Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்லறம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறம்

-வ.ஐ.ச.ஜெயபாலன்.

ஆற்றம் கரையில்

இன்னும் தோற்றுப்போகாத மரம் நான்.

இன்று தெளிந்துபோய்

புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு.

விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி

ஹோலிப் பண்டிகைக் குறும்போடு

வண்ணங்கள் வீசி

தொட்டுத் தொட்டுச் செல்கிறது அது.

நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற நாள்வரையேனும்

கைவிட்டகலும் வேர்மண் பற்றி

பிழைத்திருக்கிற போராட்டத்தில்

நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்

அது நானல்ல என்பதுபோல.

நேற்றைய துன்பமும் உண்மை

நாளைய பயமோ அதனிலும் உண்மை.

எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.

சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.

துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.

நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே

இந்த நட்பும் வாழ்வும்.

Edited by poet

அபாரமான சிந்தனை தொடருங்கள் மிகவும் ரசித்தேன் நன்றி

நேற்றைய துன்பமும் உண்மை

நாளைய பயமோ அதனிலும் உண்மை.

எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.

நல்ல வரிகள். உண்மையான வரிகள்.

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற நாள்வரையேனும்

கைவிட்டகலும் வேர்மண் பற்றி

பிழைத்திருக்கிற போராட்டத்தில்

நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்

அது நானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற போது

விடிந்திருக்கிற தேசத்தில்

மொட்டவிழ்க்கும் வாழ்வு வேண்டும்!

"பிழைத்திருக்கிற" என்பது கொஞ்சம் மயக்கம் தருகிறதாய் இருக்கிறதா?

பிழைத்திருக்கிற = தப்பிப் பிழைத்தல் ?

பிழைத்திருக்கிற = தவறாகிப்போன ?

முதல் இருக்கிற வரிகளால் இதன் பொருள் உணர்ந்துகொள்ள முடியினும்,

அந்தவரி தனித்து நிற்கிறபோது மயக்கம் தரக்கூடுமா?

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற நாள்வரையேனும்

கைவிட்டகலும் வேர்மண் பற்றி

பிழைத்திருக்கிற போராட்டத்தில்

நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்

அது நானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற போது

விடிந்திருக்கிற தேசத்தில்

மொட்டவிழ்க்கும் வாழ்வு வேண்டும்!

"பிழைத்திருக்கிற" என்பது கொஞ்சம் மயக்கம் தருகிறதாய் இருக்கிறதா?

பிழைத்திருக்கிற = தப்பிப் பிழைத்தல் ?

பிழைத்திருக்கிற = தவறாகிப்போன ?

முதல் இருக்கிற வரிகளால் இதன் பொருள் உணர்ந்துகொள்ள முடியினும்,

அந்தவரி தனித்து நிற்கிறபோது மயக்கம் தரக்கூடுமா?

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற நாள்வரையேனும்

கைவிட்டகலும் வேர்மண் பற்றி

பிழைத்திருக்கிற போராட்டத்தில்

நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்

அது நானல்ல என்பதுபோல.

கைவிட்டகலும் வேர் மண் என்பது மண்ணரிப்பு என்பதனைக்குறிக்கும் காட்டாற்றின் அருகில் உள்ள மரம் என்பதனால் ... :icon_idea:

இது எனது கருத்து கவிஞ்ஞர் கூறும் போது இது முழுமை பெறும்....

இளைஞன் இதில் கவிஞ்ஞர் தன்னை காட்டாற்றின் கரையில் உள்ள மரமாகச் சித்தரித்திருக்கின்றார்...

