Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டைக் காய் நாடுகள் அய்யன்னாவில் உறுப்புரிமை வகிக்கின்றன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டைக் காய் நாடுகள் அய்யன்னாவில் உறுப்புரிமை வகிக்கின்றன!

"குட்டி நாடுகள், சரியாகச் சொன்னால் சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் அய்யன்னா அவையில் இருக்கின்றன. தற்போது அய்யன்னாவில் 192 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. தமிழீழம் 195 ஆவது நாடாக அய்யன்னாவில் விரைவில் இடம் பிடிக்கும். யாழ்ப்பாணத்திலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் ஒரு பலமுள்ள நாடாக விளங்குகிறது.

பத்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட தமிழீழம் விடுதலை பெற்ற பின்னர் அது சிங்கப்பூரை விடப் பலமுள்ள நாடாக விளங்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை " இவ்வாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனக்கு அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய தமிழேந்தல் மா.க. ஈழவேந்தன் பலத்த கைதட்டலுக்கு இடையே குறிப்பிட்டார்.

இந்த இரவு விருந்து கடந்த செப்தெம்பர் 22 (சனிக்கிழமை) மாலை பொபி விருந்து மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிகள் தமிழ்த் தாய் வணக்கத்துடன் தொடங்கியது. தமிழ்த் தாய் வணக்கத்தை செல்விகள் அபிராமி தங்கவேலு மற்றும் நிலா தங்கவேலு பாடினார்கள்.

அடுத்து தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இளைய இனிய உயிரை ஈகை செய்த மாவீரர்கள் நினைவாகவும் இந்திய - ஸ்ரீலங்கா அரசுகளின் பயங்கரவாதத்துக்குப் பலியான பொதுமக்கள் நினைவாகவும் கடற்கோளினால் காவு கொள்ளப்பட்ட பொதுமக்கள் நினைவாகவும் தமிழ்மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழ் சான்றோர் நினைவாகவும் சிறு பொழுது அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

திரு.ஈழவேந்தன் மேலும் பேசுகையில் "அம்மா அப்பா என்ற அழகான சொற்கள் தமிழில் இருக்க டடி, மமி என்று எங்கள் பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையரைக் கூப்பிடுகின்றன. மமி என்றால் செத்த பிணம். எகிப்தில் இறந்த பின்னர் பதனிடப்பட்டு வைத்த அரசர்களது பிணங்களை மமி என்று அழைக்கிறார்கள். அதை ஏன் நமது குழந்தைகள் சொல்ல வேண்டும்?

தமிழ்க் குழந்தைகளின் பெயர்கள் கூட சுரேஷ், கணேஷ், டினேஷ், மகேஷ் என ஷ் இல் முடிவடைகின்றன. சொல் முதல் வராத எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் டில்ஷான், டில்ஷி என்;ற பெயர்களைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பது விளங்கவில்லை. "

தொடர்ந்து திருமதி சரோசா ஜெயரத்தினம் அவர்களது தமிழிசை இடம்பெற்றது. உயிரே தமிழே வணக்கம், பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும், தாமரை பூத்த தடாகமடி, என்று மடியும் எங்கள் சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் போன்ற பாடல்களைப் பாடி அவையோரை மகிழ்வித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழேந்தல் ஈழவேந்தனின் சிறப்புரை இடம்பெற்றது. அவரை தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் அறிமுகம் செய்து வைத்தார்.

நக்கீரன் பேசும் போது "மூன்று இந்தியப் பிரதமர்களை (இந்திரா காந்தி, பி.வி.நரசிம்மராவ், வி.பி. சிங்) ஆகியோரைச் சந்தித்துப் பேசிய ஒரே அரசியல்வாதி ஈழவேந்தன" என்றார்.

தமிழிசை பாடிய திருமதி சரோசா ஜெயரத்தினம், மிருதங்கம் வாசித்த கவுரி பாபு, வயலின் வாசித்த வனஜா இராஜ்குமார் ஆகியோருக்கு நினைவுப் பரிசும் பொற்கிழியம் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து வருகை தந்த அரிமாவளவன் அடிகளாருக்கு திரு. ஈழவேந்தன் நினைவுப் பரிசை வழங்கிப் பெருமைப் படுத்தினார்.

அரிமாவளவன் பேசும் போது "சங்ககாலத்துக்குப் பின்னர் தமிழகத்தைத் தமிழர்கள் ஆளவில்லை. நாடு சுதந்திரம் பெறு முன்னரும் பின்னரும் ஆட்சியில் இருந்த 21 தலைமை அமைச்சர்களில் நான்கு பேரே தமிழர்களாக இருந்தனர். மற்றவர்கள் கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் ஆவர். அந்த நான்கு பேர்கள் பி.டி.ராசன், காமராசர், பக்தவச்சலம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்" என்றார்.

விழா ஒழுங்குகளை முழக்கம் ஆசிரியர் திரு செய்திருந்தார். நூற்றுக்கும் அதிகமான உணர்வாளர்கள் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விழா நிகழ்ச்சிகளை செல்வி நிரோசிகா ஆனந்தராசா தொகுத்து வழங்கினார்.

இரவு விருந்துடன் விழா இனிது நிறைவேறியது.

- சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.