Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காப்புரிமையைக் காப்பாற்றிய நீதிமன்றத் தீர்ப்பு

Featured Replies

novartis240907uo1.png

நிறைய தருணங்களில் நீதிமன்றங்கள்தான் இந்தியாவின் ஜனநாயக, மற்றும் தற்சார்பு ரீதியான தார்மீக அடிப்படைகளைக் காப்பாற்றும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றன. கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பன்னாட்டு மருந்து நிறுவனம் தொடர்பான வழக்கொன்றில் வழங்கிய தீர்ப்பு, உலகநாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவர்டிஸ்’ என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கிளீவெக் (Gleevec) என்ற பெயரில் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை (இந்தியாவுக்குள்) செய்யும் உரிமையை காப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழங்குமாறும், சென்னையிலுள்ள மத்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்தது. இந்தியக் காப்புரிமை அலுவலகமோ, நோவர்டிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை, ‘‘காப்புரிமைச் சட்டத்தின்படி, காப்புரிமை பெறுவதற்குப் போதுமான தகுதிகளை இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பெற்றிருக்கவில்லை’’ என்று காரணம் காட்டி நிராகரித்துவிட்டது. ‘‘இந்திய காப்புரிமை அலுவலகத்தின் இந்த நிராகரிப்பு, உலக வர்த்தக அமைப்புடன் (World Trade organisation) இந்தியா செய்துகொண்டுள்ள வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை (Trade Related Intellectual property Rights TRIPS) ஒப்பந்தத்துக்கு எதிரானது. எங்கள் நிறுவனத்தின் மருந்துக்குக் காப்புரிமை வழங்கத் தடையாக இருக்கும், இந்திய காப்புரிமைச் சட்டத்தின் ‘3(d)’ பிரிவு தெளிவற்றதும், சந்தேகத்துக்கு இடமானதாகவும் உள்ளது. எனவே அந்தப் பிரிவு, இந்தியாவின் வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’’ என நோவர்டிஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஏறத்தாழ ஓராண்டு கால விசாரணைக்குப் பிறகு உயர்நீதிமன்றம், ‘‘சென்னையிலுள்ள இந்திய காப்பீட்டு உரிமை அலுவலகம், நோவர்டிஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்கு காப்புரிமை வழங்க மறுத்தது சரியானதுதான்’’ என்று கூறி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

உலகத்தையே அதிர வைத்துள்ள இந்திய காப்புரிமைச் சட்டம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் பிரபா தேவன் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

அப்படி என்ன இதில் வரலாற்று முக்கியத்துவம் அடங்கியுள்ளது?

நோவர்டிஸ் நிறுவனத்தின் வழக்கு வெறும் வணிகப் பரிவர்த்தனையை மட்டுமே உள்ளடக்கியது அல்ல!

இந்திய அரசியல் சட்டத்தின்படி அமைந்த காப்புரிமைச் சட்டத்தையே, செல்லாததாக அறிவிக்குமாறு ஓர் அந்நிய நிறுவனம், நம் நாட்டு நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர்கிறது. 1991_ம் ஆண்டுக்கு முன்பு இது போல ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய அரசியல் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கி, இந்திய நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இப்போதுதான் நாம் ‘தாராளவாதிகள்’ ஆகிவிட்டோமே! ‘உலக வர்த்தக அமைப்பின்’ உறுப்பினராக ஆகிவிட்டோம். ஒப்பந்தம் செய்துவிட்டோம். அதாவது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அதிகாரபூர்வ அடிமைகளாக ஆகிவிட்டோம்.

இனி இதுபோல இந்திய அரசியல் சட்டத்தை, இந்திய நீதிமன்றக் கூண்டுகளிலேயே ஏற்றி நிற்க வைத்து, அந்நிய நிறுவனங்கள் கேள்வி கேட்கும் காட்சியை, அடிக்கடி நாம் காணமுடியும்!

