Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோனியாவும் கருணாநிதியும் நினைத்தால் தமிழர் பிரச்சனைக்கு முடிவு காணலாம்- மனோ கணேசன்

Featured Replies

"இந்தியப் பேரரசும் தமிழக அரசும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயற்பட்;டால் தமிழர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கமான நல்ல முடிவை நோக்கி நகர்த்த முடியும். அதற்கான வேளை வந்துவிட்டது."

இவ்வாறு மே.மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் அதில மேலும் கூறியிருப்பவை வருமாறு :-

இலங்கை இனப்பிரச்சினை தீர்விற்கு புலிகளின் போராட்ட பயங்கரவாதத்தை விடவும், இலங்கை அரசின் இராணுவ பயங்கரவாதமே பெரும் தடையாக இருக்கின்றது என்ற உண்மையை இந்தியத் தலைவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே இந்திய அரசின் கொள்கை வகுப்பாளராக அறிவித்துக் கொள்ளும் ஊடகவியலாளர் ராம் போன்றவர்கள் தாமும் குழம்பி, இந்திய அபிப்பிராயத்தையும் குழப்புகின்றார்கள்.நாம் இந்திய அரசிடம் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் மொழி வாரி மாநில ஆட்சியையும், தென்னிலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு நிம்மதியும் பெற்றுத் தாருங்கள் என்றே கோருகின்றோம். இந் நோக்கில் செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பும் உரிiமையும் இந்திய அரசிற்கு இருக்கின்றது.

இந்திய தேசம் தொடர்பிலும், தமிழகம் தொடர்பிலும் எனக்கு ஒரு கருத்து இருக்கின்றது. அக்கருத்து எனது சமீபத்திய தமிழக விஜயத்தின் போது மீண்டும் உறுதியடைந்தது.இந்தியாவில் 28 மாநிலங்கள் இருக்கின்றன. இதில் 27 மாநிலங்களும பிரிந்து செல்ல நினைத்தாலும் இந்தியப் பேரரசிலிருந்து தமிழகம் ஒரு போதும் பிரிந்து செல்லாது. ஏனேனில் அங்கே பிரிவினைவாதம் இனிமேல் ஒருபோதும் தலைத்தூக்க முடியாதளவிற்கு தமிழர்கள் மத்தியில் தேசப்பற்று உறுதியடைந்துள்ளது.

தமிக அரசியல் கட்சிகள் மத்தியில் எத்துணை கருத்து மோதல்கள் இருந்தாலும், இந்திய தேசிய ஐக்கியம் என்ற விடயத்தில் அனைத்துக் கட்சிகள் மத்தியிலும் ஒருமித்த கருத்து நிலவுகின்றது.இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் சுயாட்சியையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதும், தமிழ்தேசியம் வெற்றி பெறுவதும் இந்திய தேசிய ஐக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று நினைப்பது சுத்த பைத்தியக்காரத் தனமாகும்.

இந்தத் தவறான சிந்தனையை நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்திய ஊடகவியலாளர் ராம் போன்றவர்கள் வளர்க்கின்றார்கள். இது இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு இனிக்கும் நிலைப்பாடாகும். தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் நேரடி யுத்தம் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் ஆகிய அனைத்துக் கொடுமைகளுக்கும் துணைபோவதாகும்.

அண்டை நாடு என்ற வகையிலும், பிராந்திய வல்லரசு என்ற வகையிலும் இந்தியா,இலஙங்கை இரண்டாகப் பிரிவைதை ஆதரிக்க முடியாது. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம்.ஆகவே, இலங்கையின் ஐக்கியத்தையும், ஆட்புல ஒருமைப்பாடு எந்தளவிற்கு முக்கியமோ, இதேயளவு ஐக்கிய இலங்கைக்கும் வடக்கு,கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மொழிவாரி மாநிலமும் முக்கியமானது என்பதை இந்தியா தெளிவான அரசியல் கொள்கையாக அறிவித்து விட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாநிலத்தில் வாழும சிங்கள சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படும் அதேயளவு உரிமைகள் தென்னிலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி சிறுபான்மை மக்களுக்கும் வழங்கப்படுவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.இதுதான் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச அரசியல் எதிர்பார்பாகும். இந்தக் குறைந்த பட்ச நிலைப்பாடடையும் விட்டு கொடுப்பதற்கு எம்மை எவரும்

