Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் விடுதலைப் புலிகளின் தங்கங்களைத் தேடி வேட்டை! 

20 FEB, 2024 | 10:38 AM
image

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு இடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தர்மபுரம்  பொலிஸார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை ( 19) குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (20) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வு முன்னெடுப்பதற்காக வீதிகள் மற்றும் குறித்த காணியினை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் பொலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் தடயவியல் பொலீசார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், கிராம அலுவலகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடிநின்ற நிலையில் உள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. 

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி இருந்தார்கள்.

குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப்புலிகளால் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் ஒரு அறையின் ஒருபகுதியில் நிலத்தில்  சுமார் 4 அடிவரை நேற்று தோண்டப்பட்டுள்ளது.

எனினும் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம்கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

IMG-20240219-WA0027__1_.jpg

IMG-20240219-WA0019.jpg

IMG-20240219-WA0051.jpg

https://www.virakesari.lk/article/176829

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை இரண்டு நாட்களாக தோண்டியும் ஏமாற்றம்

20 FEB, 2024 | 05:28 PM
image
 

முல்லைத்தீவு,  கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது நாளாக இன்றும் (20) தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

adad.gif

 

குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது.

 

fasf.gif

அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை இதனை விட காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது.

sfa.gif

இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

adqe.gif

https://www.virakesari.lk/article/176896

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி..

 

தண்ணியும் வந்திட்டுது! அப்பிடியே கிணறு கட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி..

 

இந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும் என்பது போல??

உங்களை தூக்க போகிறார்கள் கவனம் ராசா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும் என்பது போல??

உங்களை தூக்க போகிறார்கள் கவனம் ராசா.

தமிழீழ வைப்பகத்தில் இருந்து இலங்கை கைப்பற்றிய பெருந்தொகை தங்கம்! சபையில் அம்பலம்

யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை  அரசாங்கம் தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை  கைப்பற்றி கொண்டு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற  அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், எங்களது இனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இன அழிப்பை மேற்கொண்டது, இதற்கு எதிராக எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுத போராட்டம் ஒன்றை நடத்தினார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்  கிட்டத்தட்ட  20 வருடங்களாக ஒரு நடைமுறை அரசாங்கத்தை வடக்கு - கிழக்கில் நிறுவியிருந்தார்.

நாங்களும் யுத்தம் செய்தோம், நீங்களும் யுத்தம் செய்தீர்கள். ஆனால் நீங்கள் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்து விட்டீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

https://tamilwin.com/article/tamil-ealam-and-sri-lanka-government-war-1708423695

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தை வாங்கினவன், எடுத்தவன் எல்லாம் தங்கத்தோடு உலகம் முழுவதும் வசதி வாழ்க்கை வாழ்கிறான். இந்த பயித்தியங்கள் எல்லாம் தங்கம் தங்கம் எண்டு நிலத்தை பிளக்குதுகள். பாவம், எத்தனை நாளைக்குத்தான் இப்படியே நேர காலத்தை, பணத்தை வீணாக்க போகிறார்களோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து  இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து  இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்  

நீங்கள் போகும்போது கொண்டு போய் விடீர்கள் என்பது இந்த மடயர்களுக்கு எங்க விளங்க போகுது.

நீங்கள் சொல்லுவதை பார்க்கும்போது எம்மிடம் வாங்கிய நகைகள் ஒன்றும் இங்கு இல்லை என்பது நிச்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

அக்னியஷ்த்ரா அண்ணா,   நான் உங்கள் பெயரை அக்கினிஷன் என்று தவறாக ஒரு திரியில் எழுதிவிட்டேன் மன்னித்து கொள்ளவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.