Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம்.

அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 

1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது.

ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கும் ஓய்வாகவும் இயல்பாக இருக்கவும் எமது சாளை முகாம் இருந்தது. 

அந்த காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் அண்ணா கடும் சுகவீனம் அடைந்து இருந்தார். இலங்கை ஐனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்களிடம் புலிகள் உதவி கேட்டு இருந்தார்கள். புலிகள் கேட்டது மனிதாபிமானம். ஆனால் இலங்கை அரசு புலிகளுக்கு கூறியது டீல் . யாழ்பாணம் செல்லும் கடல்வழி பயணத்திற்கு கடற்புலிகள் தடையாக இருக்க கூடாது என்றும் யாழ்பாணம் செல்லும் இராணுவ கப்பல்களை கடற்புலிகள் தாக்க கூடாது என்றும் டீல். அந்த நாளே தலைவர் சாளைக்கு வந்தார். 

சாளை தொடுவாய்க்கு வந்து படகுகளை பார்வை செய்தார். சூசை அண்ணா கொஞ்ச நேரம் செல்ல வந்தார். சூசை அண்ணா வரும் வரை எம் தேசத்தின் தலைவன் எம்முடனே இருந்தார். நாங்கள் கடலுக்கு செல்வதற்கு படகுகளை தயார்படுத்திக்கொண்டு இருந்தோம்.
 
அந்த நேரத்தில் சூசை அண்ணா வந்தார். பின் இருவரும் இணைந்து படகுகளை பார்வை இட்டனர். எமது செங்கொடி படகை நீண்ட நேரம் பார்வை இட்டுச் சென்றனர். நாம் கடலுக்கு சென்று அடுத்த நாள் காலை வந்தோம்.

படகு கட்டுமான பொறுப்பாளர் சாளைக்கு வந்தார். ஆதித்தன் அண்ணா எமது படகை அளவு எடுத்துச் சென்றார்.

பின் நடந்தது வரலாற்று பதிவு.

அது ஒரு அற்புதமான தருணம். அன்று ஒருநாள் காலை ஆதித்தன் அண்ணா எமது செங்கொடி படகின் மேற்பரப்பில் கூரை மாதிரியான வடிவில் நீர் அடிக்காதவாறு இருக்க கூரை பாகம் ஒன்றை கொண்டு வந்து பொருத்தினார். 

அதே நாள் நாம் கடலுக்கு செல்வதற்காக படகை தயார் செய்து கொண்டு இருக்கும் போது இயந்திரத்தில் அனுபவம் வாய்ந்த மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மற்றும் மாவீரர் லெப். கேணல் டிக்கான் அண்ணா ஆகியோர் படகின் இயந்திரத்தை பார்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். இயந்திரத்தின் அனைத்து பரிசோதனைகளையும் மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மேற்கொண்டு இருந்தார். நாம் எரிபொருள் நிரப்பி படகை சுத்தம் செய்து கொண்டோம். ஆயுதம் வைத்திருப்பவர்கள் ஆயுதத்தை சுத்தம் செய்து இருந்தனர். செங்கொடி படகு வீதியோரத்தில் மருதமரம் அணைவில் எப்போதும் நிறுத்தப்பட்டு இருக்கும். 

சாளைத்தொடுவாய் நீர் அதிகமாக இருந்தது. 

ஒரு கணப்பொழுதில் வந்தது, தலைவனின் வாகனம். இறங்கினார் தலைவர். வேக நடை போட்டு நடந்து வரும் தலைவரின் கண்கள் பிரகாசித்து கொண்டு இருந்தது. தொடர்ந்து  சூசை அண்ணாவின் வாகனம் வந்தது. தொடர்நது தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் வந்தது. அதில் இருந்து அடெல் அன்ரி இறங்கினார். எமக்கு புரிந்து விட்டது என்ன நிகழப்போகின்றது என்று. எமக்கு மகிழ்ச்சி, எமது படகில் நாம் கொண்டு செல்லப் போகின்றோம் என்று!
  
சூசை அண்ணாவுடன் சுடரொளி அண்ணா நின்று கொண்டு இருந்தார்.
 
நான் நினைக்கின்றேன், அன்று மருத்துவ பிரிவு பொறுப்பாளர் றேகா அண்ணா வந்ததாக நினைவு இல்லை. குறிப்புக்கு மட்டும்.

அன்ரன் பாலசிங்கம் அண்ணாவை வாகனத்திலிருந்து இறக்கி மெதுமெதுவாக தள்ளுவண்டி மூலம் தள்ளிகொண்டு வந்து படகில் ஏற்றினார்கள். அடெல் அன்ரியை எமது படகில் ஏற்றப்பட்டது. எமது படகில் படுகை எல்லாம் போடப்பட்டு சிறப்பாக செய்து இருந்தோம்.

