Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா ஜனாதிபதி நியுயோர்க் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 22-09-2007 02:47 மணி தமிழீழம் [மயூரன்]

சிறீலங்கா ஜனாதிபதி நியுயோர்க் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் 62வது பொதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சிறீலங்கா ஜனாதிபதி இன்று நியுயோர்க்கிற்கு பயணமாகியுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் புதன்கிழமை இக்கூட்டத்தொடரில் உரையாற்ற இருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி எப்படி அரசாங்கம் சிறீலங்காவில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது எனவும் உரையாற்றவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் எதிர்வரும் புதன்கிழமை பில்கிளிங்டன் பவுண்டேசனில் உரையாற்றுவதற்காக செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

நன்றி

பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

புஸ் அண்ணை ஒரு வைனை உடைச்சு வைப்பார்.மகிந்து அம்மான் அதை அடிச்சு போட்டு பத்திரிகையாளர்கள் மாநாட்டில் நாலு புளுகு புளுக வேண்டியது.

தமிழர்கள் தங்களுக்கு ஒரு முடிவை தாங்களாக எடுக்கும் வரை யாரும் யாரை சந்தித்தும் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கமுடியாது.அவனவன் தங்கள் சுயனலத்தில் கருத்தாயுள்ளார்கள்.தமிழரின் பிரசனையெல்லாம் இந்த கனவான்களுக்கு ஒரு போடுதடி.

அரசு மீதான மனித உரிமை மீறல குற்றச்சாட்டுக்களை முறியடிக்க ஐ.நா உரையில் ஜனாதிபதி முயல்வர்.

அரசுப்படைகளின் மிக மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராகக் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள பின்னணியில், அந்தக் குற்றச்சாட்டுக்களை முறியடித்து, இலங்கை அரசத் தரப்பின் நியாயத்தை சர்வதேச சமூகத்தின் முன் நிறுவும் வகையில் ஜனாதிபதி மஹிந்த தமது ஐ.நா. பொதுச் சபைக் கூட்ட உரையை நிகழ்த்துவார் என அறியவருகின்றது.

ஐ.நா. பொதுச்சபையில் 62 வது கூட்டத் தொடரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்தன் உரையாற்றுகின்றார். இந்த நிகழிவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதியுடன் சுமார் 85 பேர் கொண்ட இலங்கை அணி ஒன்று நியூயோக் செல்கின்றது.

நாட்டில் வகை தொகையின்றி இடம் பெற்றறு வரும் ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமற் போகச் செய்யப்படுதல், கடத்திக் கம்பம் அறவிடுதல், படுகொலைகள் என்ற மோசமான சம்பவங்கள் காரணமாக மஹிந்த அரசுக்கு எதிராக சர்வதேசமட்டத்தில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றமை தெரிந்ததே. அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே

போர்க் கொடி தூக்கியிருக்கின்றன.இந்தப் பின்னணியிலேயே ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த அங்கே சர்வதேச சமூகத்தை நேரடியாக எதிர் கொள்ள விருக்கின்றார்.

சர்வதேசம் இப்போது உலகளாவில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகின்றது. அது போலவே இலங்கையும் உலகின் மிக மோசமான பயங்கரவாத இயக்கத்தின் சவாலை எதிர் கொண்டு போராடுகின்றது. இந் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் குற்றச்சாடடுகள் வேண்டுமென்றே சில தரப்புக்களினால் ஊதிப் பெருப்பித்துக் காட்டப்படுகின்றன. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. இலங்கைப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதில்லை. ஒழுக்கத்திலும் நன்நடத்தையிலும் உலகில் சிறந்த படைகளாக இலங்கைப் படைகள் உள்ளன.

'அரசு அமைதி வழியில் தீர்வு ஒன்றை எட்டவே முயல்கின்றது. ஆனால் பயங்கரவாதிகளான புலிகளே அதற்கு முட்டுக்கடைடைகயாக உள்ளனர். அதனால் தான் அவர்களை இராணுவ ரீதியில் கையாள வேண்டியுள்ளது. இதனை மனித உரிமை மீறலாக சில தரப்புகள் வேண்டுமென்றே அர்த்தப்படுத்துகின்றன. இதனை சர்வதேசம் அடையாளம் காணவேண்டும்.

'உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சர்வதேசம் உதவுவது போல இலங்கை நாட்டுக்குள் ஒரு குழுவினர் மேற்கொள்ளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசு நடத்தும் போராட்டத்ததுக்கும் சர்வதேசம் ஒத்துழைப்பும் உதவியும் தந்து, அந்தப் பயங்கரவாதத்தைத் துடைத்தழிக்க உதவ வேண்டும்;" இந்தச் சாரப்பட மஹிந்த உரை அமையும் எனத் தெரிவியவந்துள்ளது.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.