நிர்ப்பந்திக்க முடியாது. அவ்விதம் நிர்ப்பந்திப்பவர்கள் தமிழ் பயங்கரவாதத்தை கண்டிக்க முடியாது. இலங்கையில ஆட்புல ஒருமைப்பாட்டை வலியுறுத்த முடியாது. இதுவே நாம் இந்தியப் பேரரசிற்கும் தமிழக அரசிற்கும் சொல்லக் கூடிய செய்தியாகும்;.இந்த செய்தியை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துக் கொள்ள மறுப்பார்களேயானால் வடக்கு,கிழக்கில் பிரிவினை வாதமும், பயங்கரவாதமும் இன்னமும் தீவிரமடையும். அதே போல் தென்னிலங்கையில் வாழும் அனைத்து இந்திய வம்சாவளித் தமிழர்களையும் இந்தியா நேரடிப் பொறுபில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்படும். என்று அதில் கூறியுள்ளார்.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சொத்து சேர்கிறதெங்கே,குடும்ப பிசகை தீர்க்கிறதெங்கே அல்லது வடக்குக்கு ஆமா போடுவதெங்கே.30 ற்கு மேற்பட்ட வருடங்களாக "முயல் பிடிக்கிற மூஞ்சயை" காண முடிகிறதா.இந்தாளை நம்புவது இலவம்பஞ்சுக்கு ஒப்பானது.

தமிழ் மக்களின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவதன் மூலம் சமாதானத்தைக் காண முடியாது

தமிழ் மக்களை சுவற்றில் சாய்த்து அவர்களது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவதன் மூலம் இலங்கையில் சமாதானத்தை காண முடியாது.' தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமைகளை வழங் குவதன் மூலமே உண்மையõன சமாதானத்தை அடைய முடியும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசன் தெரிவித்தார்.

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் போருக்கு எதிரான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மனோகணேசன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களுடன் காலை 10 மணிக்கு ஆரம்பமான சத்தியாக்கிரகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் கலந்துகொண்டதோடு கொலைகளற்ற , வன்முறைகளற்ற நாட்டை கட்டியெழுப்பவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அத்தோடு சரியாக நண்பகல் 12 மணிக்கு 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் சர்வதேச சமாதானத்தையொட்டி மேற்கொள்ளப்படும் மௌன அஞ்சலியுடன் சம நேரத்தில் அமைந்திருந்தது.

கொழும்பில் மட்டு மன்றி போருக்கெதிரான தேசிய முன்னணியின் கிளை அமைப்புகள் 20 மாவட்டங்களிலும் சம காலத்தில் சத்தியாக்கிரகத்தை நடத்தினர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மனோகணேசன் எம்.பி. கூறியதாவது:

நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டுமென அதிக ஆவலாயிருப்பவர்கள் தமிழ் மக்களாகும். இன்று உலக சமாதானத் தினத்தை கொண்டாடும் நாம் அதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.

அன்று இன, மத, மொழி ரீதியாக சில இணக்கப்பாடுகள் காணப்பட்டன. ஆனால், குறுகியகால அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணக்கப்பாடுகள் காணப்பட்டன. ஆனால் குறுகிய அரசியல் நோக்கங்கள் ???????? இந்த இணக்கப்பாடுகளிலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அதன் மூலம் விரிசல்கள் ஏற்பட்டன.

சமாதானத்தை கொண்டு வர வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை அவற்றில் சாய்த்து அவர்களது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

நமீதாவின் சுண்டு விரலில் கட்டெறும்பு கடித்து விட்டதென்று கேள்விப்பட்டால் பதறித்துடித்தக் கொண்டு சுகம் விசாரிக்கச் செல்லும் கருணாநிதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்குமா??

ஜானா :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.