Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருள்கள் அழிப்பு -(ஆதவன்)

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட சான்றுப் பொருள்கள் வவுனியா மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டன.

இவற்றின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுபரப்பட்ட அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7 ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களும், கிருமிநாசினிகளும் இவ்வாறு அழிக்கப்பட்டன.

இவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை உடைமையில் வைத்திருந்த நபர்களுக்கு நீதிமன்றம் ஒன்றரை இலட்சம் ரூபா தண்டம் விதித்திருந்தது.

இந்தச் சான்றுப்பொருள்கள் நேற்று வவுனியா, பம்பைமடுவில் வவுனியா மேலதிக நீதிவான் ஜெ.சுபாஜினி மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைச் செயலாளர் விமலவேணி நிசங்க, சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. (ஏ)

https://newuthayan.com/article/4_கோடி_ரூபா_பெறுமதியான_உணவுப்பொருள்கள்_அழிப்பு 

 

அழிப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாமே 

  • கருத்துக்கள உறவுகள்

இவை என்ன கஞ்சாவா அழிப்பதற்கு ........சங்கக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகித்திருக்கலாம்......!  😴

  • கருத்துக்கள உறவுகள்

4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு!

Published By: VISHNU   08 FEB, 2024 | 01:44 AM

image

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

IMG_20240207_163022.jpg

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது. 

IMG_20240207_161123.jpg

குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது. அவற்றை உடைமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது,  

IMG_20240207_155028.jpg

இந்நிலையில் வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க, சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.

IMG_20240207_160715.jpg

IMG_20240207_155731.jpg

IMG_20240207_154118.jpg

https://www.virakesari.lk/article/175850

  • கருத்துக்கள உறவுகள்

இவை தரமானவை என்றால்.. அரச கூட்டுத்தாபனங்கள் ஊடாக மக்களுக்கு விற்கப்படலாமே. எதற்கு வீணா அழிக்கனும்..???! நீதிபதிகள்.. சட்ட அமுலாக்கம் பற்றி மட்டும் சிந்திக்காமல்.. சட்டத்தோடு நாட்டு மக்களின் நலன் குறித்தும் சிந்திக்கலாமே.

யாழில் தொடங்கப்பட்ட பண்ணை படகுச் சேவை.. ஆரிய குளம் படகுச் சேவை.. இப்படி எதுவுமே நடைமுறையில் இல்லை. பல கோடி ரூபா செலவு. ஒரு வருமானமும் இல்லை.. எந்த திட்டமும் நீண்டு நிலைப்பதாகவும் இல்லை..???! மக்களின் பணம் இப்படி விரையமாவது.. கேவலம். ஆள் மாறி ஆள் மாறி அதிகாரிகளும்.. அரசியல்வாதிகளும் பதவிக்கு வந்து போகினம்.. ஆனால் எந்த திட்டங்களும் உருப்படியாக இல்லை. 

இவர்களை விட... ரில்கோ.. போன்ற தனியார் நல்லாச் செய்யினம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.