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்த குடிவரவுதுறை அதிகாரிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து சென்றுள்ளனர்.

எனினும் தான் அரகலய வீடியோக்களை வெளியிட தொடங்கிய பின்னரே இது குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டதாக இலங்கைக்கு ஆயுர்வேதம் குறித்து கற்பதற்கு சென்ற சென் அன்ரூசை சேர்ந்த அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அவரை நாடுகடத்துவதற்கு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது, எனினும் இலங்கையின் மிகமோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் தடுத்துவைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தயக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலம் சமூக மத இன பிரிவினைகளை தூண்டுபவர்களை தடுத்து வைக்க அனுமதிக்கின்றது.

இதேவேளை இலங்கை பிரிட்டிஸ் பெண் மணி பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் வென்டி சம்பெர்ளின் பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

அவ்வாறான உத்தரவாதம் வழங்கப்படும் வரை தான் தனது மறைவிடத்திலிருந்து வெளியே வரமுடியாது என பிரேசர் தெரிவித்துள்ளார்.

நான் இங்கு இருக்கின்றேன் உயிர்பிழைத்து வாழ்கின்றேன் ஏதாவது மாற்றம் நிகழ்வதற்காக காத்திருக்கின்றேன் என பிரேசர் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு வேறு வழியில்லை நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்காவது உறங்கமுடியும் உணவு உண்ண முடியும் என்பதை உறுதி செய்கின்றேன் அவையே எனது முன்னுரிமைக்குரிய விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இணையம் என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய விடயம் கடந்த ஒரு மாதகாலமாக அதனை பயன்படுத்த முடிந்தமை மிகப்பெரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை வாழ்க்கை என நான் கருதவில்லை, இது உயிர்வாழ்தல் முழு உலகமும் என்னை இலங்கையில் ஆட்சியில் உள்ள பயித்தியக்காரர்களின் கரங்களில் கைவிட்டுள்ளதாக கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/165765

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவா இன்னும் பிரித்தானிய தூதரின் உதவியையோ பிரித்தானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உதவியையோ நாடவில்லை..??! அதேபோல்.. பிபிசி போன்ற ஊடகங்கள்.. இவா போன்றவர்களின் நிலையை ஏன் கண்டுகொள்வதும் இல்லை..???!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

இந்தநிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃபா (Fifa) பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய் (Wendy Chamberlai) நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக

அவவின் பெயர் வெண்டி சேம்பலின்.

Fife என்பது ஸ்கொட்லாந்தில் உள்ள ஒரு பிரித்தானிய பாராளுமன்ற தொகுதி. வெண்டி அதன் எம் பி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.