Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். 

 

ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். 

 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) கோண்டாவிலில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தரப்பு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் பேசினாலும் எவரும் வெளிப்படையாகத் தமது வாக்குறுதிகளைத் தரப்போவதில்லை. தமிழர் தரப்புக்கு ஆதரவாகக் காட்டிச் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வெளிப்படையாகத் தராத எந்தவொரு உத்தரவாதமும் தேர்தலின் பின்னர் கண்டுகொள்ளப்படாது 

என்பதே கடந்த கால வரலாறு. 

சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவையே இறுதியில் வெல்ல வைக்க முடிந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

ஒப்பீட்டளவில் தமிழ்த் தரப்பின் முன்னால் உள்ள தெரிவு பொது வேட்பாளர்தான். இதில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் வெற்றிபெறப் போவதில்லை. ஆனால், தாம் விரும்பம் அரசியல் தீர்வை வெளிப்படையாக முன்வைத்துத் திரளான தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமது அபிலாசையை வெளிப்படுத்த முடியும். இது சமஸ்டியாகவும் இருக்கலாம் தனி நாடாகவும் இருக்கலாம். 

ஒருவகையில் இதனைத் தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பொது வாக்கெடுப்பாகக்கூடக் கருதலாம். ஆனால், இதன் வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வாக்குகளைக் திரட்டக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/172895

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின் தளத்தில் ஈ பி டி பி கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனது அபிப்பிராயமும் தற்போதைய நிலமையில் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதே நல்லது போல் தோன்றுகின்றது. ரணில் சிறந்த தெரிவு இல்லையாயினும் உள்ளவற்றில் இதுவே நல்லதாக தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நியாயம் said:

தமிழ்வின் தளத்தில் ஈ பி டி பி கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனது அபிப்பிராயமும் தற்போதைய நிலமையில் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதே நல்லது போல் தோன்றுகின்றது. ரணில் சிறந்த தெரிவு இல்லையாயினும் உள்ளவற்றில் இதுவே நல்லதாக தெரிகின்றது. 

ரணில் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை,  இந்தியா இனிமேலும் இலங்கை தமிழ் மக்கள் மேல் இந்தியா செல்வாக்கு செலுத்த முடியா தீர்வை வழங்க விரும்புகின்றார். தமிழ் மிதவாதிகளும் சிங்கள மக்களின் மிதவாதிகளும் இணைந்து தீர்வை நோக்கி செல்லும் பொழுது இந்தியாவின் நரித் தனத்தில் இருந்து நாம் சற்றேனும் தள்ளி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

Elunthiri-mathirai-funny-meme.jpg

முதலிணைப்புப் படத்தைக் காண்பிக்கவில்லை. அதனால் திருத்தம் செய்யப்பட்டது.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

ரணில் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை,  இந்தியா இனிமேலும் இலங்கை தமிழ் மக்கள் மேல் இந்தியா செல்வாக்கு செலுத்த முடியா தீர்வை வழங்க விரும்புகின்றார். தமிழ் மிதவாதிகளும் சிங்கள மக்களின் மிதவாதிகளும் இணைந்து தீர்வை நோக்கி செல்லும் பொழுது இந்தியாவின் நரித் தனத்தில் இருந்து நாம் சற்றேனும் தள்ளி இருக்கலாம். 

 

நான் நோக்கும் விடயங்கள்: ராஜபக்ச குடும்பம் ஆட்சியை கைப்பற்றி நாட்டை நாசமாக்காமல் பார்க்க வேண்டும். மைத்திரி போல் அனுபவம் இல்லாதவர்கள் தலைமைக்கு வந்து நாட்டை நோக வைக்க கூடாது. தமிழர் பொது வேட்பாளருக்கு வோட்டு போடுவது பிரச்சனை இல்லை. ஆனால் இது பரிசோதனை களம் இல்லை. தமிழ் வேட்பாளருக்கு வோட்டு பிரிவது ராஜபக்ச அரசியலுக்கு சாதகமாக அமையக்கூடாது. ரணில் மூலம் அதிக எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் நிலமை இன்னும் மோசமாக செல்லாது என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழா.... அரசியல் ஞானி அன்றே கூறிவிட்டார் , ரணில்  ஒரு கிழட்டு நரி என்று.

என்னைப் பொறுத்தவரை, தமிழர் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலாந்தனின் கூற்றோடு உடன்படுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தரப்பினர் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதைப்பற்றி பரிசீலித்தல் மிக மிக அவசியம். அதே வேளை தேர்தலுக்கு முந்திய சிங்களக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் அதை ஒரு தந்திரோபாய ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்.  சிங்கள கட்சிகளுடன் திருப்திகரமான உடன்பாடு எதுவும் எட்டமுடியாவிடின் தமிழ் தரப்பினர் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தழினத்தின் அரசியல் அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்டு அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்றுக்கொள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் களமிறங்கி செயல்படுதல்வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.