Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" 
[பாடல் - 1 / First poem of  my own eulogy / உயிர்  எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]


"அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக    
அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக   
அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில்   
அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" 


"ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே
ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே 
ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே 
ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"


"இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் 
இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே 
இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே 
இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"


"ஈடணம் விரும்பா சாதாரண மகனே   
ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே    
ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் 
ஈமத்தாடி குடி கொண்ட  சுடலையில்?" 


"உலகத்தில் பரந்து வாழும் பலரின் 
உண்மை இல்லா பற்றில் பாசத்தில் 
உடன்பாட்டிற்கு வர முடியாமல் 
உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"


"ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல்    
ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே 
ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே 
ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"


"எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து   
எழுதுகோல் எடுத்து உலகை காட்டி  
எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் 
என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?" 


"ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல்  
ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே 
ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே  
ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?" 


"ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி 
ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து 
ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே 
ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"


"ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து     
ஒழிக்காமல் வெளிப்படையாக  நடவடிக்கை எடுத்து 
ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற   
ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!" 


"ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு 
ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே 
ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை 
ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"


"ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே
ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே 
ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே
ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஈடணம் - புகழ்
ஈடிகை - எழுதுகோல்
ஈமத்தாடி - சிவன்
உணக்கம் - உலர்ந்ததன்மை
ஊறு - இடையூறு
ஊனம் - உடல் குறை, இயலாமை
எய்யாமை - அறியாமை
ஏகாகாரம் - சீரான முறை
ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு 
ஏகாந்தம் - தனிமை
ஐங்கணைக்கிழவன் - மன்மதன்.
ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, 
காமவெறியின்மை, பொய்யாமை,  கள்ளுண்ணாமை
ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன்
ஓகை - உவகை, மகிழ்ச்சி
ஔவியம் - பொறாமை, அழுக்காறு
ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் 
உற்பத்தியாயிற்றென்று கூறுவோன்
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்

Edited by kandiah Thillaivinayagalingam

  • kandiah Thillaivinayagalingam changed the title to "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"  [பாடல் - 1]
  • கருத்துக்கள உறவுகள்

உயிரெழுத்துக்களிலேயே கவிதை எழுதி அசத்திவிட்டீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.