Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகர்வலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நகர்வலம் …..

எனது முகத்தில் அப்படி என்னதான் வித்தியாசமாக இருக்கின்றதோ நானறியேன். இதனை பற்றி கதை வரும் நேரங்களில் மேடம் வெகு தெளிவாக சொல்வார் " ஏமாளி என்று முகத்தில அப்பிடியே எழுதி ஒட்டி வைச்சிருக்கு , கண்ணை நல்லா துடைச்சிட்டு , ஆடியில வடிவா பாருங்க , தெரியும் " எண்டு ..

வேறொன்றுமில்லை, நீலம் தான் என் நிறம் என்று வானம் பல நாட்களுக்கு பிறகு சற்றே ஞாபகப்படுத்த , காலையில் எழுந்து அண்டை அயல் இடங்களில் சனி காலை என்னதான் நடக்கின்றது என பார்த்து விடலாம் என கிளம்பினேன் .

நடந்து கொண்டிருக்கையில் - நடை பாதை நடப்பதற்கே - எனும் மாநகராட்சியின் அறிவித்தலுக்கு விருந்தாளி நாமாவது மதிப்பு கொடுப்பேமே என்று -    நண்பர் ஒருவர் வாட்(செ)ப்பினார்.

என்ன செய்து கொண்டிருக்கிறேன் என வினாவினார் .

நகர்வலம் பற்றி சொன்னேன். அவர் சென்னையில் பலகாலமாக இருக்கும் நண்பரொருவர் .

" இன்றைய பத்திரிகைகள் பார்த்தாயா " - நண்பர் .

"இல்லையே , ஏன் , என்ன விடயம் " - இது நான்

" இல்லை , சென்னை வெள்ளத்தில் நாய்கள் பல செத்து மிதக்கின்றன  என்று போட்டிருக்கிறார்கள் , காரணம் தெரியுமோ " - என்று கேட்டார் நண்பர் .

" இல்லையே , தெரியவில்லையே " -நான்

" நடந்து போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்கின்றாயே , கண்ணை விரித்து ஏதாவது வித்தியாசமாக தெரிகின்றதா என்று பார்த்துச்  சொல்  என்றார் நண்பர் .

கண்ணை விரித்தேன் , கண்ணாடியைக் கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து சுற்று முற்றும் பார்த்தேன் .

" ஆட்டோ வேணுங்களா சார் " - இடையில் பூஜை வேளையில் கரடி தொல்லை வேறு.

"இல்லையப்பா , இது வேறு பார்வை " என்று முதல் சொல்லை அவருக்கும் மீதியை எனக்குமாக  சொல்லிக் கொண்டு , மீண்டும் மீண்டும் பார்த்தேன் .

கண்ணில் பட்டு வித்தியாசமான  காட்சிகள் சில  உண்மையிலேயும் மனத்தில் உறைத்தன.

மின் கம்பங்களும்  , தந்திக் கம்பங்களும் . 

அவற்றின்  மீது  சகட்டு மேனிக்கு மேலேயும் , கீழேயும் , குறுக்காகவும் , நெடுக்கிலும், பந்து பந்து போன்ற சுருள்களாக கம்பிகள் , வயர்கள் , பல வித நிறங்களில். நடைபாதையை குறுக்கறுத்து வெட்டி நிரப்பப்படாத கிடங்குகளுக்குள்   அந்த கம்பிகள் போவதும் வருவதுமான , நமது ஊரில் ( அதாங்க  அவுஸ்திரேலியா) காணக்கிடைக்காத காட்சிகள் கண் முன்னே விரிந்து நின்றன.

நண்பனிடம் கண்ட காட்சிகளை பற்றி சொன்னேன் .

' சென்னை வாசி ஆவதற்குரிய ஐம்பது வீத தகுதியை நீ அடைந்து விட்டாய் மகனே " என்ற நண்பர் தொடர்ந்தார் .

" அவற்றின் பக்கத்தில் போகாதே , போனாலும் தொட்டு விடாதே  எல்லாவற்றையும் விட மேலானது மழை காலங்களின் வெள்ளச் சாலைகளில் உல்லாச நடை தவிர்ப்பது" என்றார் நண்பர் .

