Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வழக்குகளில் தொடர்புடையவர் புழல் சிறையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Freelancer   / 2023 நவம்பர் 13 , மு.ப. 01:24 - 0      - 23pocket sharing button

இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில்  தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி  வந்திறங்கிய நிலையில் கைது செய்த மரைன் பொலிஸார்  அவரை சென்னை புழல் சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார்,  சனிக்கிழமை (11) காலை  ஈடுபட்டு வந்தனர்.

அப்போது  தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.

இதனால்  சந்தேகமடைந்த மரைன் பொலிஸார், மண்டபம்  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை சேர்ந்த  ஜெயராசா என தெரிய வந்தது.

 இதையடுத்து அவரிடம் மத்திய மாநில உளவுத்துறை  அதிகாரிகள் மற்றும் மரைன் பொலிஸார் ஜெயராசாவிடம் விசாரணை நடத்திய போது அவர் மீது இலங்கை சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை  பொலிஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் பல குற்ற பின்னணி வழக்குகள் இருக்கின்றன. 

 இவரை இலங்கை பொலிஸார் கைது செய்து சிறை தண்டனை பெற்று சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதால் இலங்கையிலிருந்து தப்பித்து  இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து படகு ஒன்றில் வௌ்ளிக்கிழமை  (10) மாலை சுமார் 4 மணியளவில் இலங்கை மன்னார் -பேசாலை  கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளதாக விசாரணையில் ஜெயராசா தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து  இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கடல் வழியாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தது தெரிய வந்ததால் அவர் மீது மண்டபம் மரைன் காவல் நிலைய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக, வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் அவரை சென்னை  புழல் சிறையில் அடைப்பதற்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையின் குற்றப் பின்னணி உள்ள நபர் ஒருவர் சட்டவிரோதமாக  தமிழகத்திற்குள் ஊடுருவி அகதிகள்  போர்வையில் தமிழக அகதிகள் முகாமில் பதுங்கி  இருப்பதற்காக தனுஷ்கோடி வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tamilmirror Online || வழக்குகளில் தொடர்புடையவர் புழல் சிறையில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.