Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 OCT, 2023 | 10:05 AM
image

இலங்கை - யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர், கைதான அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/167978

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் நேற்று கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

https://athavannews.com/2023/1356111

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னாரில் கைதான 23 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

29 OCT, 2023 | 05:40 PM
image

(மன்னார் நிருபர்)

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் தலைமன்னார் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இன்று தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே, மாலை வேளையில் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் இந்த 23 பேரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அதனையடுத்து, திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளுக்குப் பின்னர் 23 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் சீன உளவு கப்பல் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, நேற்று (28) மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும் மூன்று ரோலர் படகுகளையும் கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_2842.jpg

img.jpg

IMG_2844.jpg

https://www.virakesari.lk/article/168021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.