நேற்று அந்தக்காட்டாறு பெருக்கெடுத்தது பல இன்னல்களைச் செய்தது கரையில் இருந்த இந்தமரமானது காட்டாற்று வெள்ளத்துடன் அடித்துச் செல்லப் படவில்லை தப்பிவிட்டது(பிழைத்து விட்டது)

ஆனால் இன்று இந்தக்காட்டாறு தெளிவடைந்து சற்றும் சலனமின்றி இதமாகச் செல்கின்றது ... பார்க்கும் போது நேற்றுப் பெருக்கெடுத்தது தானில்லை என்பது போல் .....

அதேபோல் நேற்றைய காட்டாற்று வெள்ளத்தின் செயலால் ஏற்பட்ட விரக்தியை அந்தமரமானது தனது வேர்களில் இருந்து (அல்லது விதையில் இருந்தோ) முளைத்திடும் தன் கன்றுகள் (புதிய உறவுகள்)கண்ட மகிழ்ச்சியில் மறந்து போகின்றது ( காட்டாறும் ஓர் உறவுதான் :)) நேற்று விரக்தியாய் இருந்த மரம் நானல்ல என்பது போல..... :icon_idea:

இது எனது நோக்கு

Edited by gowrybalan

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற நாள்வரையேனும்

கைவிட்டகலும் வேர்மண் பற்றி

பிழைத்திருக்கிற போராட்டத்தில்

நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்

அது நானல்ல என்பதுபோல.

கைவிட்டகலும் வேர் மண் என்பது மண்ணரிப்பு என்பதனைக்குறிக்கும் காட்டாற்றின் அருகில் உள்ள மரம் என்பதனால் ... :icon_idea:

இது எனது கருத்து கவிஞ்ஞர் கூறும் போது இது முழுமை பெறும்....

இளைஞன் இதில் கவிஞ்ஞர் தன்னை காட்டாற்றின் கரையில் உள்ள மரமாகச் சித்தரித்திருக்கின்றார்...

நேற்று அந்தக்காட்டாறு பெருக்கெடுத்தது பல இன்னல்களைச் செய்தது கரையில் இருந்த இந்தமரமானது காட்டாற்று வெள்ளத்துடன் அடித்துச் செல்லப் படவில்லை தப்பிவிட்டது(பிழைத்து விட்டது)

ஆனால் இன்று இந்தக்காட்டாறு தெளிவடைந்து சற்றும் சலனமின்றி இதமாகச் செல்கின்றது ... பார்க்கும் போது நேற்றுப் பெருக்கெடுத்தது தானில்லை என்பது போல் .....

அதேபோல் நேற்றைய காட்டாற்று வெள்ளத்தின் செயலால் ஏற்பட்ட விரக்தியை அந்தமரமானது தனது வேர்களில் இருந்து (அல்லது விதையில் இருந்தோ) முளைத்திடும் தன் கன்றுகள் (புதிய உறவுகள்)கண்ட மகிழ்ச்சியில் மறந்து போகின்றது ( காட்டாறும் ஓர் உறவுதான் :)) நேற்று விரக்தியாய் இருந்த மரம் நானல்ல என்பது போல..... :icon_idea:

இது எனது நோக்கு

உங்களது பார்வை சரியே கெளரிபாலன். மண்ணரிப்பு பற்றியே கவிஞர் சொல்லியிருக்கிறார். தப்பிப் பிழைத்தல் என்கிற பொருளில் தான் அது கவிதையில் இடம்பெறுகிறது. தனியே அந்து வசனத்தை எடுத்து பார்க்கிறபோது இரு பொருள் தரும் ஒரு மயக்கநிலை தோன்றலாம். முன்னர் எங்கோ வாசித்த நினைவு: கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தனித்தனியே பிரிந்தும் பொருள்தரக்கூடியவை என்று.

எனது கன்றுகள்

முளைத் தெழுகிற நாள்வரையேனும்

கைவிட்டகலும் வேர்மண் பற்றி

பிழைத்திருக்கிற போராட்டத்தில்

நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்

அது நானல்ல என்பதுபோல.

