Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பெரும் மழை வெள்ளம் - துண்டிக்கப்பட்ட நகரங்கள் - கூரைகளின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்கள் - படையெடுக்கும் முதலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   18 DEC, 2023 | 01:20 PM

image
 

வடகுயின்ஸ்லாந்தில்பெரும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்கள் அவசர உதவியை கோரியுள்ளனர்.

aus_rain.jpg

குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான விநியோகங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவசர இராணுவ தலையீட்டிற்காக காத்திருக்கின்றனர் என டக்ளஸ் சயரின் மேயர்  தெரிவித்துள்ளார்.

குக்டவுன் முதல் இனிஸ்பெயில் வரை பல நகரங்கள் வெள்ள நீரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதான வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன 

aus_rain5.jpg

கெயர்ன்சின் மக்களை அவசர தேவைக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் தங்களை வெளியேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கெயர்ன்சின் விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.

aus_rain1.jpg

வுஜல் வுஜலில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புளும்பீல்ட் மற்றும் டெகாராவில் கூரைகளின் மீது சிக்கியிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

இங்காம் முதல் வுஜல் வுஜல் வரை வெள்ளநீரில் முதலைகள் காணப்பட்டுள்ளன.

மிகவும் கடினமான சூழ்நிலையில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக குயின்ஸ்லாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உங்களிற்கு நேற்றைய இரவு மிகவும் கடினமானது என்பது எங்களிற்கு தெரியும் எங்களின் வீரர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பாக வெளியேற முடியாதவர்களை வெளியேற்ற எங்களால் பயன்படுத்த முடிந்த அனைத்து படகுகளையும் பயன்படுத்தினோம், மேலும் உதவிகளை வழங்கிவருகின்றோம் என  பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் டக்ளஸ் சயரின் மேயர் மைக்கல் கெர் மூஸ்மானிற்கு அருகில் உள்ள மக்கள் அவசர இராணுவஉதவிக்காக காத்திருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளதுடன் பல பொதுமக்கள் மின்சாரமும் நீரும் இல்லாத நிலையில் உள்ளனர் அவசரமாக வெளியேற்ற வேண்டிய நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

aus_rain2.jpg

குயின்ஸ்லாந்தில் வெள்ளத்தில் மத்தியில் முதலை காணப்பட்டமை பெரும் அச்சத்தை ஏற்படு;த்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள தொலைதூர நகரமொன்றில் வெள்ளத்தின் மத்தியில் நீந்திவந்த முதலை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2.5 மீற்றர் நீளமான முதலையை மீட்டுள்ளதாக குயின்ஸ்லாந்தின் பூங்கா மற்றும் வனவிலங்கு சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் வெளியான பதிவை அடிப்படையாக வைத்தே தாங்கள் எச்சரிக்கை அடைந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

aus_rain3.jpg

ஹார்பூனை பயன்படுத்தி முதலையை பிடித்துள்ளோம் ஹார்பூன் முதலையின் தோலை தாக்கும் ஆனால் காயங்களை ஏற்படுத்தாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்பூனை பயன்படுத்துவது நேரடியான முறை எனினும் முதலைக்கு அருகில் அது நீரில் மறைவதற்கு முன்னர் செல்வதற்கு மிகுந்த துணிச்சல் அவசியம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

aus_rain4.jpg

https://www.virakesari.lk/article/171953

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.