Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
PUCSL-300x200.jpg

மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பிரேரணையை மீளாய்வு செய்து சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட பிரேரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இடம்பெற்ற மக்கள் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுமார் 40 பேர் தமது யோசனைகளை சமர்ப்பித்த நிலையில், இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட கட்டணக் குறைப்பு வீதத்தை விடவும் அதிக வீதத்தில் கட்டணக் குறைப்பை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விடயங்கள் அனைத்தையும் பரிசீலித்து, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை மீள்பரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைய மின்சார கட்டணத்தை 20 முதல் 25 வீதம் வரை குறைக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான மீளாய்வின் பிரகாரம் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, மின் கட்டணத்தை அடுத்த மாதத்திற்கு முன்னதாக திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/292264

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும்

kanchana-wijesekera-1-300x200.jpg

மின் கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் அவர்கள் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/292545

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டணத்தை குறைத்தால் ஏற்படப்போகும் சிக்கல்

உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டி வரும் என அதன் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேவையான பராமரிப்பை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றை நகர்த்திச் செல்லுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அந்த ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தலின்படி நாம் அதனை தயார் செய்தோம். பராமரிப்பு நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளோம். இவ்வாறான நிலைக்கு வந்தால் சரிந்த பின்னர் மீண்டும் கட்டியெழுப்பவது கடினம் என்றார்.

https://thinakkural.lk/article/292738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் : மின்கட்டண திருத்த யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்

21 FEB, 2024 | 07:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தவறான அரசியல் தீர்மானத்தை எடுத்து நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதா? அல்லது தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மின்கட்டணம் 18  சதவீதத்தால் குறைக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள். எரிபொருளுக்கான நீண்ட வரிசை, 18 மணி நேர மின்விநியோக துண்டிப்பு, எரிவாயு பற்றாக்குறை என அனைத்து பிரச்சினைகளும் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீது பொறுப்பாக்கப்பட்டது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால்  தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டது பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றது. அதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார். அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ?  என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள்  அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முறையான மறுசீரமைப்புக்களின் பின்னர் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை பிரதான உதாரணமாக சர்வதேச மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் சிறந்த மறுசீரமைப்புக்களுடன் முன்னேற்றமடைந்த  நாடுகளில் இலங்கை சிறந்த உதாரணமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. தவறான கொள்கையுடனான அரசியல் தீர்மானத்தை மீண்டும் எடுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதா? அல்லது தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா?  என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

மின்சார கட்டணம்  அதிகளவில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். மின்னுற்பத்தியின் செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதால் தான் மின்விநியோகம் இன்று சீராக முன்னெடுக்கப்படுகிறது. 2023 ஆகஸ்ட் மாதமளவில் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவும் ஆகவே அனல் மின்நிலையங்களுடனான மின்னுற்பத்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்  என்று துறைசார் தரப்பினர் குறிப்பிட்டனர். அதற்கமைவாகவே கடந்த ஒக்டோபர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

ஆனால் அதிஷ்டவசமாக கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றன. நீர்மின்னுற்பத்தியின் வீதம் உயர்வடைந்தது. ஆகவே மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த டிசெம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இதற்கமைய மின்கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முடியும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.

டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல், நீர்மின்னுற்பத்தி அதிகரிப்பு ஆகிய சாதகமான காரணிகளினால் மின்கட்டணத்தை அதிகளவான வீதத்தில் குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள். மின்சாரத்துறையின் முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. பலர் சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24  சதவீதத்தாலும் குறைக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை இன்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படும்.

இலங்கை மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். தேசிய வளங்களை பாதுகாப்போம் என்று போர்கொடி உயர்த்துபவர்கள் தமது சுய  இலாபத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளார்கள். ஆகவே உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/176986

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் வாரத்தில் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவை CEB நேற்று PUCSL க்கு சமர்ப்பித்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரேரணையை ஆராய்ந்து, தரவுகளின் உண்மைச் சரிபார்ப்பின் பின்னர், அடுத்த வாரத்திற்குள் CEBக்கு பரிந்துரைகளை வழங்குவதாக PUCSL தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

மத வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அதே அளவு குறைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/292961

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PUCSL மின் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆராய்கிறது

உத்தேச மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆலோசிக்க, எதிர்வரும் புதன்கிழமை (28) கூடவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இந்த திருத்தம் ஒக்டோபர் 2023 இல் அமுல்படுத்தப்பட்ட அதிகரிப்புக்குப் பிறகு வருகிறது.

இலங்கை மின்சார சபை (CEB) தற்போதைய கட்டணத்தை குறைக்க கோரி ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக PUCSL தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் நோக்கில் புதிய பிரேரணை உள்ளதாக CEB முன்னர் அறிவித்திருந்தது.

https://thinakkural.lk/article/293222

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரக் கட்டணத்தை 14 சத வீதத்தால் குறைக்க முன்மொழிவு!

Published By: VISHNU   28 FEB, 2024 | 08:26 PM

image

இலங்கை மின்சார சபை கடந்த 22ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்த பிரேரணையில் மின்சாரக் கட்டணத்தை 14 சத வீதத்தால் குறைக்க முன்மொழிந்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை 3.34 சதவீதம் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனையை மீளப் பெற்று இந்த புதிய திட்டத்தை மின்சார சபை முன்வைத்துள்ளது. 

எவ்வாறாயினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட அதே அளவான கட்டணத்தை குறைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/177548

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.