Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி

Published By: DIGITAL DESK 3    27 FEB, 2024 | 10:43 AM

image

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழகத்தில் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடரப்பட்டு தோல்வியில் முடிந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்  கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, வியாழக்கிழமை (22)  அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்  மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன்  இணைந்து நாட்டுப்படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டுப்படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர்.

மேலும், படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை  மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை  நடத்தினர்.

நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும், படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை  கடத்தி வந்த போது  அதிகாரிகளை கண்டதும் தங்க கட்டிகள் அடங்கிய பொதியை கடலில் வீசியதையும் ஒப்புக்கொண்டனர்.

ஸ்கூபா வீரர்கள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்களை கொண்டு தங்கத்தை கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்தனர்.

தங்கம் கிடைக்காததால் கேரளாவில் இருந்து  வரவழைக்கப்பட்ட கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி தொடர்ந்து தேடினர்.

இருப்பினும், தங்கம் குறித்து எந்தவிதமான தகவல் கிடைக்காததால் தேடும் பணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குப் பின்பு நேற்று மாலை கைவிட்டனர்.

மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த  இருவரிடமும் எழுத்துபூர்வமாக  எழுதி வாங்கி கொண்டு படகுடன் திருப்பி அனுப்பினர்.

வேதாளை, மறைக்காயர்பட்டினம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில்  மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,  நாட்டுபடகு  மீனவர்கள் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களால் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177398

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.