கன்றுகளைக் காணும் வரையாவது (தான் பிழைத்திருக்க வேண்டும்) என்கிற எதிர்பார்ப்பில் / காணமுடியும் என்ற நம்பிக்கையில் விரக்தியை மறந்து போகிறது என்றே நினைக்கிறேன். எமது போராட்டத்தையும் மக்களின் வாழ்வையும் மிக அழகாகவே சொல்லியிருக்கிறார் கவிஞர். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தான் இன்னமும் எம்மை (எமது மக்களை) வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நாளை விடியும் என்கிற எதிர்பார்ப்புத்தானே வலிகளை மறந்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வரிகளை எமது விடுதலைப் போராட்டத்தோடு பொருத்திப் பார்க்கிறபோது இப்படியும் எடுத்துக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்:

சர்வதேச அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பரப்புரைகளுக்கும், நில அபகரிப்புகளுக்கும் மத்தியிலும் எமது பாரம்பரிய நிலத்தையும், எமது பண்பாட்டு அடையாளங்களையும் கைவிடாமல் பற்றி இன்னும் பிழைத்திருக்கிற எமது விடுதலைப் போராட்டத்தை எண்ணுகிறபோது, தாயக விடுதலை என்பது நிச்சயம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. அதனால் நேற்றைய வலிகள் எல்லாம் மறந்துபோகிறது.

இப்படி பல விடயங்களோடு பொருத்திப் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படைப்பு வாசகர் கற்பனையைத் துண்டியே அவர் அவருக்கு ஏற்ப முழுமை பெறவேண்டும் என்பதே என்கருத்து. எழுதப் பட்டபின் படைப்பு உண்மையில் வாசகருடையதாகும். வாசகர் கற்பனைக்கு இடம்தராத மூடப் பட்ட அற நூல்களை எழுதும் விருப்பம் இல்லை. அதனால் உங்கள் கற்பனைகளில் குறுக்கிட்டு தீர்ப்புச் சொல்வதும் விருப்பமல்ல. எனினும் இல்லறம் என்கிற தலைப்பு கவிதைக்கு ஒரு திசையைக் கொடுக்கிறது. இல்லறத்தில் கனவன் மனைவி என்கிற பாத்திரங்கள் உண்டல்லவா. இதை வாசிக்கும் பெண் தன்னை மரமாகவும் தனது கணவனைக் கட்டாறாகவும் கொள்ளலாம். ஆண் வாசகன் தன்னை மரமாகவும் மனைவியைக் காட்டாறாகவும் கொள்ளலாம். எல்லா இல்லறங்களும் ஆற்றங்கைரையின் மரம்தானே. ஊட்டி ஊட்டி வளர்க்கிற ஆறுதான் வேர் மண்ணையும் வாருகிறது. இப்பொழுது திரும்ப வாசித்துப் பாருங்கள்.

எழுதப் பட்டபின் படைப்பு உண்மையில் வாசகருடையதாகும்.

உண்மையே. "கவிதை எழுதிமுடிந்ததும் அந்தக் கவிஞன் இறந்துவிடுகிறான்" என்பது போன்று முன்னர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதன்பின் அந்தக் கவிதையின் கற்பனைத்தளம் வாசகனின் கைகளில் உள்ளது.

தலைப்பு பற்றி நீங்கள் சொன்னதன் பிறகு தான் பார்த்தேன் :icon_idea: தலைப்பை முதல் கணக்கிலெடுக்கவில்லை. ஆனால் இப்போது பார்க்கும்போது தலைப்பு கவிதையின் கற்பனைத்தளத்துக்கு எல்லை போட்டுவிடுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. தலைப்பு இல்லாமல் வாசிக்கிறபோது பலவிதமான கற்பனைகள் விரிகின்றன.

இருந்தாலும் இல்லறம் பற்றிய பெண்நிலைக் கவிதை நன்று. ஆகா! சொல்லவைக்கிறது.

