Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் பாலசுகுமார்

Featured Replies

suku1.jpg

suku2.jpg

suku3.jpg

suku4.jpg

நன்றி: விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்கு உத்தரவாதமுள்ள வாழ்க்கை வாழும் புலம்பெயர் உறவுகள், சொந்த நாட்டில் உள்ள சகோதரர்களிடம் இருந்து பாடம்(நம் பண்பாட்டைத் தொடர்ந்து பேணுவது பற்றி) கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லிpயருப்பது நியாயமான ஒரு கருத்து.

  • தொடங்கியவர்

உயிருக்கு உத்தரவாதமுள்ள வாழ்க்கை வாழும் புலம்பெயர் உறவுகள், சொந்த நாட்டில் உள்ள சகோதரர்களிடம் இருந்து பாடம்(நம் பண்பாட்டைத் தொடர்ந்து பேணுவது பற்றி) கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லிpயருப்பது நியாயமான ஒரு கருத்து.

பாலசுகுமார் தமிழரின் பண்பாடு பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். மதச் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கவில்லை. குறிப்பாக அவர் தமிழரின் பாரம்பரிய கலைகள் பற்றியதாகத் தான் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு அவருடைய கருத்தில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை. ஒரு போர்ச்சூழலில், அதுவும் இன அடிப்படையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் தமது இருப்பை நிலைநிறுத்தவேண்டிய தேவை அங்குள்ள மக்களுக்கு உள்ளது. அதன்காரணமாக தமது பாரம்பரிய கலைகளை தேடிய அவர்களது ஆர்வம் இயல்பானது தான். அத்தோடு வெளியுலகுடனான தொடர்புகள் பெருமளவில் இல்லாததால் இது இன்னமும் சாத்தியமானதுதான்.

ஆனால் வெளியுடனான தொடர்புகள் உள்ள நிலையிலும், பல்வேறுபட்ட கலாசார சூழல்களுக்கு மத்தியிலும் தமது மொழியையும் பண்பாட்டையும் கலையையும் பின்பற்றும் புலம்பெயர் தமிழர்களை உண்மையில் பாராட்டவே வேண்டும். இப்படியான சூழலிலும், அதாவது மிகச்சுலபமாக அந்நிய சக்திகளால் உள்வாங்கப்படக்கூடிய சூழலிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கிற முயற்சிகள் வியக்கதக்கன. சர்வதேச சமூகத்துக்கு நமது பண்பாட்டையும் கலைகளையும் எடுத்துச் செல்லும் முயற்சிகள் கூட நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.

பிரான்சில் நடந்த பொங்கல் விழாவில் சிலம்புக்கலை, கோலமிடுதல் போன்றன நிகழ்வுகளாக செய்து காட்டப்பட்டன. இதுபோன்று பலவும் உள்ளன. ஆனால் என்ன... எது எமது பண்பாடு எது எமது கலை என்பதில் சரியான வரையறையும் தெளிவும் இல்லாத போக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் உள்ளது. சரியான வழிகாட்டல்கள் குறைவாக உள்ளது. இந்திய இந்துத்துவ மேலாதிக்கத்தாலும், ஆங்கில காலனித்துவ தாக்கத்தாலும் இன்னும் சூழப்பட்டவர்களாகவே இருக்கிறோம். அவற்றிலிருந்து எமது கலை, எமது பண்பாடு என்ற தனித்துவத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சரியான வழிகாட்டல்கள் எமக்கு புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் வேண்டும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் நானும் இங்கே பண்பாட்டைப் பேணுவது பற்றி அவர் சொன்ன கருத்தைத் தானே சொல்கின்றேன். ஏன் அதை மதச் சார்பாக நான் சொல்வதாகக் கருதுகின்றீர்கள்.

*** நான் எழுதுவது எல்லாம் மதம் பற்றியதாகவே இருக்கும் என்று அபிப்பிராயம் கொள்ள வேண்டாம் இளைஞன்.

யுத்த சூழ்நிலையில் அடுத்த நிலை வாழ்வைப் பற்றிச் சிந்திக்க முடியாமல் வாழ்கின்ற தாயகத்து உறவுகள், கலைகளைப் பேணுகின்ற நிலமைக்கும், எல்லா வசதிகளும் நிரம்பப்பெற்ற சூழ்நிலையில் புலத்தில் வாழ்கின்ற எம்மவர்களில் ஓரிரண்டு பேரைத் தவிர மிகுதி அடிபட்டுப் போகின்ற நிலை உள்ளபோது தாயகத்தில் உள்ளவர்கள் ஒருபடி மேலானவர்கள் தான்.

நாமும் இருப்பைத் தொலைத்து விட்டு, நாம் வசிக்கின்ற இனத்தோடு இனமாக மறைந்து விடுவோமாக இருந்தால் இத்தனை காலப் போராட்டமும் தேவையில்லாத ஒன்றாகவே மாறும்.

நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை அதற்குரிய பிரிவில் எழுதுங்கள். தலைப்புக்கு அவசியமற்ற வலிந்த திணிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளவும். -வலைஞன்

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

  • தொடங்கியவர்

(நம் பண்பாட்டைத் தொடர்ந்து பேணுவது பற்றி)

நானும் நீங்கள் மதச் சார்பாக சொன்னதாகச் சொல்லவில்லை. நீங்கள் "பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்" என்று பாலசுகுமார் அவர்கள் சொன்னதை, "பண்பாடு பேணுவது பற்றி" என்று பொருள்விளக்கம் கொடுத்ததால், தமிழ்ப் பண்பாடு என்பதற்கு "(இந்து) மதச் சடங்குகள் சம்பிரதாயங்கள்" என்கிறதாய் யாரும் தவறாக அல்லது குறுகிற பொருள் விளக்கம் கொண்டுவிடக்கூடாது என்பதனாலேயே அதனைச் சுட்டிக்காட்டினேன்.

மற்றும்படி: குடிக்கிறதுக்கு வழியில்லாதவன் குடிக்காமல் இருப்பதற்கும், குடிக்கிறதுக்கு வசதியிருக்கிறவன் குடிக்காமலிருப்பதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. அது போன்றதுதான் களத்தில் நிற்கும் தமிழர்களுக்கும், புலத்தில் வாழும் தமிழர்களுக்குமான வேறுபாடு. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.