Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளுப்பிட்டியில் சோதனை என்ற பெயரில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள்குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார்.

இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் மறித்துள்ளனர் 

பொலிஸார் மகனை கடும் சோதனைக்கு உட்படுத்தினார்கள் அவரது உடமைகளை வீசி எறிந்தார்கள் என தந்தை ஜெரால்ட் டி சேரம்  சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏன் தாங்கள் மீது  சோதனையை மேற்கொள்கின்றனர் என்பதற்கான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை  என தந்தை தெரிவித்துள்ளார்.

நான்கு பொலிஸார் தனது மகனை முழுமையாக ஆடைகளை அகற்றி சோதனையிட்டனர் அவரை தாக்கினர் என தெரிவித்துள்ள தந்தை கொழும்பின் மிகவும் மும்முரமான பகுதியில் இது இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிஸ் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சில பொலிஸாரினால்  பொதுமக்கள் எவ்வாறு மிரட்டப்படுகின்றனர் மற்றும் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கான சிறிய உதாரணமே இந்த சம்பவம் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் சில பொலிஸாரின் செயற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கே கரும்புள்ளியாக அமைகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் கட்டுப்பாடற்ற விதத்தில் கட்டுங்கடாத விதத்தில் செயற்படுவதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவென தெரிவித்துள்ள சாலியபீரிஸ் பொலிஸாரின் மிருகத்தனமான மற்றும் தண்டனையின்மை நடவடிக்கைகள் குடிமக்களின்வாழ்வு மற்றும்  பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என  தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக உயர்பதவிகளில் உள்ள சில உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் இந்த வகையான நடத்தையை கண்டித்து ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பலரிடம் தாங்கள் பொலிஸாரிடம் எந்த அநீதிகள் குறித்த  விபரங்களை வெளியிடுவதற்கான வலுவோ அல்லது வழிமுறையோ இல்லை என  தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் சட்ட அமுலாக்கல் தரப்பினரின் இந்த நடவடிக்கைகைள இந்த நாட்டின் மக்கள் கேள்வி கேட்காவிட்டால் சில மனவளர்ச்சி ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையிலிருந்து எவரும் தப்ப முடியாத காலம் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் அடாவடித்தனமான சோதனை ; பொருட்களை வீசி எறிந்தனர் ; ஆடைகளை களைந்தனர் - சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா  காவல்துறையால் தமிழர்களுக்கு அநீதி நடந்த போது...
சிங்களவர் அமைதியாக இருந்ததன் விளைவு....
இன்று அவர்கள் வீட்டு வாசற்படியில் வந்து நிற்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா  காவல்துறையால் தமிழர்களுக்கு அநீதி நடந்த போது...
சிங்களவர் அமைதியாக இருந்ததன் விளைவு....
இன்று அவர்கள் வீட்டு வாசற்படியில் வந்து நிற்கின்றது. 

இதுவல்ல...எமக்கு நடந்த எல்லாமே அவர்களுக்கு நடக்கும்...ஆனால் தமிழர் பகுதியில் ஒரு புத்த விகாரையை  கட்டுவதன்மூலம்...அவர்கள்  அதனை மறந்து விடுவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

கொள்ளுப்பிட்டியில் சோதனை என்ற பெயரில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள்குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார்.

இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் மறித்துள்ளனர் 

பொலிஸார் மகனை கடும் சோதனைக்கு உட்படுத்தினார்கள் அவரது உடமைகளை வீசி எறிந்தார்கள் என தந்தை ஜெரால்ட் டி சேரம்  சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏன் தாங்கள் மீது  சோதனையை மேற்கொள்கின்றனர் என்பதற்கான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை  என தந்தை தெரிவித்துள்ளார்.

நான்கு பொலிஸார் தனது மகனை முழுமையாக ஆடைகளை அகற்றி சோதனையிட்டனர் அவரை தாக்கினர் என தெரிவித்துள்ள தந்தை கொழும்பின் மிகவும் மும்முரமான பகுதியில் இது இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிஸ் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சில பொலிஸாரினால்  பொதுமக்கள் எவ்வாறு மிரட்டப்படுகின்றனர் மற்றும் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கான சிறிய உதாரணமே இந்த சம்பவம் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் சில பொலிஸாரின் செயற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கே கரும்புள்ளியாக அமைகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் கட்டுப்பாடற்ற விதத்தில் கட்டுங்கடாத விதத்தில் செயற்படுவதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவென தெரிவித்துள்ள சாலியபீரிஸ் பொலிஸாரின் மிருகத்தனமான மற்றும் தண்டனையின்மை நடவடிக்கைகள் குடிமக்களின்வாழ்வு மற்றும்  பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என  தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக உயர்பதவிகளில் உள்ள சில உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் இந்த வகையான நடத்தையை கண்டித்து ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பலரிடம் தாங்கள் பொலிஸாரிடம் எந்த அநீதிகள் குறித்த  விபரங்களை வெளியிடுவதற்கான வலுவோ அல்லது வழிமுறையோ இல்லை என  தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் சட்ட அமுலாக்கல் தரப்பினரின் இந்த நடவடிக்கைகைள இந்த நாட்டின் மக்கள் கேள்வி கேட்காவிட்டால் சில மனவளர்ச்சி ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையிலிருந்து எவரும் தப்ப முடியாத காலம் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் அடாவடித்தனமான சோதனை ; பொருட்களை வீசி எறிந்தனர் ; ஆடைகளை களைந்தனர் - சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு | Virakesari.lk

குரு எவ்வழியோ சீஷர்களும் அவ்வழியே. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.