Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்கு வழக்கு போட்டால்: அமைச்சர் பிரசன்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_63c7c8698b.jpg  

கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனுரகுமார திஸாநாயக்க (ஜே.வி.பி)-  சபாநாயகர் அவர்களே, பொருளாதார சீர்கேடு தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் கிரிக்கெட் பிரச்சினை பற்றி பேசுகிறேன். கிரிக்கெட் நிர்வாக சபை பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட பணியின் அடிப்படையில், கோப் குழு சில பகுதிகள் மீது விசாரணை நடத்தலாம், ஆனால் அனைத்து பகுதிகளிலும் அல்ல. தற்போது கோப் குழு தலைவர் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் நிர்வாக சபையுடன் தனக்கு ஏதாவது ஒப்பந்தம் இருப்பதாக ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அது செய்யவில்லை. இந்த தலைவரின் எந்த விசாரணையிலும் பாராளுமன்றம் திருப்தி அடையவில்லை. எனவே இந்த விசாரணைக்கு வேறு தலைவரையாவது நியமிக்க உத்தரவிடுங்கள்.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஜயமஹ (S.J.B) -   சபாநாயகர் அவர்களே, பொருளாதார சீர்கேடு பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், உயர் நீதிமன்றம் அது பற்றிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதைப் பற்றி நான் பேச மாட்டேன். கோப் குழு தலைவரின் இருக்கையில் அமர்ந்திருந்து முன்நோக்கி பார்த்தபோது கிரிக்கெட் நிறுவனத் தலைவர் நேராக நின்று கொண்டிருந்தார். தலைவர் 80 டிகிரி முதல் 115 டிகிரி வரை கடிகார திசையில் அமர்ந்திருந்தார். கோப் குழுவின் தலைவர் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருக்கு கை சமிக்ஞை செய்தார்.

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) -  சபாநாயகர் அவர்களே, கிரிக்கெட் சபை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஒரு விதமாகப் பேசினர். பொருளாதார நெருக்கடி பிரச்சினையை இன்னொரு வகையில் பேசினர். எதிர்க்கட்சிகள் இரண்டு தீர்ப்புகளைப் பற்றி இரண்டு விதமாகப் பேசுகின்றனர். இது நாட்டுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் நீதித்துறையும் விமர்சிக்கப்படுகிறது. சாதகமான முடிவு கிடைத்தால் அதை வெளியில் காட்ட  முயல்கின்றனர்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) - நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாக மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க எங்களுக்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) – நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள்.   சபாநாயகர் அவர்களே, ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது. ஆனால் யாரும் வழக்கு தொடரவில்லை. வழக்கு போட்டால் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று சொல்வார்கள். மேலும், 88/89 இல் அரச சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வங்கிக் கொள்ளை, கொலைகள் என வழக்குப் பதிவு செய்தால், அவை பொருளாதாரத்தையும் பாதித்ததாகச் சொல்லப்படும். எனவே இதைப் பற்றி தவறாகச் சொல்ல வேண்டாம்.

Tamilmirror Online || புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்கு வழக்கு போட்டால்: அமைச்சர் பிரசன்ன

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஆயுதம் கொடுத்தார்கள். இவர்கள் பணம் கொடுத்தார்கள். எனவே இரண்டு பேருமே சந்தர்ப்பவாதிகள்தான். எல்லாமே திருடர்களும், கொள்ளையர்களுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.