Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

725அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லாத அவல நிலை

Featured Replies

Sunday September 23 2007 00:16 IST

725 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லாத அவல நிலை

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

விழுப்புரம், செப். 23: தமிழகத்தில் 725 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்க முதுகலை தமிழாசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் தமிழ் மொழி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆ.வ. அண்ணாமலை தெரிவித்தார்.

தினமணி செய்தியாளருக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 725 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் இதுவரை முதுகலை தமிழாசிரியர்களை அரசு நியமிக்கவில்லை. இதனால் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்காத காரணத்தால், இவர்கள் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தாய் மொழியில் அனைத்து பாடங்களை படிக்க வேண்டிய மாணவர்கள், தனது மொழியை கற்கக்கூட இயலாத நிலையில் தமிழ் மொழியின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. இந்த பணியிடங்களை நிரப்பிய அரசு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே நியமித்தது.

தமிழ்ப் பாடத்தை கற்பிக்க தமிழாசிரியர்களை நியமிப்பதில் அரசும், கல்வித்துறை அலுவலர்களும் ஆர்வம் காட்டவில்லை.

ஆகவே இனிமேல் ஏற்படும் காலியிடங்களில் தமிழாசிரியர்களையும், வரலாற்று ஆசிரியயர்களையும் நியமிக்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சமமான பதவியை ஏற்படுத்தி, அதில் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

தமிழ் மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த அபாயரமான நிலையைப் போக்க, தமிழக முதல்வர் தமிழாசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண தனி கவனம் செலுத்த வேண்டும். திருச்சியில் இம்மாதம் 9 ஆம் தேதி நடந்த எங்களது அமைப்பின் மாநில பொதுக்குழுவில், இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பியுள்ளோம்.

நியாயமான இக்கோரிக்கைகளை அரசுக்கு பலமுறை தெரிவித்துள்ளோம். அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், டிசம்பர் மாதத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமும், 2008 ஜனவரி மாதம் 1-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளோம் என்றார் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.