Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 ஆபத்தான மேம்பாலங்கள், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் - புனரமைக்க நிதி பற்றாக்குறையாம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 OCT, 2023 | 02:02 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

இருப்பினும் 200 கோடி ரூபாயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் இவற்றை புனரமைக்க போதுமான நிதி இல்லை எனவும்  நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு செல்லும் மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை புனர்நிர்மானம் செய்தவற்காக ஜனாதிபதி 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்ததுடன் அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ரயில் நிலைய மேம்பாலத்திற்கான தற்காலிக படிக்கட்டுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எமது நாட்டில் இவ்வாறான 30 ஆபத்தான மேம்பாலங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. ஆபத்தான பாலங்களை நிர்மாணிப்பதற்காக 200 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அடுத்த வருடத்துக்காக வரவு செலவுத்திட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களயேனும் நிர்மானிப்பதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்கும் போது முழு தொகையும் நிறைவடைந்து விடும். 

எஞ்சிய நிதி யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் வெளிநாட்டுக்கே செல்லும். கடந்த அரசாங்கங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது வெளிநாட்டு கடன்கள் கிடைப்பதில்லை. கடன் மறுசீரமைப்பு இடம் பெறும் வரையில் எதனையும் செய்ய முடியாது என்றார்.

இதன்போது ஊடகவியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

கேள்வி - இந்த பாலம் உடைந்து விழுந்தால் செய்வதற்கு ஒன்றுமில்லையல்லவா?

பதில் - இல்லை. நிதி இல்லையெனில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலமே வரியை அதிகரிப்பதாகும். வரியை அதிகரித்தால் மக்கள் அதனை சுமப்பது கடினமாகும்.

கேள்வி - தற்காலிக பாலத்தை திறந்து வைப்பதற்கு எதற்கு விழா நடத்தப்படுகிறது?

பதில் - இல்லை. யார் திறந்து வைத்தது. உழைக்கும் மக்களுக்கு அவர்களது பணி தொடர்பாக கௌரவம் உள்ளது. 7 நாட்களுக்குள் நிறைவு செய்துள்ளனர். அதில் திறப்பதில் உள்ள தவறு என்ன?ஊடகம் என்னும் போது புத்திசாலித்தனமாக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும். 

இதனை விட ஆபத்தான பாலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலம் ஆபத்தானது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இதனை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டின் உண்மைகளை ஊடகங்களே வெளிப்படுத்த வேண்டும்.

ஆபத்தான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் நாட்டில் 400 காணப்படுகின்றது. அவற்றுள் ஒன்றை திருத்துவதற்கு 40 முதல் 60 இலட்சம் ரூபா தேவைப்படும். பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மூலம் பல உயிர்ச்சேதங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/167950

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளன !

bandula-gunawardena.jpg

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மிகவும் சேதமடைந்ததாக இனங்காணப்பட்டுள்ள பாலங்களில் சில தற்போது தற்காலிக திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மிக மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை சீரமைப்பதற்கு பெரும் நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள் பல பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல பாலங்களும் காணப்படுவதாகவும் அவற்றை புனரமைப்பு செய்வதற்கான நிதி கோரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் பற்றாக்குறையான வருமானத்திலேயே இவற்றிக்கு நிதி ஒதுக்கவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/279799

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ள கூடடம் நாடடை ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். கொள்ளையடித்தல் பணம் எங்கே மிஞ்சும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

கொள்ள கூடடம் நாடடை ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். கொள்ளையடித்தல் பணம் எங்கே மிஞ்சும் ? 

7 லட்சம் (7,00,000) கிலோ அரிசியை இரண்டு களஞ்சிய சாலையில்  இருந்து 
களவு எடுத்து இருக்கின்ற நாடு இது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.