நோவர்டிஸ் நிறுவனத்தின் இந்த வழக்கின் பின்னணியில், மிக மோசமான, கவலைக்குரிய பல அம்சங்கள் அடங்கி இருக்கின்றன. காப்புரிமை என்பது, ஒரு நாட்டின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளை, வேறு எந்த நாடும் சொந்தம் கொண்டாடிவிடாமல் பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடு. தனிமனிதன் கண்டுபிடிப்புகளுக்கும் இது பொருந்தும். இருப்பினும், ஒரு நாட்டைச் சேர்ந்த தனி மனிதர் அல்லது நிறுவனத்தின் கண்டுபிடிப்பு, அந்த நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும், உரியதாகவும்தான் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரம்பரியமான இயற்கைச் செல்வங்களான வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை, ‘எங்கள் நாட்டு உற்பத்தி’ என்று அமெரிக்கா தட்டிப் பறிக்க முயன்ற சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்த நோவர்டிஸ் நிறுவனத்தின் வழக்கும் அதுபோன்றதுதான். ஏற்கெனவே மலிவான விலையில் புற்று நோய்க்கான மருந்து இந்தியாவில் கிடைத்துவரும் நிலையில், அந்த மருந்தை விட எந்த விதத்திலும் தரத்திலோ பயன்பாட்டிலோ மேம்பட்டதாக இல்லாத தங்களின் மருந்துக்குக் காப்புரிமையும் வணிக உரிமையும் வழங்கக் கோரி நோவர்டிஸ் நிறுவனம் அடம்பிடிப்பது அமெரிக்கத் தனமான அச்சுறுத்தலன்றி வேறு என்ன?

‘‘காப்புரிமை’’ என்ற இயற்கைச் செல்வங்களுக்கான அரசியல் சட்டரீதியான பாதுகாப்பைத் தகர்க்க முயல்வதற்கும், ஒரு நாட்டின் சுயசார்பு அல்லது இறையாண்மைத் தன்மையைச் சிதைப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இந்தத் துணிச்சல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்படி வந்தது? இந்த அளவுக்கு அவர்களுக்கு இடம் கொடுத்தது யார்?

இந்த அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள, இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் வரலாற்றையும், வளர்சிதை மாற்றத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் மருந்துகள் தயாரிப்பு மற்றும் செயல்முறைகளுக்கான ‘காப்புரிமை’ சட்டம், முதல் முதலாக 1911_ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதாக அறிய முடிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தக் காப்புரிமைச் சட்டம், இந்தியாவில் அடிப்படை மருந்துகளையோ, அவற்றின் இறுதி வடிவங்களையோ தயாரிப்பதைப் பெரிதும் அனுமதிக்கவில்லை.

அன்றைய இந்தியாவின் மருந்துத் தேவைகளில் 85 விழுக்காடு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. இப்படி இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை அவற்றுக்குக் காப்புரிமை வழங்கியதிலிருந்து 16 ஆண்டுகளுக்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க முடியாது. இந்த 16 ஆண்டுகளில் அந்த நிறுவனங்கள் போதிய வருவாய் ஈட்டவில்லை என்று கருதப்பட்டால், அந்தத் தடை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இப்படி இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லாத ஒரு காப்புரிமைச் சட்டம்தான் அப்போது இருந்துள்ளது.

சுதந்திரமடைந்த பிறகு, மருந்து உற்பத்தியில் மருந்துக்கும் கூட தற்சார்புக்கு இடமில்லாத இந்தியக் காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. உலகத்திலேயே மருந்துகள் அதிகவிலை விற்கும் நாடாக, அப்போதைய இந்தியா இருந்துள்ளது.

1970_ம் ஆண்டுதான் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தில் முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1883_ம் ஆண்டு ஏற்பட்ட ‘பாரிஸ் ஒப்பந்தம்’, உலகநாடுகள், அவரவர் தேவைக்கேற்ப அறிவுசார் சொத்துரிமை, மற்றும் வர்த்தக உரிமைகளைத் தீர்மானித்துக் கொள்ள வகை செய்தது.

இதன் அடிப்படையில்தான் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தில் 1970_ம் ஆண்டு மிக முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டன.

1970_ம் ஆண்டு இந்தியக் காப்புரிமைச் சட்டம் இரண்டு முக்கியமான திருத்தங்களைக் கொண்டதாக இருந்தது.

1. காப்புரிமை என்பது உற்பத்திப் பொருளுக்கு அல்ல; அதை உற்பத்தி செய்யும் செயல் முறைக்கே ஆகும். மேலும் ஒரு குறிப்பிட்ட மருந்து எந்தச் செய்முறையில் தயாரிக்கப்படுகிறதோ அந்தச் செய்முறைக்கு மட்டும்தான். இதனால் இந்திய நிறுவனங்கள் வெவ்வேறு செயல்முறையின் மூலம் குறைந்த விலையில் மருந்துகளைத் தயாரித்து காப்புரிமை பெற முடிந்தது.

2. காப்புரிமைக் காலம் என்பது, காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டதிலிருந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.