Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

damithFebruary 12, 2024
16-1-2.jpg

பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (11) முடிவடைந்த நிலையில், சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பான்மையாக 264 ஆசனங்களில் 101 இடங்களை வென்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று 60 மணி நேரத்திற்குப் பின்னரே இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தாமதம் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

இதில் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீபின் கட்சி பாராளுமன்றத்தில் மிகப்பெரிய ஒற்றை கட்சியாக 75 இடங்களை வென்றுள்ளது.

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை வெல்லாத நிலையில் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு மற்றக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக நவாஸ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு வரை இறுதி முடிவு வெளியாகாதது தொடர்பில் தேசிய அளவில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரிக்கே இன்சாப் கட்சி எச்சரிதுள்ளது. சிறு சிறு அர்ப்பாட்டங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன. எனினும் சட்டவிரோதமான ஒன்றுகூடல்கள் ஒடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பொலிஸ் எச்சரித்துள்ளது.

தேர்தல் தினத்தில் கைபேசி இணையதள வசதிகள் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட தொடர்பாடல் பிரச்சினையே தேர்தல் முடிவு வெளியாவதற்கு தாமதம் ஏற்படக் காரணம் என்று பாகிஸ்தான் இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக இணைய வசதி முடக்கப்பட்டதாக நிர்வாகம் குறிப்பிட்டபோதும் உரிமைக் குழுக்கள் மற்றும் அமெரிக்க உட்பட வெளிநாட்டு அரசுகள் இந்த நடவடிக்கைக்கு கவலையை வெளியிட்டன.

எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் தஹ்ரிக்கே இன்சாப் கட்சி செயலாளர், தேர்தல் மோசடி தொடர்பில் குறிப்பிட்ட தேர்தல் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களில் சுமார் 93 பேர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் என்று நம்பப்படுகிறது. இம்ரான் கான் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவரது ஆதரவாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 70 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெறாதது அவர்கள் ஆட்சி அமைப்பதில் இருக்கும் பிரதிகூலமாக பார்க்கப்படுகிறது. இந்த போனஸ் ஆசனங்கள் கட்சிகளின் வாக்கு வீதத்திற்கு ஏற்ப பகிரப்படுகிறது. இதனால் நவாஸ் ஷரீப் கட்சி 20 போனஸ் ஆசனங்களை பெற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் 17 ஆசனங்களை வென்றுள்ள முத்தஹிதா குவாமி அமைப்புடன் உடன்பாடு ஒன்றை எட்டி இருப்பதாக நவாஸ் ஷரீப் கட்சி நேற்று அறிவித்தது. மறுபுறம் இம்ரான் கான் ஆதரவாளர்களும் ஆட்சி அமைப்பது பற்றி உறுதி அளித்துள்ளனர்.

இதற்கிடையே கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க வெண்டும் என்று இராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் வலியுறுத்தியுள்ளார். எனினும் நவாஸ் ஷரீபுக்கு பலம்மிக்க இராணுவத்தின் ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
 

 

https://www.thinakaran.lk/2024/02/12/world/41780/பாகிஸ்தானில்-ஆட்சி-அமைப/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு!

adminFebruary 14, 2024
Pakistan-election.jpg

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சிகள் ஆட்சி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு நவாப் ஷெரீப்பின் கட்சிக்கு தேவையான ஆதரவை வழங்குவதாகக் பூட்டோவின் கட்சி கூறியிருந்தது.

தேர்தலில் நவாப் ஷெரீப்பின் கட்சி 75 இடங்களிலும், பூட்டோவின் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

எனினும் தேர்தலில் தங்களுக்கு எதிராக மோசடி நடந்துள்ளதால், தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக இம்ரான் கானும் அவரது கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். அவர்களின் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

 

https://globaltamilnews.net/2024/200548/

  • கருத்துக்கள உறவுகள்

ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகிறார்

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி பெருபான்மை கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.

இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/291687

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.