Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
05 JAN, 2024 | 05:04 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள், முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகி இருந்தபோதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர்.

நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும் இந்த சனத்தொகையில் 2019ஆகும் போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே வறுமை நிலையில் இருப்பதாக பதிவாகி இருந்தபோதும் தற்போது அந்த சதவீதம் நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு வந்துள்ளது.

அதன் பிரகாரம் ஜனசவி, சமுர்தி மற்றும் அஸ்வெசும போன்ற வறுமை நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களின் சதவீதம் நூற்றுக்கு 11.9இல் இருந்து நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

அத்துடன் இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட வற்வரி வீதம் நூற்றுக்கு 18வரை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் நூற்றுக்கு 27.9 வீதமானவர்கள்  2024ஆம் ஆண்டாகும்போது வறுமை நிலைக்கு ஆளாகும் என  உலக வங்கியின் கணிப்பாக இருந்தது.

இதேவேளை, இதுவரை காலமும் வற்வரி விதிப்புக்கு உள்வாங்கப்படாமல் இருந்த எரிபாெருள் எரிவாயு போன்ற 79 பொருட்களுக்கு புதிதாக நூற்றுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டதால், இந்த நாட்டில் மிகமோசமான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த கணக்கு வழக்குகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் உண்மையான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் தீவிரமாகலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொவிட் தொற்று மற்றும் 2019இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 3வருட குறுகிய காலத்துக்குள் இந்த நாட்டின் வறியவர்களின் வீதம் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/173219

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் வருமான வரி பொருளாதார வளர்ச்சியில் மறைமுகமான பாதிப்பினை ஏற்படுத்தும், அமெரிக்காவினது கடன் அதன் மொத்த தேசிய வருமானத்தில் 122% உள்ளது, இலங்கையின் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 131% உள்ளது, ஒப்பீட்டளவில வெறும் 9% மட்டுமே இலங்கையினை விட குறைவான கடனையுடைய அமெரிகா எப்பிடி இவ்வளவு கெத்தாக திரிய இலங்கை மட்டும் பிச்சைகாரன் மாதிரி (கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்) திரிகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2024 at 07:29, vasee said:

அதிகரிக்கும் வருமான வரி பொருளாதார வளர்ச்சியில் மறைமுகமான பாதிப்பினை ஏற்படுத்தும், அமெரிக்காவினது கடன் அதன் மொத்த தேசிய வருமானத்தில் 122% உள்ளது, இலங்கையின் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 131% உள்ளது, ஒப்பீட்டளவில வெறும் 9% மட்டுமே இலங்கையினை விட குறைவான கடனையுடைய அமெரிகா எப்பிடி இவ்வளவு கெத்தாக திரிய இலங்கை மட்டும் பிச்சைகாரன் மாதிரி (கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்) திரிகிறது? 

உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தும் ஏன் கேட்கிறிர்கள் என்று புரியவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சமூர்த்தி போன்ற கொடுப்பானுவுகளை பெறுபவர்களை பார்த்தல் வறுமையில் வாடுபவர்களை போல தெரியவில்லை.

இருந்தாலும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் , மற்றும் வரிகள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Cruso said:

ஆனாலும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சமூர்த்தி போன்ற கொடுப்பானுவுகளை பெறுபவர்களை பார்த்தல் வறுமையில் வாடுபவர்களை போல தெரியவில்லை.

இருந்தாலும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் , மற்றும் வரிகள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. 

அரசை ஏமாற்றி அரச உதவி பெறுபவர்களை கண்டுபிடிக்கவும் TIN இலக்கம் கொண்டுவாறாங்களோ தெரியவில்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

அரசை ஏமாற்றி அரச உதவி பெறுபவர்களை கண்டுபிடிக்கவும் TIN இலக்கம் கொண்டுவாறாங்களோ தெரியவில்லை!

 

 

மேற்கு நாடுகளின் நிர்வாகக் கட்டமைப்பிற்கான  அடிப்படை மாற்றங்கள் எல்லாம் படிப்படியாக அங்கே கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இதில் தாங்கள் குறிப்பிடும் Social Insurance  Number அங்கே நிச்சயமாக வரும். தற்காலிகமாக  அதற்காக NIC இலக்கத்தை பாவிப்பது என்பதுதான் தீர்மானம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

 

மேற்கு நாடுகளின் நிர்வாகக் கட்டமைப்பிற்கான  அடிப்படை மாற்றங்கள் எல்லாம் படிப்படியாக அங்கே கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இதில் தாங்கள் குறிப்பிடும் Social Insurance  Number அங்கே நிச்சயமாக வரும். தற்காலிகமாக  அதற்காக NIC இலக்கத்தை பாவிப்பது என்பதுதான் தீர்மானம். 

நல்ல விடயம் தான்.
கா.து முதல் அதிகாரிகள், அரசியல் வியாதிகள் வரை பரவி இருக்கும் ஊழல், இலஞ்சத்தை ஒழித்து உழைப்புக்கேற்ற ஊதியமும் அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடிந்தால்.... கற்பனை கொஞ்சம் ஓவராத் தான் போகுதோ!🤭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

நல்ல விடயம் தான்.
கா.து முதல் அதிகாரிகள், அரசியல் வியாதிகள் வரை பரவி இருக்கும் ஊழல், இலஞ்சத்தை ஒழித்து உழைப்புக்கேற்ற ஊதியமும் அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடிந்தால்.... கற்பனை கொஞ்சம் ஓவராத் தான் போகுதோ!🤭

அதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.

ஆனால் அதற்கு முன்னர் சிங்களப் பொதுமக்கள் முழங்காலில் இருத்தி எழுப்பப்பட வேண்டும். 

தவிர, 

வெளிநாடு வாழ் ஈழத்தமிழ் கடும்போக்குவாதிகளின்(யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத) குரலும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

நல்ல விடயம் தான்.
கா.து முதல் அதிகாரிகள், அரசியல் வியாதிகள் வரை பரவி இருக்கும் ஊழல், இலஞ்சத்தை ஒழித்து உழைப்புக்கேற்ற ஊதியமும் அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடிந்தால்.... கற்பனை கொஞ்சம் ஓவராத் தான் போகுதோ!🤭

பொதுவாக அரச நிறுவனங்களில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாது. அதட்கு அவர்களை குறை சொல்லவும் முடியாது. அவர்களுக்கு வழங்கும் சம்பளம் அப்படி.

உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை நீங்கள் எப்படி வரைவிலக்கணம் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் என்றுதான் அரசு சொல்கிறது. ஆனால் அதனை கொண்டு சீவிக்க முடியாது.

அதாவது பிச்சை சம்பளத்துக்கு மேட்கு நாடுகளின் வரி விதிப்பு கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.