Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்”: கஜேந்திரகுமார் ஆதங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்”: கஜேந்திரகுமார் ஆதங்கம்!

வடக்கு, கிழக்கிற்கு என்று வரவு செலவுத் திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அதன்போது மேலும் கூறியுள்ளதாவது,

குறித்த பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளாதாரத்துடன் போட்டி போட முடியாத நிலையாக உள்ளது. ஆனாலும் எந்த விதத்திலேயும் ஒரு விசேட செயற்பாடு எதுவுமே நடைபெறவில்லை. இந்த விடயங்களை ராஜபக்ச தரப்பு காலத்தில் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் -அவர்களுடைய மனோநிலை முற்றிலும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சி புரிந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சியில் இருந்தும் கூட முழுமையாக ரணில் தரப்பை ஆதரித்துக் கொண்டிருந்த காலத்தில் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு என விசேடமாக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற விடயங்களை கூட்டிகாட்டினோம்.

நாங்கள் கேட்பது ஒரு விசேட ஏற்பாட்டையேயாகும். அவ்வாறு வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதமும் வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட்டிராத நிலையில் – மக்கள் மட்டத்தில் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களால் தமது தொகுதிகளுக்கு போகமுடியவில்லை என்றும், அப்படிப்பட்ட ஒரு நிலையை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் எனவும் அரசாங்கத்திடம் கூறிய போது, நாங்கள் வரவு செலவு திட்டத்தில் இந்த விடயத்தை சேர்க்காமல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் விசேட செயற்திட்டத்தினை செய்து வடக்கு கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்று 2015 இல் குறிப்பிட்டார்கள்.

வெறுமனே சில நூறு மில்லியன்களை தங்களது எடுபிடிகளுக்கும், தமது அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் வழங்கி தமது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக கொடுக்கப்பட்டது.

அந்த நிதிகள் தாங்கள் ஏதோ செய்வதுபோல காட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதே தவிர, போரால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை.
அப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இந்த வரவு செலவுத் திட்டத்தில் முதற் தடவையாக வடக்கு கிழக்கிற்கு 4 தலைப்புக்களின் கீழ் – பூநகரி சுண்ணக்கல் செயற்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 1 பில்லியன் ஒதுக்கீடு, பாலியாறு தண்ணீர் திட்டம், 2500 மில்லியன் வீட்டுத்திட்டத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 0.11 வீதமேயாகும். இந்த நிலையில்தான் இனப்பிரச்சினைக்கு காணி பொலிஸ் அதிகாரமற்ற மாகாண சபை 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக உலகத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைக்குப் போனவர்கள் இங்கே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்குப் போனவர்களிடம் ஏதோ செய்யப்போவதாக கூறிய நிலையில், அவர்களும் ஏதோ தரப்போகிறார்கள் என்றே கதைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வடமாகாணத்துக்கு ஒரு வீதம் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கும் 1.17 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாகாணம் ஊவா மாகாணத்துக்கு அடுத்து அடிநிலையில் இருக்கிறது. வடக்கு மாகாணம் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும் உள்ளது.

இதேவேளை இன பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்போவதாக சொல்லும் நிலையில் கூட வடக்கு கிழக்குக்கான விசேட கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றால் அரசாங்கத்தின் மனோநிலையை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம்.

இந்த அரசாங்கத்தினுடைய தற்போதைய வரவு செலவுத் திட்டம் ஒரு கற்பனையான வரவு செலவுத் திட்டம் எனவும், உரியபட்சம் அவர்கள் கூறியுள்ள இலக்குகளை அடையக்கூடிய வகையில் அமையவில்லை என்றும் பிட்ச் ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறித்த வரவு செலவுத்திட்டம் கற்பனையானது மற்றும் சாத்தியமற்றது என ஆய்வுகள் சொல்லப்படுகின்ற நிலையில், ஒப்புக்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஓதுக்கீடுகள் கூட கிடைக்கும் என்பது ஐமிச்சமானதாகும்.

இப்படிப்பட்ட பின்னணியில் , இந்த விடயங்கள்; தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் இடத்தில், வரவு செலவுத்திட்டம் கற்பனையாக பார்க்கப்படும் நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்கப்படும் நிலையில் இல்லை. இதனால் எமது அமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கிறது என கூறியுள்ளார்.

 

http://www.samakalam.com/வரவு-செலவுத்-திட்டத்தில-3/

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது எம்மாற்றப்படவில்லை என்று கூறினால் கொஞ்சம் நல்லாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் தமிழர் இருப்பை அழிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விசனம்

24 NOV, 2023 | 09:51 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சாக பாதுகாப்பு  அமைச்சு உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் அடையாளங்களை இல்லாதொழிக்கவும்  பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை, அதனை செய்தது இலங்கையின் முப்படை என்றே நாங்கள் அன்று முதல் இன்று வரை கூறி வருகிறோம்.

இலங்கையில் இன்று யுத்தமில்லை ஆயுத முரண்பாடுகள்  ஏதும்  இல்லை. எனினும் இலங்கை இன ரீதியில் பிளவுப்பட்டே உள்ளது.காலம் காலமாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

பொருளாதார கடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெருமளவான நிதியை பாதுகாப்புக்கு செலவழிக்க கூடாது. புலிகள் இருந்த காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று கூறி நிதிகளை செலவிட்டீர்கள். ஆனால் இன்று எதற்காக செலவிடுகின்றீர்கள். தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்க அதனை வழங்க நீங்கள் தயாரில்லை.

தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதை உங்களினதும் உங்களின் படைகளினதும் நோக்கம் அதனை முன்னெடுக்கவே இனவாத முரண்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள். அதற்காகவே பாதுகாப்பு என்ற பெயரில் படைகளுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு  ஒதுக்கப்படும் சம்பளத்தில் 48 சதவீதம் படைகளுக்கே வழங்கப்படுகிறது. கல்வி அமைச்சினால் முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மாத சம்பளமாக 6 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும் நிலையில் வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாக பணி புரியும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு மாதாந்த சம்பளமாக 30 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.இது எந்த வகையில் நியாயம்.

தமிழ் மக்களின் வர்த்தகம்,விவசாயம் என்பன இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முடியாத நிலையில் கடற்படை உள்ளது.

பொலிஸார்  தெற்கில், ஒரு நிலைப்பாட்டையும் வடக்கில் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கிறார்கள். இவ்வாறான நிலையில் நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்.

தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வெறுக்கத்தக்க அமைச்சாக பாதுகாப்பு அமைச்சே உள்ளது. யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகுகின்ற போதும் உங்கள் நடவடிக்கைகளில் நீங்கள் எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. இவ்வாறான நிலை இருக்கும் வரை நாட்டில் இனப்பிரச்சினையும் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/170108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.