உண்மையே. "கவிதை எழுதிமுடிந்ததும் அந்தக் கவிஞன் இறந்துவிடுகிறான்" என்பது போன்று முன்னர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதன்பின் அந்தக் கவிதையின் கற்பனைத்தளம் வாசகனின் கைகளில் உள்ளது.

தலைப்பு பற்றி நீங்கள் சொன்னதன் பிறகு தான் பார்த்தேன் <_< தலைப்பை முதல் கணக்கிலெடுக்கவில்லை. ஆனால் இப்போது பார்க்கும்போது தலைப்பு கவிதையின் கற்பனைத்தளத்துக்கு எல்லை போட்டுவிடுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. தலைப்பு இல்லாமல் வாசிக்கிறபோது பலவிதமான கற்பனைகள் விரிகின்றன.

இருந்தாலும் இல்லறம் பற்றிய பெண்நிலைக் கவிதை நன்று. ஆகா! சொல்லவைக்கிறது.

ஆமாம் இளைஞன் நானும் தலையங்கத்தை கருத்தில் எடுக்கவில்லை மரம் ஒரு மனிதனாகவும் காட்டாறு அதன் உறவாகவும் (நண்பர் .... அல்லது வேறு சொந்தங்கள் என்பது போல்...)கற்பனை பண்ணி கவிதையை வாசித்தேன் மிகவும் நன்றாக இருந்தது .... நீங்கள் இன்னும் ஒரு கோணத்தில் சிந்திச்சீங்க நாட்டுப் பிரச்சனை பற்றி.... அதில் கைவிட்டகலும் வேர்மண் என்பது உங்களிற்கு இப்படி சிந்தனைக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என நினைத்தேன்... ஆனால் ஒவ்வொருவர் கோணத்திலும் கவிதை அழகாக இருக்கின்றது ஜெயபாலன் அண்ணா தலையங்கத்தினை சுட்டிக் காட்டியபோது கவிதை நீங்கள் சொல்வதுபோல ஆகா என்று சொல்ல வைக்கின்றது...! B)

கவிதை மிகவும் நன்றாக இருந்தது அண்ணா நன்றாக இரசித்தேன்!!

நேற்றைய துன்பமும் உண்மை

நாளைய பயமோ அதனிலும் உண்மை.

எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.

சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.

துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.

அதிலும் இந்தவரிகள் பல நிசர்சனங்களை சொல்லி செல்லும் அழகிய வரிகள் மிகவும் அழகிய ஆழமான வரிகள்!! :rolleyes:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய கெளரிபாலன், இளைஞன், ஜமுனா. உங்கள் கருத்துக்கள் கருத்துக்களுக்கு நன்றி. எனது படைப்புக்கள் பற்றிய மதிப்பீடு செய்ய உங்கள் கருத்துக்கள் பயன்படுகிறது.

அன்புக்குரிய கெளரிபாலன், இளைஞன், ஜமுனா. உங்கள் கருத்துக்கள் கருத்துக்களுக்கு நன்றி. எனது படைப்புக்கள் பற்றிய மதிப்பீடு செய்ய உங்கள் கருத்துக்கள் பயன்படுகிறது.

இல்லறம் கவிதையை இப்போதும் நினைத்துப் பார்ப்பேன் எவளவு அருமையான உவமிப்பு (ஆறும் ,மரமும் )

இன்னும் ஒரு சிந்தனை :unsure: ஆறின் கரைகளை மரங்கள் காக்கின்றன அந்த மரங்கள் கூட நிமிர்ந்து வளர்வதில்லை ஆற்றங்கரை மரங்கள் எப்போதும் சாய்ந்தே இருக்கும்... ஹி....ஹி... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கெளரிபாலன்,

வருகிற வெள்ளிக் கிளமை பேராசிரியர் மு.நித்தியானந்தனின் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் (தீபம் தொலைக் காட்சி) எனது பெருந்தொகை விமர்சனம் இடம்பெறுகிறது. நேரமிருந்தால் பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.