Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 MAR, 2024 | 10:44 AM
image
 

சுகாதார அமைச்சின் தேசிய தொழுநோய் அறிக்கையின்படி  , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் படி ,2023 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 259  தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 116 தொழு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . 

2019 ஆம் ஆண்டு  1,660 தொழுநோயாளிகளும், 2020 ஆம் ஆண்டு  1,213 நோயாளிகளும், 2021 ஆம் ஆண்டு 1,026 தொழுநோயாளிகளும், 2022 ஆண்டு  1,401 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/178340

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம்; 10 சதவீதமானோர் சிறுவர்கள்

Published By: Vishnu

23 Jan, 2026 | 04:36 AM

image

(செ.சுபதர்ஷனி)

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு 10 ஆயிரம் பேரிலும் ஒருவர் தொழுநோயாளியாகக் காணப்படுகின்றார். அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 சதவீதமானோர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் சமூக வைத்திய நிபுணர் யசோதா வீரசேகர தெரிவித்தார்.

சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தொழுநோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச தொழுநோய் தினமாகும். தொழுநோய் இன்னும் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை.

கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 சதவீதமானோர், அதாவது 123 பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 8 சதவீதமானோர் நோயின் நாட்பட்ட நிலையில் அங்கவீணர்களாக அல்லது உடல் பலவீனமடைந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

தொற்றுக்குள்ளான ஒருவரிடம் நோய் தாமதமாகக் கண்டறியப்படும்போது, அவரிடமிருந்து ஏனையவர்களுக்கும் நோய் பரவுகிறது. நாட்டில் பரவி வரும் இந்தத் தொற்றைத் தடுக்கப் புதிய நோயாளர்களை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தொற்றாளருடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகும் குடும்பத்தினர், அயலவர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களே இத்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தொழுநோய் தொடர்பாகச் சமூகத்தில் நிலவி வரும் தவறான புரிதல்கள் காரணமாக, தொற்றாளர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நோயாளர்கள் தயக்கங்களை விடுத்துத் தாமாக முன்வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றார்.

இதேவேளை, சமூக வைத்திய நிபுணர் திலினி சிறிவர்தன குறிப்பிடுகையில்,

தொழுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் சருமத்தை மாத்திரமல்லாது நரம்பு மண்டலத்தையும் பாதிப்பதால், நோயின் நாட்பட்ட நிலையில் உடல் பலவீனமடைந்து நோயாளர்கள் அங்கவீனர்களாகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர்.

தொழுநோயால் ஒருவர் உயிரிழப்பதில்லை என்றாலும், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கும் மன உளைச்சலுக்கும் தள்ளப்படுகின்றனர்.

இலங்கையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய 5 மாவட்டங்களிலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/236744

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.