Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Gaza Camp: `50,000 பேருக்கு 4 கழிவறைகள்... 4 மணி நேரமே தண்ணீர்!' - அமெரிக்க நர்ஸின் உருக்கமான பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``இப்போதும் என் இதயத் துடிப்பு காஸாவில்தான் இருக்கிறது. காஸாவில் என்னுடன் பணியாற்றிய பாலஸ்தீன மக்கள், என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்." - எமிலி கலாஹான்

 

வன்முறை எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல என்பது வரலாறு முழுவதும் உணர்த்தப்பட்டும், இன்றும் அதிகாரப் பசியால் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரின்போதே அதன் கொடூரங்களைப் பார்த்தோம். அதன் நீட்சியாகத் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரிலும், கற்பனைக்கும் எட்டாத வடுக்கள் பதிவாகிவருகின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் - காஸா தாக்குதல்
 
இஸ்ரேல் - காஸா தாக்குதல்

இதில், இந்தப் போர் எதற்காக நடக்கிறது என்றே அறியாத சிறுவர்கள், குழந்தைகளின் பலி எண்ணிக்கை மட்டுமே நான்காயிரத்தைத் தாண்டுகிறது. காஸாவில் எங்குத் திரும்பினாலும், மனித ஓலங்களும், அலறல்களும், ரத்த வாடையும், கண்ணீர் வற்றிய கண்களுமாக இருக்க... அங்கு தங்கியிருந்து காஸா மக்களுக்குச் சேவை செய்த அமெரிக்கச் செவிலியர் எமிலி கலாஹான் (Emily Callahan) என்பவர், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

 

அதில் அவர், ``நான் கடந்த புதன்கிழமைதான் காஸாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தேன். காஸாவில் இருந்த 26 நாள்களுக்குப் பிறகு இப்போதுதான் பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால், நான் இந்தப் பாதுகாப்பை உணரவேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட மக்களைவிட்டு வெகுதூரம் வரவேண்டியிருக்கிறது. அதனால், இந்தப் பாதுகாப்பு உணர்வில் எனக்கு மகிழ்ச்சியில்லை. நான் காஸாவில் தங்கிய 26 நாள்களில் 5 முறை பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டேன். நான் தங்கியிருந்த இடங்களில் ஒன்று கம்யூனிஸ்ட் பயிற்சி மையம்.

எமிலி கலாஹான் பேட்டி
 
எமிலி கலாஹான் பேட்டி

அங்கு 35,000 பாலஸ்தீன மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகத் தங்கியிருந்தார்கள். அங்கு தங்கியிருந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் முகம், கழுத்து, கை, கால் முழுவதும் பெரும் பெரும் தீக்காயங்கள் இருந்தன. மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பியிருந்ததால், சிகிச்சைப் பெற்றவர்களுக்கு ஓய்வுக்குக்கூட நேரமளிக்கப்படாமல், உடனே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

 

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் இடம்பெயர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் இருந்த ஒரு முகாமில் நான்கு கழிவறைகள் மட்டுமே இருந்தன. அதில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும். இதற்கிடையில், புதிய தீக்காயங்கள், காயங்கள், உடல் பாகம் துண்டிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைக்காக வந்துகொண்டே இருப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்களிடம் கொண்டு வந்து, `எங்கள் குழந்தைகளுக்கு தயவுசெய்து உதவ முடியுமா... எங்களிடம் எந்த மருந்துப் பொருளும் இல்லை' எனக் கெஞ்சுவார்கள்.

காஸா குழந்தைகள்
 
காஸா குழந்தைகள்

மருந்துப் பற்றாக்குறையாக இருந்தாலும், எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். மேலும், அன்புக்குரியவர்களை இழந்து, வாழ்வின்மீது பிடிப்பற்றுப்போன மக்கள் கோபமாகவே காணப்பட்டார்கள். அவர்கள் எங்களிடம் ஆவேசமாக நடந்துகொள்வார்கள். என்னைச் சுட்டிக்காட்டி 'இவள் அமெரிக்கக்காரி... துரோகி' எனக் கத்துவார்கள். சிலர் எங்களை இஸ்ரேலியர்களாக நினைத்துக்கொண்டு 'உதவுவதுபோல நடிக்கிறாயா..?' எனத் திட்டுவார்கள்.

 

அவர்களின் இந்த நிலையைப் பார்த்து வருத்தமாக இருக்கும். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த செவிலியர்கள் பலரும் எங்களுடன் பணியிலிருந்தார்கள். அவர்களிடம் சற்று ஓய்வெடுத்துக்கொள்ளும்படியும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும்படியும் கேட்டுக்கொள்வோம். ஆனால், அவர்கள், `உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. நீங்கள் உங்கள் உடல்நிலையைக் கவனித்து, ஓய்வெடுங்கள். நாங்கள் எங்கேயும் செல்ல முடியாது.

காஸா மக்கள்
 
காஸா மக்கள் Yasser Qudih

இந்தப் பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' எனக் கூறுவார்கள். நாம் இறக்கப்போகிறோம் எனத் தெரிந்தே, பாலஸ்தீனத்தின் மருத்துவர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகிறார்கள். அவர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள். நாங்கள் தங்கியிருந்த பகுதியைச் சுற்றிக் குண்டுவெடிப்புகள் நடந்தபோது, எங்களைப் பத்திரமாக அவர்கள்தான் பாதுகாத்தார்கள். ஒரு நொடிகூட எங்களைத் தனியாக விடவில்லை.

 

அவர்கள் இல்லையென்றால் இன்று எங்களை உயிருடன் பார்த்திருக்க முடியாது. எங்களுக்குச் சரியான, பாதுகாப்பான சூழல் இல்லை என்பதால் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பாலஸ்தீன ஊழியர்கள்தான் உயரதிகாரிகளிடம் பேசி நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடு செய்தனர். அந்த சமயத்தில், எங்களுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இந்த நம்பமுடியாத மனிதர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

காஸா அகதிகள் முகாமைத் தாக்கிய  இஸ்ரேல்
 
காஸா அகதிகள் முகாமைத் தாக்கிய இஸ்ரேல் அல்ஜசீரா

அவர்கள் தங்கள் பாதுகாப்பு, தண்ணீர் பற்றாக்குறை, உணவுச் சிக்கல் என எதைப்பற்றியும் கவலையில்லாமல், எங்களைப் பாதுகாப்பாக அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்குக் கடுமையாகப் போராடினார்கள். அவர்களையும் எங்களுடன் வந்துவிடும்படிக் கேட்டோம். அதற்கு அவர்கள், `இது எங்கள் சமூகம், எங்கள் குடும்பம், இவர்கள் எங்கள் நண்பர்கள், இஸ்ரேலியர்கள் எங்களைக் கொல்லப் போகிறார்களானால், நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்றப் போகிறோம். அதற்கு நாங்கள் இங்கே இருந்தாக வேண்டும்' என உறுதியுடன் கூறினார்கள்.

 
இப்போதும் என் இதயத் துடிப்பு காஸாவில்தான் இருக்கிறது. காஸாவில் என்னுடன் பணியாற்றிய பாலஸ்தீன மக்கள், என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்" என நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்திருக்கிறார்.
 
Gaza Camp: `50,000 பேருக்கு 4 கழிவறைகள்... 4 மணி நேரமே தண்ணீர்!' - அமெரிக்க நர்ஸின் உருக்கமான பேட்டி | American nurse shares her experience on war-torn Gaza Relief Camps - Vikatan
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் வலியையும் உளவியல் தாக்கத்தையும் மட்டுமே தரும் ......அதனிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.