Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   03 MAR, 2024 | 12:07 PM

image

காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

GHsM1PmWQAAMJdH.jpg

ஜோர்தான் விமானப்படையுடன்  இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.

GHsM1PuWEAAg_2b.jpg

சி130 ரக விமானங்கள் 38000 உணவுப்பொதிகளை காசாவிற்குள் பரசூட் மூலம் வீசின என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரான்ஸ் எகிப்து ஜோர்தான் ஆகிய நாடுகள் முன்னர் காசாவின் மீது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனினும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்தடவை.

GHsM1PfXwAAyqV1.jpg

வியாழக்கிழமை இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு காசாவில் காணப்படும் மிகமோசமான மனிதாபிமான நிலை காரணமாக அந்த பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை தொடர்ந்து பேணவேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியுள்ளது என பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177790

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மக்களுக்கு வான்வழியாக நிவாரண பொருட்களை அமெரிக்கா அனுப்பியது

6-2.jpg

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் இராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் இராணுவம் சம்மதம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே, காசாவில் அமெரிக்க இராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா இராணுவம் வான் வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொதிகளை அனுப்பியது.

https://thinakkural.lk/article/294272

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் பரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 10:40 AM

image
 

இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காஸாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காஸாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130க்கும் மேற்பட்டோர் காஸாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காஸா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஸா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐ.நா. மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காஸாவுக்கு லொறிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், பணய கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் காஸாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, காஸாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன.

இந்நிலையில், காஸா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காஸா சிட்டியின் ஷதி அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது, அமெரிக்க விமானப்படை விமானங்கள் நிவாரண பொருட்களை வீசின. பரசூட் மூலம் நிவாரண பொருட்கள் காஸாவில் தரையிறங்கின. அப்போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

பரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காஸா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

https://www.virakesari.lk/article/178300

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் விழுந்த உதவிப் பொருட்களை மீட்க முயன்ற 12 பேர் பலி - காசாவில் தொடரும் துயரம்

Published By: RAJEEBAN   27 MAR, 2024 | 12:18 PM

image

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப் பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் ஆறுமாத இராணுவ நடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ளது என்ற அச்சத்தின் மத்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

gaza_beach3.jpg

வடகாசாவில் உள்ள பென்லகியா கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும் அதன் பின்னர் ஆழமான நீரில் பொதுமக்கள் காணப்படுவதையும் பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தாடியுடன் காணப்படும்  இளம்வயது நபர் ஒருவரின் உடல் கடலில் இருந்து மீட்கப்படுவதையும் ஆனால் அவரின் கண்களில் அசைவில்லாததையும் நபர் ஒருவர் அவரை காப்பாற்ற முயல்வதையும் அவர் இறந்துவிட்டார் என யாரோ தெரிவிப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது.

அவர் தனது பிள்ளைகளிற்கு உணவை பெற்றுக்கொள்வதற்காக கடலுக்குள் நீந்தி சென்றார் அவர் தியாகியாக மாறிவிட்டார் என கடற்கரையில் காணப்படும் ஒருவர் தெரிவிப்பதை வீடியோ காண்பித்துள்ளது.

அவர்கள் தரைவழி ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் ஏன் இப்படி செய்கின்றார்கள் என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.

gaza_beach1.jpg

18பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வீசியதாக தெரிவித்துள்ள பென்டகன் பரசூட் இயங்காததால் அவை  கடலிற்குள் விழுந்தன என தெரிவித்துள்ளது.

காசாவில் சிலர் களைகளை உண்பதற்கும் விலங்குகளின் உணவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை உண்பதற்குமான  முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரிதாபமான நிலையில் அங்கு மனிதாபிமான பொருட்கள் விநியோகத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையாகியுள்ளது.

gaza_beach.jpg

https://www.virakesari.lk/article/179813

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்திய விமானங்கள் பருப்பு மூட்டையை வீசியது நினைவிற்கு வந்து தொலைக்கிறது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.