உடனடியாக சூசை அண்ணா படகில் உள்ள போராளிகளை மாற்றம் செய்தார்.  இயந்திர பொறிஞர் மாற்றம் நடந்தது. சுடரொளி அண்ணாவை கட்டளை அதிகாரியாக ஏற்றினார். கட்டளை அதிகாரியாக இருந்த சுபன் அண்ணா ஓட்டியாக மாற்றம் செய்யப்பட்டது. என்னை இறங்க சொன்னார் சூசை அண்ணா.

இப்படி மாற்றம் செய்து கொண்டு இருக்கும் போது தலைவர் சூசை என்று அழைத்து, "சூசை படகில் ஏறி நீர் போகலாம்!" என்றார். அங்கு நின்ற கடற்புலி போராளிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. 

சூசை அண்ணாவை கடலுக்கு அனுப்பவதா? ஒன்று நடந்தால் நிலமை என்ன ஆகும்? அப்போது அருகில் நின்ற தலைவன் இருக்கின்றார் என்ற வைராக்கித்துடன் பணிகளை தொடங்கினோம். அனைத்து படகையும்  கடலுக்கு அனுப்பினோம்.

செங்கொடி படகு செல்லும் போது தொடுவாய் இரண்டு பக்கமும் கடற்புலிகள் சென்று நின்றுகொண்டு இருந்தனர். 

படகு பயணம் ஆனது. கடலின் அலை அடி அதிகமாகவும் காற்றின் வேகம் பலமாகவும் இருந்தது. எல்லா போராளிளும் கை காட்டி அனுப்பி வைத்தோம்.

பிற்பாடு தமிழ்செல்வன் அண்ணா சென்று விட்டார். வெளியில் இருந்து வந்த சிலர் சென்று விட்டனர். ஆனால் எமது தேசத்தின் தலைவன் எமது படகுகளின் கட்டுபாட்டு அறைக்குச் சென்று சூசை அண்ணாவிற்கு பதில் பொறுப்பில் இருந்தார்.
 
தலைவர் சற்றும் தூங்காமல் படகுகளை அவதானித்து கொண்டு இருந்தார். அப்போது மதி தான் கட்டுப்பாட்டறை பொறுப்பளர். அபிமஞ்சு அண்ணாவும் இருந்தார். சாளை கடற்புலி போராளிகள் யாரும் தூங்கம் கொள்ளாமல் கடலையே பார்த்து கொண்டு இருந்தோம்.
 
100 கடல் மை தொலைவில் காத்து நின்றார் கௌசிகன் அண்ணா, புதிய கப்பலுடன். அன்டன் பாலசிகம் அண்ணா ஏற்றப்பட்டார். அடெல் அன்ரிக்கு சரியாக சத்தி, உடற்சோர்வு என்று பல இருந்தது.

கப்பல் தொடரை பின் தொடர்கின்றேன்.

சாமம் கடந்து சூசை அண்ணாவின் படகு வந்தது. தொடுவாய்க்கு உள்ளே வந்த படகை நாம் எல்லோரும் இணைந்து கரைக்கு கொண்டுவந்து மருத மரத்தில் கட்டினோம். சூசை அணணா சிரித்தபடி இறங்கினார்.
 
தலைவன் உடன் வந்து கைகொடுத்து கூட்டி வீதிவரை சென்றார். சூசை அண்ணா சற்றும் எதிர்பார்க்கவில்லை. போராளிகள் நாமும் இதை எதிர்பாக்கவில்லை. பின் இருவரும் இணைந்து கட்டுப்பாட்டறை நோக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடி அனைத்து படகையும் கரை சேர்த்துவிட்டு தலைவர் சென்றார்.
 
பின் 3 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிற்பகல் தலைவனுக்கு போராளிகளுடன் சந்திப்பு நடக்க தயாராக இருந்தது. சாப்பாடு தயார் ஆனது. ஐஸ்கிறீம் எல்லாம் வந்தது. சந்திக்கும் இடம் எல்லாம் தயாரானது. எமக்கு மதியம் தகவல் வருகின்றது, குமாரவேல் ஊடாக, தலைவருக்கு சரியான காச்சல் என்றும் தலைவருக்கு காச்சல் கூடியது என்றும். போராளிகள் ஆகிய நாம் நொந்து போனோம்.

பின் சில நாட்களுக்குப் பிறகு எமது முகாமிற்கு வருவது போல் வந்தார். இந்த முறை கடாபி அண்ணா கூட இருந்தார்.

இந்த கதையும் தொடரும்…….

  • எழுத்தாளர்: அறியில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.