Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் - ஆயிரக்கணக்கான மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN     12 NOV, 2023 | 12:02 PM

image

அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இடம்பெற்ற பாலஸ்தீனியர்கள் சார்பு ஆர்ப்பாட்டங்களில் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளனர்.

இதேவேளை சிட்னியில் பணயக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இஸ்ரேல ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக அவுஸ்திரேலியாவில் வார இறுதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை சிட்னி மெல்பேர்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிரிஸ்பேர்னிலும் பேரணி இடம்பெற்றுள்ளது. 

aus_pale_rally.jpg

காசாவை ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மரணபூமி என வைத்தியர்கள் வர்ணித்துள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யுத்தத்தை தடுப்பதற்கான மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மார்கிரட் பீவிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களிற்கு முன்னர் தீக்கிரையான உணவகத்தின் உரிமையாளர் தனது உணவகம் தீக்கிரையாக்கப்படலாம் என தனது பணியாளர்களிற்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது என  தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் பேரணியில் விக்டோரியாவின் கிறீன்ஸ் கட்சியின் தலைவர் சமந்தா இரட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மெல்பேர்னின் ஸ்வான்ஸ்டொன் வீதியை நோக்கி பேரணியாக சென்றவர்கள் யுத்தநிறுத்தம் சுதந்திர பாலஸ்தீனம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  கோசங்களை எழுப்பியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/169101

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய கப்பலின் வருகைக்கு எதிராக சிட்னியில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Published By: RAJEEBAN     12 NOV, 2023 | 12:37 PM

image

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் பொட்டனி துறைமுகத்தில்  திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின் சரக்கு கப்பலின் வருகையை தடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் கரையில் நின்று கொடிகளை ஏந்தி கோசங்களை எழுப்பியஅதேவேளை ஏனையவர்கள் கடலிற்குள் இறங்கி இஸ்ரேலிய கப்பல் வரவுள்ள பகுதியை நோக்கி சென்றனர்.

aus_port_pro.jpg

சிட்னியின் பலஸ்தீனத்திற்கான நீதி இயக்கமும் பலஸ்தீனத்திற்கான தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

aus_port_pro1.jpg

இது இஸ்ரேலிய கப்பல்களின் வருகைக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் நிறுவனம் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை கொண்டு செல்கின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொட்டனி துறைமுகத்திற்கு கப்பல் வரும் ஒவ்வொரு தடவையும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

aus_port_pro2.jpg

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் துறைமுகங்கள் உள்ளன இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு துறைமுகத்திலும் நாங்கள் போராடலாம் அவர்களை மண்டியிடச்செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை பொருளாதார ரீதியாக தாக்க தொடங்குங்கள் அது அவர்களை காயப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வேளை கப்பல் அந்த பகுதியில் இல்லை எனவும் அதன் வருகை தாமதமாகியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/169105

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.