Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை வந்தடைந்த சீனாவின் கடல் ஆராய்ச்சி கப்பல்: ஷி யென் 6 கப்பலை எதிர்க்கும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யென் 6-க்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம்,K.ARULANANTHAN

படக்குறிப்பு,

சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யென் 6-க்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஷி யென் 6 இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று மாலை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன கடல் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு இதற்கு முன்னர் அனுமதி கோரிய நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டிருந்தது.

சீன கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாறுப்பட்ட கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த கப்பலுக்கு அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை தர அனுமதிக்கப்பட்டதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, இந்தக் கப்பல் நேற்று மாலை திடீரென இலங்கையை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மித்த தருணத்திலேயே, கப்பல், சில மணிநேரத்தில் நாட்டை வந்தடையும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த மாதம் 10ஆம் தேதி சீனாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஷி யென் 6 என்ற கப்பல், 15 நாட்களுக்குப் பிறகு நேற்று இலங்கையை வந்தடைந்தது.

தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர், இந்த கப்பல் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

சாதாரண கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரும் வகையிலேயே இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்து உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

 
சமுத்திர ஆராய்ச்சி கப்பல் ஷி யென் 6

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு,

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட சில நாட்களில் ஷி யென் 6 கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

ஷி யென் 6 கப்பல் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

இலங்கைக்கு ஷி யென் 6 கப்பல் வருகை தரவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகை தரும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே இந்தியா இந்தக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷி யென் 6 கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. சீனாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த 15ஆம் தேதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா நோக்கிப் பயணமாகியிருந்தார்.

ஷி யென் 6 கப்பல் தனது பயணத்தைத் தொடங்கி, ஐந்து நாட்கள் கடந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க சீனா நோக்கிப் பயணித்திருந்தார்.

கடந்த 15ஆம் தேதி நாட்டிலிருந்து புறப்பட்ட ரணில் விக்ரமசிங்க 16ஆம் தேதி சீனாவை சென்றடைந்ததுடன், அங்கு நான்கு நாட்கள் தங்கிருந்து உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின்போது, சீனா ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இவ்வாறான சீன விஜயம் நிறைவடைந்து, சில தினங்களிலேயே இந்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின்போது, இந்தக் கப்பலை அனுமதிக்குமாறு சீனாவால் வலியுறுத்தப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 
சமுத்திர ஆராய்ச்சி கப்பல் ஷி யென் 6

பட மூலாதாரம்,K.ARULANANTHAN

படக்குறிப்பு,

கப்பலில் பணியாற்றும் அதிகாரிகள் அளித்த தகவல்களைத் தவிர வேறு எந்தத் தகவல்களும் தெரியாது என்கிறார் நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனத்தின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன்.

சீன கப்பலில் நடந்த விசேஷ சந்திப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலில் இன்று முற்பகல் விசேஷ கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா), இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், சமுத்திர பல்கலைக்கழகம் மற்றும் ருஹணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சு அதற்கான அனுமதியை இன்று மதியம் வரை வழங்கியிருக்கவில்லை.

இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை நடத்துவதற்கு இதற்கு முன்னர் சீனா அனுமதி கோரியிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு மாத்திரமே தற்போது வரை சீனா ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஷி யென் 6 கப்பலில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனத்தின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''இந்தக் கப்பல் என்ன நோக்கத்திற்காக வந்துள்ள என்பது பற்றி கலந்துரையாடினோம். இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை நடத்த வந்துள்ளதாகவும், இலங்கையில் ஆய்வுகளை முடித்துக்கொண்டு மத்திய இந்திய கடல் பரப்புககுச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வளிமண்டலத்திற்கும், கடலுக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை ஆராய்வதே நோக்கம். கடலில் ஏற்படுகின்ற மாற்றம் தான், வளிமண்டலத்தில் ஏற்படுகின்ற மாற்றமாகும். கடலுக்கும், வளிமண்டலத்திற்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து, அதன் மூலம் காலநிலையைத் துல்லியமாக எதிர்வு கூறுவதற்கும், காலநிலை மாற்றங்களால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்குமான கப்பல்தான் இது என்றே சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்," என நாரா நிறுவனத்தின் அவர் தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் ஆய்வு செய்வதற்கான அனுமதியையே, இலங்கை வெளிவிவகார அமைச்சிடம், சீன கப்பலான ஷி யென் 6 கோரியுள்ளது.