இப்போதெல்லாம் மின்சக்தி  காவு கம்பிகளை நிலத்தின் கீழ் மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இணைப்புகள் கொடுக்கும் இடங்களில் வரும் பொருத்துக்களை உரிய முறையில் மேற்கொள்ளாமையால் , மழை நேரம் நீர் அந்த பொருத்துகளினுள் உட்புகுந்து மின்கசிவு ஏற்படுகின்றது மின்கசிவின் வீரியம் அந்த புள்ளியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும் . அந்த வரையறைக்குள் பிரவேசிக்கும் ஆட்களுக்கு ஏற்படும் அனுபவத்தைக் கொண்டு அந்த மின்கசிவை  கண்டு கொள்கிறார்கள் . வாயில்லா சீவன்களின் செத்து மிதத்தலை  கொண்டும்  இதனை அறிந்து கொள்கின்றார்கள் , என்று சொல்லி முடித்தார் நண்பர்.

வேர்த்து விறு விறுத்துப் போனேன் .

"சரியப்பா, கவனமாக இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு , வீடு திரும்புவோம் என்று பக்கத்து சந்தியை நோக்கி நடந்து வீதியை கடப்பதற்காக நின்றேன்.

"சார் , ஒரு நிமிடம் , இங்கே வருகிறீர்களா  மோட்டார் சைக்கிளில் இருந்தபடி ஆபிஸர் மாதிரி மதிக்கக் கூடிய ஒருவர் என்னை அழைத்தார். சந்தி நோக்கி , கடப்பதற்காக பச்சை விளக்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருப்பார்  போல தெரிந்தது

குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்த மின்கம்பிகளை படம் எடுத்ததை பார்த்திருப்பாரோ. இவற்றையெல்லாம் படம் எடுக்கக் கூடாதோ ஒருவேளை’ என்றெல்லாம் யோசித்தபடி அவரை நெருங்கினேன்.

" ஷார்ட்டா சொல்லிடறேன் , நான் ஒரு டயபடிக் பேஷண்ட் சார் , காலையிலே நாஸ்தா பண்ணல இன்னும் , பர்ஸை வேற வீட்டில விட்டிட்டு வந்திட்டேன், ஏதாவது ஹெல்ப் பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்" என்றாரே பார்க்கலாம் வாட்டசாட்டமாக இருந்த அந்த ஆபீசர் என்று நான் நினைத்த ஆசாமி.

சிறுவயதில் அம்புலிமாமா ஒழுங்காக வாசிப்பேன் . தன் முயற்சியில் சற்றும் தளராத .. என்று தொடங்கும் வரிகளில் எனக்கு அலாதிப் பிரியம்  அதில் எள்ளி நகைத்தது  என்றும் ஒரு வார்த்தைத் தொடர்   வரும் .

எனக்கு இப்போது கேட்கத் தொடங்கியது.

எள்ளிய நகைப்பல்லஅது ; கெக்கட்டம் விட்டு வரும் சிரிப்பு. மெது மெதுவே ஆரம்பித்து , படிப்படியாக உரப்பு கூடி , எனது மனத்திரையெங்கும் மிகுந்த சத்தத்துடன் எதிரொலித்தது அந்த சிரிப்பு .

என்ன , பழக்கமான சிரிப்பாக இருக்கிறதே என்று குனிந்து பார்த்தால் ,

" கண்ணாடியை கழட்டி,  நல்லா துடைச்சு , மீண்டும் போட்டிட்டு, பக்கத்தில இருக்கிற வெள்ளத்திலே உங்கட முகத்தைப் பாருங்க சார் , அங்கே  ஏமாளி , அசடு அப்பிடீன்னு எதாவது வார்த்தைகள் உங்கட நெத்தியில எழுதி ஒட்டியிருக்கா எண்டு பாருங்க சார்”  எண்டு சொல்லிக் கொண்டே அடக்க இயலாமல் பலத்த சத்தமாக கெக்கட்டம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார் மேடம் ...

பொற்கரையோன், 

2  டிசம்பர் 2023 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.