Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Published By: NANTHINI

31 DEC, 2023 | 11:03 AM
image

பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் நாளை (ஜனவரி 1) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும், சோறு மற்றும் கொத்து ரொட்டியின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

Edited by ஏராளன்
தலைப்பு சிறு மாற்றம்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு பரிசா..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

31 DEC, 2023 | 05:23 PM
image
 

வற் வரி அதிகரிப்புக்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

தொலைபேசி அழைப்பின் போது அறவிடப்படும் செஸ் வரி, தொலைத்தொடர்பு வரி, சமூக பாதுகாப்பு வரி உட்பட வரி உள்ளடங்களாக வற் வரியுடன் தொலைத்தொடர்பு சேவைக்கான வரி 38. 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 20.3 சதவீதமாக காணப்பட்ட இணைய சேவை வரி இன்று முதல் 23.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய சகல சேவைகளின் கட்டணமும் உயர்வடையவுள்ளன.

15 சதவீதமாக இருந்த வற் வரி நாளை முதல் 18 சதவீதமாக உயர்வடைய உள்ள நிலையில் தொலைபேசி கட்டணங்கள்,இணையச் சேவைக் கட்டணங்கள்,கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட இணையத்தளத்துடனான சகல சேவைகளுக்குமான கட்டணங்கள் உயர்வடையவுள்ளன.

https://www.virakesari.lk/article/172836

  • ஏராளன் changed the title to 2024.01.01 பொருட்கள் மற்றும் சேவைகளுடைய விலைகள் அதிகரிப்பு!
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் டீசல் மண்ணெண்ணை போன்றவை விலை ஏறினால் சகலதும் விலை ஏறிப் போயிடுமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பெற்றோல் டீசல் மண்ணெண்ணை போன்றவை விலை ஏறினால் சகலதும் விலை ஏறிப் போயிடுமே?

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன

01 JAN, 2024 | 09:28 AM
image
 

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 366 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 464 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 358 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 475 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

இதேவேளை, எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.

சிபேட்கோ நிறுவனத்தின் விலை  அதிகரிப்புக்கு அமைய லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சினோபெக் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளுக்கு சலுகை வழங்கியுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றருக்கு 3 ரூபா சலுகை வழங்கியுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 363 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டருக்கான விலையை 26 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/172850

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு

நாளை (01) முதல் அனைத்து வகை கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வின் மூலம் கையடக்கத் தொலைபேசி சந்தையில் சுமார் 50 வீதம் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாளை முதல் 100,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி 135,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/286552

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரி!

இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டுவந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது

நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது.

எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பொருட்களுக்கான விலை, போக்குவரத்து, தொலைபேசி சேவை உட்பட பல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின்; சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் அமுலாகும் வற் வரி திருத்தம் காரணமாக பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியேற்படும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரம், இன்று முதல் சோற்றுப்பொதி, கொத்துரொட்டி, தேநீர், பால் தேநீர் ஆகியவற்றுக்கான விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சோற்றுப்பொதி, ப்ரைட் ரைஸ், கொத்துரொட்டி உள்ளிட்ட உணவுகளில் விலையை 25 ரூபாவினாலும், தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், இன்று முதல் நீர் கட்டணமும் 3 சதவீதத்தால் அதிகரிக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரதான தொலைபேசி சேவை வழங்குனர்களும் வரி திருத்தத்தின்படி அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிப்பட்டுவந்த 41 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்தும் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/286560

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டது!

01 JAN, 2024 | 01:13 PM
image
 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி , 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு  அதன் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு  அதன் புதிய விலை 1,707  ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு   அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/172864

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது !

01 JAN, 2024 | 05:06 PM
image

லாவ் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை  (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 4,740 ரூபாவாகும். 

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்  இதன் புதிய விலை ரூ.1,900 ரூபாவாகும்.

https://www.virakesari.lk/article/172898

  • கருத்துக்கள உறவுகள்

VAT.jpeg?resize=750,375&ssl=1

வற் வரி இன்றுமுதல் அமுல் : விலை அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்கள்!

வற் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குறித்த வரி திருத்தம் இன்று முதல் அமுலாகின்றது.

அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வற் வரி இன்று முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி அமுலாகியுள்ளது.

உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதும் குறித்த வரி அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் சோலர் பனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் வற் வரி விதிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் வட் வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீதும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போதும் வற் வரி அறவிடப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு வற்; வரி வசூலிக்கப்படுகிறது.

திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் வற் வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி அதிபோசனை உணவுகள் மற்றும் தேசிய தேங்காய் எண்ணெய்க்கும் வற்; வரி விதிக்கப்படவுள்ளது.

இதேநேரம் வற் வரிக்கு உட்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது. அதன்படி சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுகள் வற்; வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வற் வரி அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வற் வரி திருத்தம் காரணமாக இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கான இரண்டாவது கிலோமீட்டருக்கான 80 ரூபாய் கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கையடக்கத் தொலைபேசிகளின் இறக்குமதிக்கு வற் வரி அறவிடப்படுவதால், கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வற் வரி திருத்தத்துடன் இன்று முதல் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வற் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மதுபான உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மது வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய், மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1364569

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிக்கின்றது !

01 JAN, 2024 | 05:22 PM
image

மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின்  விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள்  மேலும் தெரிவிக்கின்றனர்.

வற் வரி அதிகரிப்பு காரணமாக  இன்று திங்கட்கிழமை (01) முதல்  ஐஸ்கட்டியின் விலை  அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/172902

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மண்ணெண்ணெய் 11 ரூபாய் விலை குறைப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.