Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருளாதார வங்குரோத்து நிலைக்கு அதிக கடன் பெற்றமை பிரதான காரணமாகும் - சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 NOV, 2023 | 01:53 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கடன் வழங்கி எம்மை நசுக்கி இந்து சமூத்திரத்தின் மூலோபாய நன்மைகளை பெற்றுக்கொள்ளவே மேற்கத்தேய நாடுகள் முயற்சிக்கின்றன.

இந்த கடன்கள் மூலம் அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறான ஒன்று தேவையில்லை. இதுவும் பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும்  சர்வதேச அரங்கில் எமது கோட்பாடுகளுக்கு அமைய ஆற்றல் மிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எம்மை நசுக்கி, இல்லாமல் செய்து இந்து சமூத்திரத்தின் மூலோபாய நன்மைகளை பெற்றுக் கொள்ளவே மேற்கத்தைய நாடுகள் முயற்சிக்கின்றன.

தற்போது அந்த நாடுகள் பயன்படுத்தும் மூலோபாயங்கள் முன்னரை விட வேறுபட்டவை. இன்று அவற்றை ஆக்கிரமிப்பு என கூறுவது இல்லை. அதனை கடன் வழங்குதல் என குறிப்பிடுகின்றனர்.

இரு நிபந்தனைகளுடன் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் இலகுவானதாக இருந்த போதிலும் அதனால் நாம் பொருளாதார ரீதியாக நசுக்கப்படுகின்றோம்.

 அதற்கு மற்றுமொரு பெயரே அபிவிருத்திக்கான முதலீடு. அபிவிருத்திக்கான முதலீடுகள் இரண்டு வகைப்படும். ஒன்று மிகவும் தாராளமானவர்கள். 

இந்த தாராளமானவர்கள் அபிவிருத்திக்கு அதிக கடன்களை வழங்கி நாட்டை மேம்படுத்த உதவுகின்றனர். மற்றைய பிரிவினர் எமக்கு தேவையான நிதியை கோரிய உடனேயே வழங்குபவர்கள். 

இந்த கடனுக்கு அதிக வட்டி வீதம் அறவிடப்படுகிறது. இதன் மூலம் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறான ஒன்று தேவையில்லை. இதுவே பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணமாகும். 

எமது சர்வதேச கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச அரங்கில் எமது கோட்பாடுகளுக்கு அமைய ஆற்றல் மிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும். 

தேசிய வளங்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.எமது கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/169106

இவரை என்ன காரணத்திற்க்காக தமிழ் பத்திரிகைகள்  கிழமைக்கு ஒரு தடவை முகப்பு பக்கத்தில் செய்தி போட்டு ஞாபகப்படுத்துகிறவவை?

இலங்கை அரசியலில் அவ்வளவு செல்வாக்கு செலுத்தும் நபரா இவர்? 

Edited by சீனித்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாக்கும். அதே நிலைமைதான். 

1 hour ago, Cruso said:

இப்ப மட்டும் என்னவாக்கும். அதே நிலைமைதான். 

விளக்கமாக சொல்ல முடியுமா? உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கின்றேன்.

இன்று சுதந்திர கட்சியில் இவரது பங்கு என்னது? அல்லது கட்சி அரசியலில் இவரது இன்றைய பங்கு எத்தகையது? அல்லது வேறு எந்த வகையில் இவர் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சீனித்தம்பி said:

விளக்கமாக சொல்ல முடியுமா? உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கின்றேன்.

இன்று சுதந்திர கட்சியில் இவரது பங்கு என்னது? அல்லது கட்சி அரசியலில் இவரது இன்றைய பங்கு எத்தகையது? அல்லது வேறு எந்த வகையில் இவர் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்?

நான் எழுதியது உங்களது கருத்துக்கு அல்ல. பொருளாதார வங்குரோத்துக்கு அதிக கடன் வாங்குவது பற்றி அம்மையார் கூறி இருந்தார். இப்போதும் அதுதான் நடக்கின்றது. அதட்குக்குத்தான் பதில். 


இவரை இப்போது சுதந்திர கட்சியில் இருந்து நீக்கிவிடடார்கள். அவருக்கு எதுவித செல்வாக்கும் அங்கு இல்லை. இருந்தாலும் சில பழைய அரசியல் விசுவாசிகள் அவருடன் இருந்தாலும் பெரிதாக அரசியலில் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போது இடைக்கிடை அரசியல் கூட்ட்ங்களில் பங்கு பெற்றாலும் ஓய்வு நிலை அரசியலில்தான் இருக்கிறார். சிங்கள இனவாதம் மற்றவர்களைப்போல் இவரிடம் இல்லாவிடடாலும் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தர விட்டு விடடார். இனி இவரது மகன் விமுக்தி அரசியலுக்கு வந்தால் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரலாம். மற்றப்படி அவரது வயதும் , அரசியல் செல்வாக்கும் அவரை இயங்குநிலையில் வைக்க சந்தர்ப்பம் குறைவு. ஆனாலும் ராஜபக்சேயை எதிர்ப்பதில் மிகவும் தீவிரமானவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.