Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும்.

March 26, 2024

( வி.ரி. சகாதேவராஜா)  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது ஆர்ப்பாட்டம் நடாத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாவிடின் குறித்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்பட நேரிடலாம்.

 இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர்  டாக்டர் அன்பாஸ்பாறூக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்..

 இலங்கையில் வைத்தியர்களுக்கு போதுமான ஊதியம் பாதுகாப்பின்மை காரணமாக பலர் வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள் . இந்த சூழலில் திருக்கோவிலில் கடந்த 11ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் 17 வயது மரதனோட்ட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார் .அதனையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது சீருடை அணிந்த மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தினார்கள். பாடசாலை நேரத்தில் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா?  பொதுமக்கள் பின்னால் அரசியல்வாதிகள் இருந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் எமது வைத்தியர்களை விலக்கி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தோம் . இதனால் கடந்த இரு வாரங்களாக வைத்திய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதில்  ஒருவித அசமந்த போக்கு இழுத்தடிப்பு செய்கிறது.இன்னமும் அங்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது.

 இந்த நிலை தொடர்ந்தால் இந்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படக்கூடிய அபாயமும் இருக்கின்றது. இதனால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் .

இருந்த பொழுதிலும் எமது பாதுகாப்பு கருதி இன்றாவது  அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்முனை பிராந்திய சுகாதார வைத்தியசாலை உட்பட்ட வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கின்றோம் என்றார்.
 

https://www.supeedsam.com/198320/

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் வைத்தியசாலை நாளை முதல் வழமை போன்று செயற்படும்

thirukkovil.jpg

கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் நாளை (28) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி அம்பாறை – திருக்கோவிலிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகவீனமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்தார். இதனையடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்மித்து இடம்பெற்ற எதிர்ப்பினையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது.

வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்தவர்களும் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/297347

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.

March 28, 2024

(கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர்.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

https://www.supeedsam.com/198438/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.