ஆனால், இந்த அனுமதி எப்போது கிடைக்கும், இந்தக் கப்பல் இலங்கையை விட்டு எப்போது வெளியேறும் என்பது தொடர்பிலான எந்தவித தகவல்களும் தனக்குத் தெரியாது என நாரா நிறுவனத்தின் பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் கூறினார்.

இலங்கைக்கு வருகை தந்த போர் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் தொடர்பான தகவல்கள்

இலங்கைக்கு வருகை தந்த கப்பல்களில், யுவான் சேங் 5 கப்பலே, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு 43 போர் கப்பல்கள் வருகை தந்துள்ளன.

இவற்றில் 15 கப்பல் இந்தியாவிற்கு சொந்தமானவை என்பதுடன், 9 கப்பல்கள் ஜப்பானுக்கு சொந்தமானவை என இலங்கை கடற்படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு 36 போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளதுடன், அவற்றில் 12 கப்பல்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த போர் கப்பல்களில், ரஷ்யாவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டும் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

இந்த இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.

கடந்த ஆண்டு 31 போர் கப்பல்கள் இலங்கை வந்துள்ளதுடன், அவற்றில் 14 கப்பல்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2023ஆம் ஆண்டின் இதுவரையான காலம் வரை 16 போர் கப்பல்கள் வந்துள்ளன.

அவற்றில் 4 கப்பல்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை எனவும், மூன்று அமெரிக்காவிற்கு சொந்தமாவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிற்கு சொந்தமான போர்க் கப்பல்களே அதிகளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c3g30xwnjexo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

இலங்கைக்கு ஷி யென் 6 கப்பல் வருகை தரவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

சீனக்கப்பல் சிறிலங்காவுக்கு வாறதாலை கிந்தியனுக்கு என்ன பிரச்சனை?😋

சிங்கள சிறிலங்கா இந்தியாவின்ர ஒரு மாநிலம் எண்டு நினைக்கினமோ?😎
சிங்களத்திட்ட உந்த பருப்பு வேகாது கண்டியளோ......  உலகம்  முழுக்க கடன் கடனாய் வாங்கி புளுத்த கடன் எண்டாலும்  ஆக்கள் ரொம்ப ரொம்ப கறார் பேர்வளியள் தெரியுமோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீனக்கப்பல் சிறிலங்காவுக்கு வாறதாலை கிந்தியனுக்கு என்ன பிரச்சனை?😋

சிங்கள சிறிலங்கா இந்தியாவின்ர ஒரு மாநிலம் எண்டு நினைக்கினமோ?😎
சிங்களத்திட்ட உந்த பருப்பு வேகாது கண்டியளோ......  உலகம்  முழுக்க கடன் கடனாய் வாங்கி புளுத்த கடன் எண்டாலும்  ஆக்கள் ரொம்ப ரொம்ப கறார் பேர்வளியள் தெரியுமோ? 🤣

அதுவும் தலைமை விஞ்ஞானியாய் கப்பலுக்கு கதைக்க ஒரு தமிழனை அனுப்பி இந்தியாவுக்கு பெப்பே காட்டி இருக்கிறார்கள்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீன ஆராய்ச்சி கப்பல் - இந்திய ஊடகங்கள் அளவுக்கதிகமாக பெரிதுபடுத்துகின்றன - சீனாவின் குளோபல் டைம்ஸ்

Published By: RAJEEBAN    27 OCT, 2023 | 03:22 PM

image

இலங்கைக்கு சீன கப்பல் சென்றுள்ளதை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என சீன கம்யுனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சீனாவின் குளோபல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது.

சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதை தொடர்ந்து இந்து சமுத்திரத்தில் சீனாவின் சட்டபூர்வ விஞ்ஞான நடவடிக்கையை அரசியல்மயப்படுத்துவதை கண்டித்துள்ள ஆய்வாளர்கள் இவ்வாறான  கருத்துக்கள் இந்தியாவின் பிராந்திய மூலோபாயத்திற்கு உதவும் நோக்கத்திலானவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் சியான் ஆறு புதன்கிழமை முதல் இலங்கை துறைமுகத்தில் தரித்துநிற்கின்றது. சனிக்கிழமை வரை அந்த கப்பல் அங்கு தரித்து நிற்க்கும் என வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பரில் குவாங்சோவிலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் 13 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் நிபுணர்கள் உள்ளனர் அவர்கள் 80 நாட்களில் 28 கடல் கடந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என சின்குவா தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல கிழக்கு இந்திய பெருங்கடலில் மாறும் செயல்முறைகள் பொருள் சுழற்சி மற்றும் உயிர் புவியியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு போன்ற விடயங்கள் குறித்த இந்த ஆராய்ச்சியின் போது கவனம் செலுத்தப்படும்.

எனினும் இந்துஸ்தான் டைம்சின் செய்தியொன்று இந்த கப்பல் இரண்டு நோக்கங்களை கொண்டது இந்த கப்பல் கடல்சார் ஆராய்ச்சிக்கு மாத்திரமில்லை இந்து சமுத்திரத்தில் எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிகளை பயன்படுத்துவதற்கான கடல் அடி ஆராய்ச்சிக்கும் இது பயன்படும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கரிசனைகளையும் மீறி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக  இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் புவி இயற்பியல் ஆய்வுக்கப்பல் இந்திய பெருங்கடலில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது எனினும் சில இந்திய ஊடகங்கள் இந்த கப்பலை இராணுவநோக்கத்துடன் தொடர்புபடுத்துகின்றன என சிங்குவா பல்கலைகழகத்தின் தேசிய மூலோபாய நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின்  இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் சர்வதேச சர்வதேச கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவே இந்திய ஊடகங்கள் இவ்வாறு செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆராய்ச்சிக்கப்பலை பெரிதுபடுத்துவது இரு நாடுகளிற்கும் இடையிலான அரசியல் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அவர் இருதரப்பு உறவுகளை சாதகமான விதத்தில் கொண்டு செல்வதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் சி யான் ஆறு கப்பலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களிற்கு உட்பட்டவை இலங்கையின் சட்டங்களிற்கு உட்பட்டவை என தென்சீன கடலிற்கான தேசிய நிறுவகத்தின் உலக கடற்படை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர்  தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்ப்புகள் எதிர்பாராமல் திடீரென வெளியானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்திற்கு ஏன் அந்த கப்பல் ஆராய்ச்சிக்கு செல்கின்றது என தெரிவித்துள்ள தலைமை விஞ்ஞானி பிராந்திய சர்வதேச காலநிலை மாற்றத்தில் இந்து சமுத்திரம் முக்கிய பங்களிப்பு செய்கின்றது எனினும் இந்து சமுத்திரம் குறித்து போதிய ஆராய்ச்சிகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/167885

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷி யான் 6 உடன் ஆராய்ச்சி செய்ய நாராவுக்கு அனுமதி

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 உடன் ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் அனுமதி வழங்கப்பட்டதாக நாரா பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமல் தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் இதற்கான ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படும் என்றார்.

இலங்கை உள்ளிட்ட பிராந்திய காலநிலையில் கடல் அமைப்பின் தாக்கம் குறித்து இந்த ஆராய்ச்சி ஆய்வு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/278901

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் ஆராய்ச்சியை ஆரம்பிக்கின்றது சீன கப்பல்

Published By: RAJEEBAN    29 OCT, 2023 | 12:02 PM

image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கப்பல் நாராவுடன் இணைந்து நாளை முதல் இரண்டு நாட்களிற்கு ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.

சீனா கப்பலில் நாராவினதும் ருகுணுபல்கலைகழக விஞ்ஞானிகள் காணப்படுவார்கள் அவர்கள் கூட்டாக ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.

இலங்கை கடற்பரப்பின் மேற்குபகுதியில் இரண்டு நாட்களிற்கு இலங்கை விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்;ச்சியில் ஈடுபடுவதற்கு சி யான் 6 கப்பலிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி இரண்டு நாட்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும் ருகுணுபல்கலைகழக நாரா விஞ்ஞானிகளும் இதில் ஈடுபடுவார்கள் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கபிலபொன்சேகா மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

கப்பலில் இலங்கை கடற்படையினரும் Navy Hydrographic Service காணப்படுவார்கள் என தெரியவருவதாக மோர்னிங் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167996

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.