Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலஸ்தீனிய மக்கள் அனுபவிக்கும் வரலாற்று துயரங்கள் குறித்து ஐநா செயலாளர் நாயகம் கருத்து - இஸ்ரேல் போர்க்கொடி -பதவி விலகவேணடும் என வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN     25 OCT, 2023 | 12:03 AM

image

ஹமாஸ் ஒக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ் ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர் என ஐக்கியநாடுகள் நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது அவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்தீர்வு குறித்த அவர்களின் நம்பிக்கைகளும் காணாமல்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாலஸ்தீனியர்களின் துயரங்களால் ஹமாசின் கண்டிக்கப்படவேண்டிய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது அதேபோன்று ஹமாசின் தாக்குதல்களிற்காக பாலஸ்தீன மக்களிற்கு எதிரான கூட்டுத்தண்டனையை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் கருத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் அவர் பதவிவிலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறுவர்கள் பெண்கள் முதியவர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகம் ஐநாவிற்கு தலைமைதாங்குவதற்கு பொருத்தமற்றவர் என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் கிலாட் எர்டான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் அவரை உடனடியாக பதவிவிலகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்என இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167679

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு பாடம் கற்பிப்பதற்காக ஐநா அதிகாரிக்கு விசா வழங்க இஸ்ரேல் மறுப்பு

Published By: RAJEEBAN     25 OCT, 2023 | 04:05 PM

image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு பாடம் கற்பிப்பதற்காக ஐநா அதிகாரிக்கு விசா வழங்குவதற்கு இஸ்ரேல் மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்ட கருத்துக்களிற்கு பாடம் புகட்டுவதற்காக ஐநா அதிகாரிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான செயலாளர் மார்ட்டின் கிரிவ்வித்ஸ் இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொள்வதற்கே விசா வழங்க இஸ்ரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளிற்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டான் தனது உரையின் போது நாங்கள் ஐநா பிரதிநிதிகளிற்கு விசாவை மறுப்போம் என தெரிவித்திருந்தார். நாங்கள் ஏற்கனவே ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களிற்கான அதிகாரிக்கு விசாவை வழங்க மறுத்துள்ளோம்,  ஐநாவிற்கு பாடம் புகட்டுவதற்கான தருணம் வந்துள்ளது என தெரிவித்துள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

gaza.jpg

ஹமாஸ் ஒக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ் ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர் தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர் என ஐக்கியநாடுகள் நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது அவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்தீர்வு குறித்த அவர்களின் நம்பிக்கைகளும் காணாமல்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாலஸ்தீனியர்களின் துயரங்களால் ஹமாசின் கண்டிக்கப்படவேண்டிய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது அதேபோன்று ஹமாசின் தாக்குதல்களிற்காக பாலஸ்தீன மக்களிற்கு எதிரான கூட்டுத்தண்டனையை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் கருத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் அவர் பதவிவிலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறுவர்கள் பெண்கள் முதியவர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகம் ஐநாவிற்கு தலைமைதாங்குவதற்கு பொருத்தமற்றவர் என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் கிலாட் எர்டான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் அவரை உடனடியாக பதவிவிலகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்என இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167730

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பற்றி ஐ.நா.செ.நா சொன்னது 100% சரி.

ஒரு மத அடிப்படைவாதம் அற்ற,  மதச்சார்பற்ற, பலஸ்தீன நாட்டை அமைக்கும் வாய்ப்புகள் பலதை வேண்டும் என்றே தட்டி கழித்து அந்த இடைவெளியில் 1967 எல்லைக்கு அப்பால் ஐநா பலதடவை சட்டவிரோதம் என கூறிய குடியேற்றங்களை இஸ்ரேல் செய்கிறது.

கூடவே மென்போக்கு மிதவாதிகளை பலஸ்தீனத்தில் பலமிழக்க செய்து, ஹமாசை முன்னுக்கு வர செய்து, அதன் மூலம் ஒட்டு மொத்த பலஸ்தீன நாட்டையே சூறையாடும் திட்டம் இஸ்ரேலினது.

ஆகவே இஸ்ரேலின் இருப்பை கேள்வி கேட்க முடியாது என்பது எப்படி நியாயமானதோ, அதே போல் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் உருவாக வேண்டிய பலஸ்தீன நாட்டின் நிலத்தை விழுங்குகிறது என்பதும் நியாயமான கூற்றே.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் ஆயுத தாரிகளை இலக்கு வைக்கும் போது முடிந்தளவு மக்கள் இலக்காகாமல் இருக்க முயல வேண்டும் என்பது சர்வதேச சட்டம்.

காஸாவை கூடார நகர் ஆக்குவோம் போன்ற வார்த்தைகளை இஸ்ரேலின் குரல்தரவல்ல அதிகாரிகளே சொல்வதும், கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடை பெறுவதும், இஸ்ரேல் மீது போர்குற்ற விசாரணை தொடங்க முகாந்திரம் உள்ளதையே காட்டி நிற்கிறது.

எமது விடயத்தில் வாய்மூடி இருந்த ஐ.நா.செ.நா இதிலாவது வாய்திறப்பது சந்தோசம் (முஸ்லிம் நாடுகள் இருக்கும் தெம்பு).

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தெளிவாக மீறப்படுவதை கண்கூடாக பார்ப்பது மிகுந்த கவலையளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres குற்றம்சாட்டியுள்ளார். 56 ஆண்டுகளாக பாலத்தீன மக்கள் ஆக்கிரமிப்பில் மூச்சித்திணறியிருப்பதாகவும் கூறியுள்ளார். குட்டேரெஷின் இந்த பேச்சு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், ஐநா பொதுச்செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டுமென கூறியுள்ளது. என்ன நடந்தது? சற்று விரிவாக பார்க்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இஸ்ரேல் பற்றி ஐ.நா.செ.நா சொன்னது 100% சரி.

 

இப்போது அரபு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை கவனிப்பதுபோல தமிழ் டயஸ்போறாக்கள் அந்த நாட்களில் அவர்களை கவனித்திருந்தால் நமக்கு சார்பாகவும் அறிக்கை விட்டிருப்பார்கள். தமிழர்களை எல்லாம் நடடாற்றில் கைவிட்டுவிட்டு ஓடியும் இருக்கமாடடார்கள். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

இப்போது அரபு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை கவனிப்பதுபோல தமிழ் டயஸ்போறாக்கள் அந்த நாட்களில் அவர்களை கவனித்திருந்தால் நமக்கு சார்பாகவும் அறிக்கை விட்டிருப்பார்கள். தமிழர்களை எல்லாம் நடடாற்றில் கைவிட்டுவிட்டு ஓடியும் இருக்கமாடடார்கள். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.  

அரபுப் பணத்தோடு நாம் ஒப்பிட கூட முடியாதவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.